Tuesday, July 24, 2007

தமிழகத்தில் அங்கக சான்றளிப்புத் துறை

இயற்கை வேளாண்மையில் சந்தை முக்கியமானது. சந்தைக்குத் தேவை சான்றளிப்பு. பொதுவாக
சான்றளிப்பு தனியார் வசம் இருப்பதால் அதைப் பெற அதிகம் செலவு செய்யவேண்டியுள்ளது. தற்சமயம் தமிழ்நாட்டில் அங்கக சான்றளிப்பு மத்திய அரசின் தேசிய அங்கக வேளாண்மை செயல் திட்டத்தின் படி அபீடா நிறுவன வழிகாட்டுதல் மற்றும் அங்கீகாரத்தின் மூலம் செயல்பட உள்ளது.

இந்த வலைப் பதிவு இயற்கை வேளாண்மை செய்யும் உழவர்களுக்கும்,பதன் செய்வோருக்கும்.விற்பனை செய்வோருக்கும், மற்றும் வணிக நிறுவனங்களுக்கும் தகவலாகச் சென்று பயனடைய வேண்டும் என்ற எண்ணத்துடன் பதியப்படுகிறது.

மேலும் விபரம் பெற கீழ்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்:

இயக்குநர்,
அங்கக சான்றளிப்புத் துறை,
1424 எ, தடாகம் சாலை,
ஜிசிடி போஸ்ட்
கோவை- 641 013

தொலைபேசி எண் : 0422-2432984.

புகைப்படம்



என் வழி , தனி வழி !!


















முள்ளும், மலரும்




















உடை மாற்றிவிட்டேன்!!

Saturday, July 21, 2007

இழப்பும், அருமையும்.

எவ்வளவு இழந்திருக்கிறோம் என்பதை ஒரு பொருள் நம்மை அடையும் வரை உணர்வதில்லை
- அதே போன்று
ஒரு பொருளை இழக்கும் வரை அதன் அருமையை நாம் உணர்வதில்லை.


60 ஆம் ஆண்டுகளின் மத்தியில் இஸ்ரேல் நாடு ''சொட்டுநீர் ''பாசனத்தை உலகிற்கு
அறிமுகப்படுத்தியது. இந்த 40 ஆண்டுகளில் நாம் எவ்வளவு இழந்திருக்கிறோம் என்பதை தரும்புரி மாவட்ட துல்லிய வேளாண்மை (PRECISION FARMING) செய்யும்
உழவர்களை கேட்டால் விரிவாக கூறுவார்கள். நல்ல விளைச்சல் அதேசமயம் கூட்டுறவு முறையில் உற்பத்தி மற்றும் சந்தை. எனவே கேரளா, கர்னாடகா மாநில சந்தைகள் இன்று இவர்களை நோக்கி வருகிறது. ஒரு காலத்தில் வறண்ட மாவட்டமாக இருந்தது இன்று மற்ற மாவட்டங்களுக்கு மட்டுமல்ல மற்ற மாநிலங்களுக்கும் முன்னோடியாக உள்ளது.


அதே 60 ஆம் ஆண்டுகளின் மத்தியில் ''பசுமை புரட்சி '' அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் வீச்சு இந்த 40 ஆண்டுகளில் நாம் எவ்வளவு இழந்திருக்கிறோம் என்பதை விவசாயிகளின் தற்கொலைகளும், கிராம மக்கள் நகரங்களை நோக்கி வருவதும் உறுதி செய்யும். அதே போன்று நம் நண்பர்களான மரங்கள்,கால்நடைகள், மண்புழு, பறவைகள், தேனீ, நன்மை தரும்நுண்ணுயிர்கள், அரியமருத்துவ தாவரங்கள் ஆகியவற்றின் அருமைகளை எவ்வளவு இழந்திருக்கிறோம் என்பதை பெருகிவரும் மருந்துக்கடைகளும், மருத்துவமனைகளும் உறுதி செய்யும்.

நடந்தவைகளை பாடமாகக் கொண்டு நண்பர்களை இணைத்து துல்லிய இயற்கை வேளாண்மை
செய்வோம்.

Friday, July 20, 2007

புகைப்படம்.


