Saturday, March 31, 2012

புவி நேரம் (Earth Hour) 2012




ஒவ்வொரு வருடமும் இந்த நாளில் 1 மணிநேரம் விளக்கை அனைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மிக நல்ல விஷயம். ஆனால் மீண்டும் பழைய நிலைமைக்குத் திரும்பிவிடுகிறோம். குழந்தைகளுக்கு நாம் எதற்காக செய்கிறோம் என்று கூட தெரியாது. அவர்களின் முக்கிய டீவி நிகழ்ச்சியை பார்க்க முடியவில்லை என்ற ஆதங்கம் அவர்களுக்கு. அதற்கு பதிலாக வருடம் முழுவதும்  விழிப்புணர்வு ஏற்படும் வகையில் சிலமாற்றங்கள் செய்தால் வருடம் அல்ல வாழ்நாள் முழுவதும் பயன் தரும். உ.த. ஒவ்வொரு வருடமும் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லுமுன் அழகாக தங்கள் நோட்டு,பாட புத்தகங்களுக்கு அட்டையிட்டு லேபிள் ஒட்டுவார்கள்.  இன்றைய காலத்தில் அவைகள் பெரும்பாலும் கார்டூன் படங்கள் (விளம்பரம்), நடிகர்களின் படங்கள் இடம் பெற்றிருக்கின்றன. ஆனால் தாவரவியல், விலங்கியல் பெயர்களை அவர்கள் நினைவுகொள்ள கஷ்டப்படுகிறார்கள். அதேபோன்று மழலைப் பள்ளிகளில் பழம், காய்கறிகளின் படங்களை தனியாக ஒட்ட வைத்து கற்றுதரும் போது மனத்தில் பதிவு செய்யமுடிவதில்லை. அவர்கள் அனுதினமும் பார்க்கும் போது எளிதில் மனதில் பதிவு செய்து கொள்வார்கள். மொழி ஒரு பிரச்சனையாக இருந்தாலும் இதனை சிறப்பாக செயல்படுத்த முடியும். இன்னும் இரண்டு மாதங்கள் முழுமையாக இருக்கும் நிலையில் யாரேனும் முன்வந்தால் மகிழ்ச்சியாக இருக்கும்.

Thursday, March 22, 2012

பேரரசன் ஷாஜகான் (நீர் கிடைக்காமல்) சரணடைந்த வரலாறு.

இந்த வருட உலக நீர் நாள் அன்று தண்ணீரினால் நமது நாட்டில் ஏற்பட்ட வரலாற்று நிகழ்வு ஒன்றையும், அதே சமயம் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர் சேமிப்பை சிறப்பாக நடைமுறைப்படுத்தி  மக்களின் நீர்த் தேவையை  ஆட்சியாளர்கள் புரிந்து கொண்டு செயல்பட்டதையும்  உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
ஆக்ரா கோட்டை
ஆக்ரா கோட்டையிலிருந்து தாஜ்மகால்


ஆக்ரா கோட்டை அகழியுடன் கூடிய அழகுமிகு கோட்டை. பேரரசன் ஷாஜகான், மகன்  ஔரங்சீப் அவர்களால் இந்த கோட்டையில் சிறை வைக்கப்பட்டு தாஜ்மகாலை பார்த்தே இறந்ததாக சரித்திரம் கூறுகிறது. மழைநீர் சேமிப்பிற்கு சிறப்பான அமைப்புக்களை ஏற்படுத்தி அந்த காலத்திலேயே யமுனை ஆற்றிலிருந்து நீர் கொண்டுவரப்பட்டு மேல் நிலை தொட்டிகளில் நிரப்பி அவற்றிலிருந்து செயற்கை நீருற்றுக்கு நீர் சென்றதாக கல்வெட்டு கூறுகிறது. இன்றும் இந்த நீர்யேற்று முறை புதிர்தான். ஷாஜகான் ஆக்ரா கோட்டையில் இருந்தபோது யமுனை ஆற்றிலிருந்து வரும் நீரைத்தான் அருந்துவார். ஆற்று நீர் அந்த காலகட்டங்களில் குடிப்பதற்கு ஏற்றதாயிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மகனுடன் சண்டையிட்ட  போது அந்த நீர் வரும்  வழியை மகன் ஔரங்சீப் மறித்ததால் வேறு வழியின்றி  ஷாஜகான் ஜூன் 8 - 1658 வருடம் சரண்டைந்ததாக அங்குள்ள கல்வெட்டில் பார்த்தேன். உலக புகழ்மிக்க தாஜ்மகாலை கட்டிய பேரரசன் வீழ்ந்த வரலாற்றின் பின்னால் தண்ணீர்தான் இருக்கிறது என்றால் வியப்பாகத்தான் உள்ளது.
அழகிய தோட்டங்கள்
மழைநீர் சேமிப்புப் பாதை
மழைநீர் சேமிப்புப் பாதை
யமுனை ஆற்றிலிருந்து அகழிக்கு நீர் வரும் வழி
கோட்டையைச் சுற்றி அகழி

Shahi - hammam & water supply system (c. 1570-1658 A.D.)

