Sunday, January 1, 2012

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.


Friday, December 30, 2011

5 ஆம் அறிவும் ‘பஜ்ஜியும்’


The belly rules the mind.  ~Spanish Proverb
வயிறு மனதை ஆள்கிறது ஸ்பெயின் நாட்டுப் பழமொழி
கண்களை மூடி தியானம்
உணவு கிடைத்துவிடும் என்ற எதிர்பார்ப்பு
 அண்மையில் குன்னூர் சென்றிருந்தேன். வழியில்  தேநீர் அருந்த நின்றோம். நண்பர் பஜ்ஜி சாப்பிட்டார். அருகிலிருந்த குரங்கிற்கும் கொடுத்தார். பஜ்ஜியை கைபற்றிய குரங்கு மெதுவாக வாழைக்காய் பகுதியை மாத்திரம் சாப்பிட்டுக் கொண்டு மாவுப் பகுதியை கீழே தூக்கி போட்டது.
உணவு கிடைத்த நிம்மதி
வாழ்க்காயை மாத்திரம் உண்ணும் திறமை    




தூக்கி எறியப்பட்ட மாவுப் பகுதி

 மிருகங்களின் ஆரோக்கிய சூட்சமம்  புரிந்தது. எது வேண்டாம் என்று அதற்குத் தெரிகிறது. மேற்கண்ட பழமொழி மனிதர்களுக்கு மட்டும் தான் போல் தெரிகிறது. மிருகங்களின் மனம் வயிற்றை ஆளுகிறது. மனிதன் சில பிராணிகளை தனது உணவு கொடுத்து பழக்கியிருந்தாலும் சிலவற்றை அவைகளிடத்தில் திணிக்க முடிவதில்லை. குறிப்பாக அவைகளின் கூடுகளைப் பாருங்கள் குறிப்பாக தேனீ பலகோடி ஆண்டுகளுக்குப் பின்னும் அதே ஆறுகோண வடிவம்தான். மிகச் சிறந்த சமூக வாழ்வியலைக் கொண்டது தேனீ. மனிதனிடத்தில் வயிறு மனத்தை ஆளுகிறது எனவே பேராசையுடன் செயல்பட்டு  தன்னைத்தானே அழித்துக் கொள்வதோடு மற்ற உயிரனங்களையும் அழிக்கிறான். 6 ஆம் அறிவைத்தான் கேட்கவேண்டும்.



Friday, November 25, 2011

தமிழக கடற்கரை கிராம மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.


அழியும் தருவாயில் இரயுமன்துறை கிராமம்
 வெட்டிவேர் உதவியுடன் பிரேசில் நாட்டின் சா போலோ மாநிலத்திலுள்ள பெர்டியோகா என்ற கடற்கரை குடியிருப்பு பகுதியை கடலரிப்பிலிருந்து காப்பாறும் பணியை பொறியாளார். லூயிஸ் லுக்கினா அவர்கள் விளக்கிய போது மனம் ஏனோ இரயுமன்துறை கிராமத்தை நினைத்து வருந்தியது. 
கடலரிப்பில்  'பெர்டியோகா' கடற்கரை
தென்னை நார் விரிப்பில் வெட்டிவேர் நடப்பட்டுள்ளது. வருடம் 2009
சற்று வளர்ந்த நிலையில் வெட்டிவேர்
நன்கு வளர்ந்த நிலையில் வெட்டிவேர்
சுவர் போன்ற அமைப்பில் வெட்டிவேர்.   பொறியாளார். லூயிஸ் லுக்கினா ICV-5   முடித்து சென்ற பின் 2011 நவம்பர்  மாதம் 4 தேதி வலையேற்றியது.
 தென்னைநாரில் செய்யப்படும் ஜியோ டெக்ஸ் (Geo Tex) (பொள்ளாச்சி இதற்கு பெயர் பெற்றது )  என்ற விரிப்பைப் பயன்படுத்தி வெட்டிவேரை நட்டு அவர்கள் கடலரிப்பிலிருந்து குடியிருப்புக்களை காப்பாற்றி இருப்பது மனதிற்கு மகிழ்ச்சியைத் தந்தது. முக்கிய பொருட்களான வெட்டிவேரும், தென்னைநாரும் நம்மிடம் இருந்தும் உபயோகிக்காமல் இருப்பது அறியாமையா ? அல்லது ???? முடிவு நம் கையில்தான் உள்ளது. வெட்டிவேர் பாமரனின் கையிலிருந்து பெரிய கம்பெனிகளின் கைக்கு மாறியிருப்பது நிச்சயம் மிக பெரிய மாறுதல்களை உலககெங்கும் ஏற்படுத்தும். ஆனால் நாம் அதிலிருந்து பாடம் கற்கப் போகிறோமா? காலம் தான் பதில் கூறவேண்டும்.