Saturday, January 2, 2010

தமிழகத்தில் மரம் வளர்ப்பு : பகுதி -2

சட்டங்களும், திட்டங்களும்.

8. இந்தியாவிலேயே தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள “வனங்களுக்கு வெளியே மரம் வளர்ப்பு” TREE CULTIVATION IN PATTA LANDS (TCPL) திட்டதின் கீழ் மரநாற்றுக்கள் தந்து வளர்ப்பதற்கு ஊக்க தொகையும் வனத்துறை மூலம் விவசாயிகளுக்கு தருகிறார்கள். மாவட்ட வனதுறையின் விரிவாக்க அலுவலகத்தை அணுகவும்.


9. “தேசீய புதுமை வேளாண்மை திட்டத்தின்” கீழ் வனக்கல்லூரி மேட்டுப்பாளையம், விவசாயிகள், கடனுதவிக்கு வங்கிகள், ஒப்பந்த முறையில் அறுவடையை வாங்க கம்பெனிகள் என்று தமிழகத்தில் மர வளர்ப்பு ஊக்கப்படுத்தப்படுகிறது. வன கல்லூரி மேட்டுப்பாளையம் 641 301 அணுகவும்.


10. மிக வேகமாக வளரும் மூங்கிலை தேசீய மூங்கில் இயக்கத்தின் கீழ் தமிழக அரசின் தோட்டக்கலை துறை மூலமாக மானியத்துடன் விவசாயிகள் வளர்க்க ஊக்கப்படுத்தப்படுகிறார்கள். http://dacnet.nic.in/nbm/


11. தமிழகத்தில் நன்கு வளரும் புங்கன், புன்னை போன்றவை “ப்யோ-டீசலாகவும்” வேம்பு இயற்கை பூச்சிக்கொல்லி தாயாரிக்கவும் பயன்படுகிறது. எண்ணை தரும் வெளிநாட்டு மரமான சொர்க்கமரமும் தமிழகத்தில் நன்கு வளர்கிறது. எதிர்காலத்தில் எண்ணை மரங்களுக்கு மதிப்பு உண்டு.


12. நமது மாநில மரமான “கற்பகதரு” பனை மரத்திற்கு வாரியம் ஏற்படுத்தி பனை மரத்தை வளர்க்க உதவுகிறார்கள். மேலும் தொடர்பிற்கு : வேளாண்மை பல்கலைகழகம் (கோவை)


13. இரண்டு பெரிய காகித ஆலைகள் தமிழகத்திலுள்ளது இவைகளுக்கு வேண்டிய கச்சாப் பொருள் மரம். அவைகளை ஒப்பந்த விவசாயம் மூலம் வளர்க்கவும்,வாங்கவும் தயாராகவுள்ளனர்.


14. மரத்துண்டுகள், மரக்குச்சிகள், மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் கம்பெனிகள் தமிழகத்தில் ஆரம்பித்துள்ளனர்.எனக்கு தெரிந்த ஒரு கம்பெனியின் ஆண்டுத் தேவை சுமார் 40,000 டன் (உலர்ந்தது).


15. நாட்டின் 80% தீக்குச்சிகள் தமிழகத்தில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு மாத உற்பத்திக்கு 10,000 டன் மரம் தேவை. அவைகள் 80% கேரளாவிலிருந்தும் 3% கர்னடாகாவிலிருந்தும் இறக்குமதி செய்யப்படுகிறது. தற்சமயம் வெளிநாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்படுகிறது. இதற்கு தேவையான பீதணக்கன் மரம் தரிசுநிலத்தில் நன்கு வளரக்கூடியது என்பது தமிழகத்திற்கு சாதகமானது. எனது பழைய பதிவு : http://maravalam.blogspot.com/2008/06/blog-post_27.html


16. உலகின் மிக விலையுயர்ந்த மரங்களில் சந்தனமரம் சிறப்புப் பெற்றது. அதனை தனியார் நிலங்களில் வளர்க்க தமிழகத்தில் சட்டங்கள் தளர்த்தப்பட்டு ஊக்கப்படுத்தப்படுகிறார்கள். http://www.forests.tn.nic.in/graphics/tn_forest_act_and_sw_act_GOs2.pdf


17. அழிவின் விளிம்பில் இருக்கும் அசோகமரம் (Asoka saraka), அரிய, விலை மிக்க செஞ்சந்தனம் (Pterocarpus santalinus L. ), குமிழ் போன்ற தென்னிந்தியாவில் நன்கு வளரும் மரங்களை நாம் காப்பாற்றி அடுத்த தலைமுறைக்கு தரவேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. இதற்கும் தேசீய மருத்துவ தாவரங்கள் வாரியத்தின் மூலம் மானியம் தருகிறார்கள் . http://nmpb.nic.in/

5 comments:

விஜய் said...

http://agasool.blogspot.com/2010/01/blog-post.html

ஜோதிடம் சொல்லியாவது மரம் வளர்ப்பார்களா பார்ப்போம்

விஜய்

வின்சென்ட். said...

திரு.விஜய்

உங்கள் வருகைக்கு நன்றி. தகவல்கள் கொடுத்துவிட்டேன். உபயோகபடுத்துவது மக்கள் கையில்.

Anonymous said...

Thanks. This is a very useful blog. I saw this mentioned in the skyscrapercity forums - http://www.skyscrapercity.com/showthread.php?t=1033043

வின்சென்ட். said...

திரு.அனானி

உங்கள் வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி.

Anonymous said...

Hi - I am really glad to discover this. Good job!