The shahi- hammam, also called ghusl-khanah, was originally built by akbar and was renovated by shah jehan. It is a closed complex of octagonal halls and rooms, interconnected by corridors, with only a few jali openings on the river-side. The instrument room above the furnaces had two large deghs (pots) of brass and copper.clay and copper pipes, sunk mysteriously in the masonry walls, were conducted to other rooms some of which also had miniature tanks hidden in corners at dado-height the secret of this mechanism is not known to us today. Construction is in brick masonry but pavements and dados were originally finished in white marble. Walls were stuccoed and painted. Every room is connected by a hypocaust-system. A ventilator is provided at the apex of each cupola shaped domed ceiling. Some backyard quarters served the purpose of imperial toilet. Its mechanism shows that some sort of air-conditioning was worked and this was mainly used as a summer palace for conducting business of confidential nature, as foreign travellers have observed. It ranks among the finest hammams of the mughals.

There are three deep tanks on its roof. These were filled by the river-water, drawn by rehant (water-wheel) near the khizri or water-gate. From these overhead tanks, water was supplied to the fountains, water-falls and tanks of nagina-masjid, machchhi bhawan, shish-mahal ano- muth amman-burj through water-tight clay and copper pipes and open nalis. River water in mughal times was clean pure and fully potable. King shah jehan used it for drinking. Aurangzeb besieged the fort after the battle of samogarh and stopped its water supply from the river forcing the king to surrender on 8 june 1658 thereafter, aurangzeb secured the fortgates by additional barbicans

Wednesday, March 21, 2012

உலக வன நாள் -2012


வனங்களை வயலாக்கிய நாம் இன்று வயல்களை
வனமாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

சுற்றுச்சூழல் நன்மைகள் தவிர வணிக நோக்கிலும் மரங்களை வளர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பொதுவாக தமிழகம் மரம் சார்ந்த தொழில் மற்றும்  தொழிற்சாலைகளை (நெறிபடுத்தப்பட்ட Organized Sector ) கொண்டுள்ளது.  ஆனால் இவைகளுக்கான கச்சாப் பொருளான மரம் பெரிய அளவில் கிடைப்பதில்லை (உ..த ) தீக்குச்சிக்கான மரத்தை நாம் அண்டை மாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் சுமார் 80% அளவில் இறக்குமதி செய்கிறோம். ஆனால் நமக்கு சாதமான சூழ்நிலைஇருப்பதால் நாம் நன்கு மரம் வளர்த்த இயலும். வனபரப்பையும் அதிகரிக்க முடியும். அதற்கான சிறு அறிமுகமே இந்தப் பதிவு. பதிவின் சுருக்கம் கருதி தொடுப்புகள் அளித்திருக்கிறேன்.

தமிழகத்தில் வாய்ப்புக்ககள்.

காகிதம்
தமிழகத்தில் இரு தொழிற்சாலைகள் சிறப்பாக காகித உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. இரு தொழிற்சாலைகளுமே நாற்றுக்கள் கொடுப்பதிலிருந்து குறைந்தபட்ச விலை நிர்ணயத்துடன் வாங்கிக் கொள்கிறார்கள். இவைகள் தவிர  சிறுசிறு  நிறுவனங்கள் நிறைய உண்டு.

தமிழ்நாடு காகித ஆலை (TNPL)  கரூர் அருகே

சேஷாயி பேப்பர் அண்டு போர்ட்ஸ்
தொலைபேசி எண்கள் : (04288) 240221-240228

தீக்குச்சி தொழிற்சாலைகள்
தமிழகத்தின் சிறப்பு தீக்குச்சி தொழிற்சாலைகள் என்றால் மிகையில்லை. வங்கிக் கடனுடன் நாற்றுக்களும் தந்து மரங்களை வாங்கவும் செய்கிறார்கள் வாசன் நிறுவனம்.

எரிசக்தி (பயோ-மாஸ் எரிசக்தி )
கடந்த சில ஆண்டுகளாக மரம் மற்றும் விவசாயக் கழிவுகள் மூலம் மின் உற்பத்தி பரவலாக தொடங்கப்படுகிறது. இதுவரை 14 நிறுவனங்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள். தற்போதுள்ள மின்தட்டுப்பாட்டில்  தமிழகத்திற்கு மிகத் தேவையான துறையாக தோன்றுகிறது.

