Wednesday, December 10, 2014

பாசுமதி இலை


தாவரவியல் பெயர் :  Pandanus amaryllifolius


‘பாசுமதி அரிசி” என்ற விலைமிக்க அரிசியை அதன் மணத்திற்காக விஷேச காலங்களில் ‘புலாவ்”,  பிரியாணி, தேங்காய் பால் சாதம்  போன்ற உணவு வகைகளை  சமைக்கும் போது உபயோகிப்போம். ஆனால் கிழக்காசிய நாடுகளில் பிரபலமாகவுள்ள ஒரு தாவரத்தின் இலை  பாசுமதி அரிசியின் மணத்தை சாதாரண அரிசிக்கு தரும் என்றால் வியப்பளிக்கலாம். தமிழில் "பாசுமதி இலை" என்றழைக்கப்படுறது, ஆனால் இன்னும் பிரபலமாகவில்லை. “பேன்டன்” (Pandan)என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த தாவரத்தின் குடும்பம் மிகப் பெரியது எனவே  Pandanus amaryllifolius என்ற தாவரவியல் பெயர் கொண்ட தாவரம் தான் இந்த பாசுமதி இலை. வெப்பமண்டல தாவரம்,  நிழல் பகுதியில் சிறப்பாக வளர்கிறது. எளிதாக வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கலாம்.

Monday, December 1, 2014

மணத்தக்காளி அல்லது சுக்குட்டிக் கீரை

சில வகை கீரைகள் நல்ல வேர் அமைப்பும் சற்று உறுதியான தண்டையும், விரைவாக வளரும் தன்மையை பெற்றிருப்பதால் மறுதாம்பு பயிர்களாக விரைவில் திரும்ப திரும்ப அறுவடைக்கு வருகின்றன. பராமரிப்பு குறைவதுடன் வளர்ப்பதும் எளிது.



சற்று கசப்புச் சுவையுடன் கூடிய மருத்துவ குணம் நிறைந்த மணத்தக்காளி உணவுபாதையை சீராக்குவதில் பெரும்பங்கு ஆற்றுகிறது. தண்டு, இலை, காய், பழம் என அனைத்து பாகங்களையும் உபயோகிக்கலாம். வாய் புண்ணிற்கும், அல்சர் என்னும் குடல் புண்ணிற்கும் அருமருந்து இந்த மணத்தக்காளி. மலச்சிக்கலை தவிர்க்க தண்டு மற்றும்  இலையை பொறியல் செய்து உண்ண வேண்டும்... வாய்நாற்றம்  உள்ளவர்கள் தினமும் இலையை மென்று வர வாய்நாற்றம் குறையும். குறிப்பாக பாட்டி வைத்தியத்தில் அல்சருக்கு தினமும் காலை உணவாக சிறிய வெங்காயம், பசுவெண்ணையுடன்  மணத்தக்காளிக் கீரையை நன்கு வதக்கி குறைந்த அளவு சாதத்துடன் அதிக அளவு பொறியலை தொடர்ந்து உண்டு வர விரைவில் குணம் பெறலாம். சில தோல் நோய்களுக்கு தொடர்ந்து இலைசாற்றை தடவி வர அவைகள் மறையும். மறுதாம்புப்  பயிர் என்பதால் வீட்டுத் தோட்டத்தில் கண்டிப்பாக வளர்க்க வேண்டிய கீரை,  வணிக ரீதியாகவும் இதனை பயிர் செய்யலாம். விதைகள் மூலம் உற்பத்தி செய்யலாம்.