அழகாக இருக்கிறேனா ?









பாசம்

Monday, July 16, 2007

மழைநீர் சேமிப்பின் பயன்கள்.

1. நிலத்தடி நீர் மட்டம் உயர்கிறது.

2. நீர் பற்றாகுறை குறைகிறது.

3. நீரின் கார அமில (pH value) தன்மை சமன் செய்யப்படுகிறது.

4. விவசாய நிலங்களில் மண்அரிப்பைதடுக்கிறது.

5. நிலத்தடி நீரை மேலே கொண்டு வரும் செலவு குறைகிறது

6. மண்ணின் ஈரத்தன்மை காப்பாற்றப்படுவதால் விவசாயம் தடையின்றி நடைபெற உதவுகிறது.

7. மழைநீர் சேமிப்பு பகுதியின் அருகிலுள்ள மரங்கள் மிக விரைவில் வளர்கின்றன

8. நகர் புறங்களில் வெள்ளபெருக்கு ஏற்படாமல் காத்து சாலை போக்குவரத்தை தடையின்றி நடைபெற உதவுகிறது.

9. நகர் புறங்களில் நிறைய இடங்களில் நீர் தேங்குவதை தடுத்து நோய்கள் பரவுவதை தடுக்கின்றது.

10. பாலைவனபகுதிகள், தீவுகளில் மழைநீர் சேமிப்பு குடிநீருக்கு நல்ல ஆதாரம்.

11. குறைந்த செலவில் எளிய பராமரிப்பில் கிடைக்கும் சிறந்த நீராதாரம்.

12. வேலை வாய்ப்பை உருவாக்குகிறது.Click

விவசாய நிலங்களில் மழைநீர் சேமிப்பு பற்றிய சிறு படத்தை இங்கே காணுங்கள்

Thursday, July 12, 2007

பரிசும், பாடமும்.

பரிசும், பாடமும்.



1994 ஆம் ஆண்டு திரு. கேவின் கார்டரால் ''சூடான்'' நாட்டு பஞ்சத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம். அவருக்கு புகழ்மிக்க '' புலியட்சர் '' பரிசை பெற்று தந்த உலகை உலுக்கிய புகைப்படம். ஐ.நா. சபையின் உணவு கூடத்தை நோக்கி செல்லும் குழந்தை , குழந்தையின் உயிர் பிரிவதற்காக காத்திருக்கும் கழுகு. சோகம் என்னவென்றால் 3 மாதங்கள் கழித்து மன உளச்சல் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டார். காரணம் அக்குழந்தையின் முடிவு பற்றி கேவின் கார்டருக்கும் தெரியவில்லை. இந்த புகைப்படத்தை எடுத்தவுடன் வந்த வேலை முடிந்ததென்று சென்றுவிட்டார்.

இப்புகைப்படத்தை வலைப்பதிவிலிடக் காரணம் நாமும் கேவின் கார்டரைப் போல் நமது வேலையில் மட்டும் கவனம் செலுத்தாமல் '' புவி வெப்பம்'' என்னும் கழுகிடமிருந்து இந்த புவிக் குழந்தையைக் காப்பாற்றுவோம். மரம்நடுவோம், மழைபெறுவோம் அதனால் வளம்பெறுவோம்.

இந்த புகைப்படத்தை பார்க்கும்போதெல்லாம் நான் மரங்களுக்கும், தற்போது மரங்களை வளர்க்க உதவும் நண்பர்களுக்கும் நன்றி கூறுகிறேன். நண்பர்களுக்கு, விவசாயத்தின் (உணவின்) ஆதாரம் மரங்கள் எனவே மரங்களை பாதுகாத்து பாராமரிப்பது நமது கடமை. வேலை, பொழுதுபோக்கு என்று மட்டுமேயிராமல் மகிழ்ச்சியுடன் மரங்களையும் நடுவோம்.

Tuesday, July 10, 2007

சோற்றுக் கற்றாழை

தெரிந்தால் சொல்லுங்களேன்

என்னிடமுள்ள சோற்றுக் கற்றாழையின் படங்கள் இவை.

கற்றாழை வாசமும் இல்லை.

சாப்பிட்டால் மிக மிக லேசான கசப்பு சுவை.

உடைத்த இடத்திலிருந்து சிவப்பு நிற திரவம் வடிகிறது.

சிறந்த மருந்து கற்றாழை என்கிறார்கள்.

தெரிந்தால் சொல்லுங்களேன்.


Saturday, July 7, 2007

உணவா ? எரிபொருளா ?

இன்று எல்லா ஊடகங்களிலும் பரவலாக புவி வெப்பம், சுற்றுப்புற சூழல் மாசுபாடு, பயோ-டீசல் என்று விவாதம் தொடர் கதையாக உள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் நடந்த சண்டைகளில் அதிகம் பெட்ரொலிய எரிசக்திக்கு நடந்தவையே. பெட்ரொலிய எரிசக்தி குறைந்து வருவதும், வாகன உற்பத்தி அதிகரித்து வருவதும், க்யோட்டோ (Kyoto)ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதும் வளர்ந்த நாடுகளை சிக்கலில் ஆழ்த்தியுள்ளது. உண்மையில் வளர்ந்த நாடுகள் தங்களின் பெட்ரொலிய எரிசக்திப் பயன்பாட்டின் அளவைக் குறைத்துக் கொள்வதற்கு பதிலாக பயோ-டீசல், பயோ எத்தனால் என்ற மாயையைத் தோற்றுவித்து சுகம் பெறுகின்றன. வளரும் நாடுகளோ இந்த தாவர எரிசக்தியை ஏற்றுமதிக்குரிய சந்தைப்பொருளாக பாவித்து ஆர்வம் காட்டிவருகின்றன. வளர்ந்த நாடுகள் விவசாயத்துக்கு அதிக மானியம் தந்து தங்களின் விவசாயிகளையும், விவசாயத்தையும் பாதுகாத்து உணவு உற்பத்தியில் தன்னிறைவும் உபரியும் இருக்கும்படி பார்த்துக்கொண்டு வளரும் நாடுகளில் மானியம் தருவதையும் தடுத்து உணவுப் பற்றாக்குறை ஏற்படும்போது அந்த வளர்ந்த நாடுகளை எதிர்பார்த்து வாழ வேண்டிய அவசியத்தையும் ஏற்படுத்துகின்றன. வளரும் நாடுகளில் காடுகளின் அழிவு காரணமாய் மழையின்மை,வேலையாட்கள் பற்றாக்குறை, சந்தைபடுத்துவதில் சிக்கல், பெருவணிக குழுமங்களின் சில்லறை வணிகம், தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல், நிலமதிப்பு உயர்வு,உள்நாட்டு போர் என விவசாயம் சிக்கலில் உள்ளபோது மேலும் சிக்கலை கொண்டு வருவதுதான் இந்த பயோ-டீசல், பயோ எத்தனால் உற்பத்தி.

அருகே உள்ள தகவல் உண்மையை கூறும்.கடந்த 15 ஆண்டுகளில் ஆப்பிக்கா 64 மில்லியன் ஹெக்டர்,தென் அமெரிக்கா 59 மில்லியன் ஹெக்டர் பரப்பு காடுகளை இழந்திருந்தால் கடந்த 200 ஆண்டுகளில் வளர்ந்த நாடுகள் எந்த அளவிற்கு அவைகளின் வளத்தை சுரண்டி அவர்களின் வாழ்கையை பாழடித்துள்ளது என்பதை மனதை பிழியும் கீழேயுள்ள படங்கள் கூறும். நாம் எதில் கவனம் செலுத்தப்போகறோம்? உணவா ? எரிபொருளா ?
நாம் பெட்ரொலிய எரிசக்திப் பயன்பாட்டின் அளவைக் குறைத்து காடுகளின் பரப்பை அதிகரித்து மழைநீர் பெற்று சிக்கனமாக பயன்படுத்தி தேவையான அளவிற்கு பயோ-டீசல், பயோ எத்தனால் உற்பத்தி செய்யது உணவுற்பத்தியில் தன்னிறைவு அடைவதில் அதிக கவனம் செலுத்துவோம். அதை விட்டு எரிபொருளுக்கு அதிக கவனம் செலுத்தினால் விழைவு மோசமாக இருக்கும்.