பயோ-டீசல்
மானியத்துடன் ஜெட்ரோபா என்னும் காட்டாமணுக்கு இந்தியாவில் பிரபலபடுத்தப்பட்டது. ஆனால் சிறப்பானதொரு வரவேற்பைப் பெறவில்லை என்று தோன்றுகிறது. ஆனால் புங்கன் மற்றும் புன்னை மரங்களிலிருந்து பெறப்படும் எண்ணெயும் பயோ-டீசலாக உபயோகிக்க முடியும் என்று வனத்துறையும், தனிநபர்களும் நிருபித்துள்ளனர். ஆனால் இத்துறை நெறிபடுத்தப்படவில்லை என்பது வருத்தம் அளிப்பதாக உள்ளது. நாட்டின் அந்நிய செலவாணி மிச்சப்படுத்தப்பட வேண்டுமானால் இத்துறை கவனிக்கப்பட வேண்டும்.

மரம் சாரா மற்ற வனப்பொருட்கள்
நெறிபடுத்தப்படாத துறை என்று கூறலாம். ஆனால் உணவு, மருந்து, பிசின்,விதை, இலை (பீடி) பட்டை, பூ, நறுமணப் பொருட்கள், இயற்கைச் சாயம் என்று ஏராளமான பொருட்கள் இதில் அடங்கும். வனவாசிகளின் வாழ்வாதாரம் ஒருபுறமிருக்க வனக் கொள்கை மறுபுறமிருக்க நெறிபடுத்தினால் மாத்திரமே இத்துறை மிக செழிப்பாக வளரும்.

Tuesday, March 20, 2012

உலக சிட்டுக் குருவிகள் தினம் 2012


சுமார் 15 வருட காலத்தில் நூற்றுக்கணக்கான  சிட்டுக் குருவிகள் வாழ்ந்த எங்கள் பகுதியிலிருந்து அவைகளை முற்றிலுமாக அகற்றிவிட்டோம் என்று ஆழ்ந்த வருத்தத்துடன் பகிர்ந்து  கொள்ளுகிறேன். திரும்ப கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். இங்கு வந்து வாழமுடியாமல் போய்விடுமோ? என்ற பயம் காரணமாக சற்று தாமதப்படுத்தியிருக்கிறேன். இருப்பினும் முயற்சி தொடரும். அவைகளின் சுறுசுறுப்பு என்னைக் கவரும். புகைபடம் எடுக்க நீண்ட பயணம் மேற் கொள்ளவேண்டி வந்ததால் நியு சென்சுரி புக் ஹவுஸின் காலென்டரில் அழகான சிட்டு இருந்தது இங்கே பதிவிடுகிறேன். ஆனால் இந்த நிலைமை தொடரக்கூடாது என்பதே எனது பிரார்த்தனை. எனது நினைவு தெரிந்து இவைகள் இல்லாமல் போய்விட இன்னும் எத்தனை ஜீவராசிகளை தெரியாமல் அகற்றியிருக்கிறோம் என்று இயற்கைக்கு மாத்திரமே தெரியும். சிட்டுக் குருவிகளை காப்பாற்றுவோம் அதுதான் ஆரோக்கிய சுற்றுச்சூழலின் அறிகுறி!!!!

Sunday, March 11, 2012

உலக நீர் நாள் 2012 விழிப்புணர்வுப் படம்

இந்த வருட 2012 உலக நீர்  நாளுக்கான விழிப்புணர்வு புகைபடத்தின் HTML Code ஐ கீழே தந்திருக்கிறேன். வலைப் பூ / வலைதளம் வைத்திருப்பவர்கள்  இதனைப் பயன்படுத்தி தங்களின் வலைப் பூ / வலைதளங்களில் இட்டு விழிப்புணர்வை  ஏற்படுத்துங்கள்.

 */   <div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhKu6e2p0VWFajgk107yGAW3FdpsKon61GDCmXE_E6XFfeft7PAG7ublXfOL6s7NazDubNf3cOPPJACpaXYj0PSBvEvkgm72zCw9Ls2giIf7yphyphenhyphenHyjoFsSrZ6ayIAR3hgwGeh54PFxkTk/s1600/wwd2012.psd.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="150" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhKu6e2p0VWFajgk107yGAW3FdpsKon61GDCmXE_E6XFfeft7PAG7ublXfOL6s7NazDubNf3cOPPJACpaXYj0PSBvEvkgm72zCw9Ls2giIf7yphyphenhyphenHyjoFsSrZ6ayIAR3hgwGeh54PFxkTk/s400/wwd2012.psd.jpg" width="200" /></a></div>
<br />   */