Thursday, January 21, 2010

முடிவுக்கு வந்த “ புழுதி நெல் சாகுபடி”

ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு. குறள் 1038


மேலே இருக்கும் குறள் எங்களது புழுதிநெல் சாகுபடிக்கு 100% பொருந்தியது. மிகச்செழிப்பாக வந்த நெற்கதிர்களை தேசிய பறவை மயில் முழுவதுமாக உணவாக்கிக் கொண்டது என்பதுதான் நிதர்சனமான உண்மை. மாதிரி சாகுபடிக்கு கொடுத்த விலை கூடுதல்தான் இருந்தாலும் கற்றுக் கொண்ட அனுபவம் நிறைய உள்ளது. பயிர் பாதுகாப்பு என்பது எவ்வளவு முக்கியமானது ?

மிருகங்களுக்கு உயிர்வேலி, மின்வேலி, சுற்றி குழியெடுத்தல் என்று செய்யலாம் பறவைகளுக்கு ? அதுவும் தேசீயப் பறவைக்கு ? ஆலோசனை தேவை.

சென்ற 3 ஆண்டுகளாகத்தான் மயில்கள் இங்கு (சற்று மலைபிரதேசம்) சமவெளி பகுதியிலிருந்து வந்துள்ளன. ஆனால் இந்த பகுதியிலுள்ள யானை போன்ற மிருகங்கள் சமவெளி பகுதிக்கு சென்று பயிர் நாசத்தில் இறங்கியுள்ளன. ஆராயப்பட வேண்டிய இட மாற்றம்.

மொத்தத்தில் பயிர் பாதுகாப்பு (மயிலிடமிருந்து மட்டும்) திருமதி. வாஞ்சி பாட்டி போன்று கொடுத்தால் சிறப்பான பயிர் “ புழுதி நெல்.”
நன்றாக தூர்கள் கிளைத்து வந்தது.
நெற்கதிர்களும் நன்கு வந்தது.
ஆனால் மிஞ்சியது என்னவோ வைக்கோல் மட்டும் தான். உபயம் மயில்.
பாதுகாப்பு தந்து அறுவடையில் மகனுடன் திருமதி. வாஞ்சி பாட்டி.
காவலுடன் கூடியஅயராத உழைப்பு.
நெல் மணிகள்.

பழைய பதிவுகளைக் காண.

http://maravalam.blogspot.com/2009/02/blog-post.htmlhttp://maravalam.blogspot.com/2009/09/blog-post_19.html
http://maravalam.blogspot.com/2009/12/blog-post_31.html

No comments: