Showing posts with label வீட்டுத்தோட்டம். Show all posts
Showing posts with label வீட்டுத்தோட்டம். Show all posts

Friday, April 24, 2020

தவசி கீரை

பொதுவாக வருடம் முழுவதும் பெண்களிடையே கீரைகள் பற்றிய விழிப்புணர்வு அதிகம் இருக்கும் ஆனால் அவை வீட்டுத் தோட்டதில் வளர்ப்பதில் சில சிக்கல்கள் உண்டு. காரணம் அவை மிக குறுகிய காலத்தில் வளர்ச்சி பெற்றுவிடும். பின் திரும்பவும் விதைகள் வாங்கி வளர்க்க வேண்டும். ஆனால் குற்றுச் செடியாகவோ அல்லது சிறு மரங்களாகவோ இருந்தால் பராமரிப்பு குறைவு.   குறைந்தது 3 அல்லது 4 எண்ணிக்கையில் இருந்தாலே போதுமானது. வருடம் முழுவதும்  நமக்கு கீரை கிடைக்கும்.

தாவரவியல் பெயர்   Sauropus androgynus

தமிழ் பெயர்                  தவசி கீரை

மற்ற பெயர்கள்            மல்டிவைட்டமின் கீரைபிரஷ்ஷர் கீரை.                                                                                                                            
சுமார்  6 அடி வரை வளரும் இந்தக் கீரையைப்  பச்சையாகவும் உண்ணலாம். அனைத்துச் சத்துக்களையும் நமக்கு  தருவது தவசி கீரையாகும். அனைத்து வைட்டமின்களும் தவசி கீரையில் இருப்பதால் இதனை  மல்டி  வைட்டமின் கீரைஎன்றும் அழைக்கின்றனர்.  இக்கீரையின் இலைகளைப் பொரியலாகவும்,  பயறு வகைகளுடன் சேர்த்து கூட்டும் செய்யலாம். தனியாகக் கடையவும்  செய்யலாம். இதனைபிரஷ்ஷர் கீரைஎனவும் அழைக்கின்றனர். விதை மூலமும் போத்து முறையிலும் நாற்றுக்களை உருவாக்கலாம். இரண்டு அல்லது மூன்று செடிகள் நமது வீட்டுத் தேவையை பூர்த்தி செய்யும்.

Wednesday, December 10, 2014

பாசுமதி இலை


தாவரவியல் பெயர் :  Pandanus amaryllifolius


‘பாசுமதி அரிசி” என்ற விலைமிக்க அரிசியை அதன் மணத்திற்காக விஷேச காலங்களில் ‘புலாவ்”,  பிரியாணி, தேங்காய் பால் சாதம்  போன்ற உணவு வகைகளை  சமைக்கும் போது உபயோகிப்போம். ஆனால் கிழக்காசிய நாடுகளில் பிரபலமாகவுள்ள ஒரு தாவரத்தின் இலை  பாசுமதி அரிசியின் மணத்தை சாதாரண அரிசிக்கு தரும் என்றால் வியப்பளிக்கலாம். தமிழில் "பாசுமதி இலை" என்றழைக்கப்படுறது, ஆனால் இன்னும் பிரபலமாகவில்லை. “பேன்டன்” (Pandan)என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த தாவரத்தின் குடும்பம் மிகப் பெரியது எனவே  Pandanus amaryllifolius என்ற தாவரவியல் பெயர் கொண்ட தாவரம் தான் இந்த பாசுமதி இலை. வெப்பமண்டல தாவரம்,  நிழல் பகுதியில் சிறப்பாக வளர்கிறது. எளிதாக வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கலாம்.

Monday, December 1, 2014

மணத்தக்காளி அல்லது சுக்குட்டிக் கீரை

சில வகை கீரைகள் நல்ல வேர் அமைப்பும் சற்று உறுதியான தண்டையும், விரைவாக வளரும் தன்மையை பெற்றிருப்பதால் மறுதாம்பு பயிர்களாக விரைவில் திரும்ப திரும்ப அறுவடைக்கு வருகின்றன. பராமரிப்பு குறைவதுடன் வளர்ப்பதும் எளிது.



சற்று கசப்புச் சுவையுடன் கூடிய மருத்துவ குணம் நிறைந்த மணத்தக்காளி உணவுபாதையை சீராக்குவதில் பெரும்பங்கு ஆற்றுகிறது. தண்டு, இலை, காய், பழம் என அனைத்து பாகங்களையும் உபயோகிக்கலாம். வாய் புண்ணிற்கும், அல்சர் என்னும் குடல் புண்ணிற்கும் அருமருந்து இந்த மணத்தக்காளி. மலச்சிக்கலை தவிர்க்க தண்டு மற்றும்  இலையை பொறியல் செய்து உண்ண வேண்டும்... வாய்நாற்றம்  உள்ளவர்கள் தினமும் இலையை மென்று வர வாய்நாற்றம் குறையும். குறிப்பாக பாட்டி வைத்தியத்தில் அல்சருக்கு தினமும் காலை உணவாக சிறிய வெங்காயம், பசுவெண்ணையுடன்  மணத்தக்காளிக் கீரையை நன்கு வதக்கி குறைந்த அளவு சாதத்துடன் அதிக அளவு பொறியலை தொடர்ந்து உண்டு வர விரைவில் குணம் பெறலாம். சில தோல் நோய்களுக்கு தொடர்ந்து இலைசாற்றை தடவி வர அவைகள் மறையும். மறுதாம்புப்  பயிர் என்பதால் வீட்டுத் தோட்டத்தில் கண்டிப்பாக வளர்க்க வேண்டிய கீரை,  வணிக ரீதியாகவும் இதனை பயிர் செய்யலாம். விதைகள் மூலம் உற்பத்தி செய்யலாம்.

Tuesday, August 5, 2014

சுவர் தோட்டம் ( Wall Gardening )

பெங்களூரு நகரில் அமைக்கப்பட்டிருந்த செங்குத்துத் தோட்டம்
 சுவர் தோட்டம், பசுமை சுவர், செங்குத்துத் தோட்டம்  என பல்வேறு பெயர்களில் இன்றைய “கான்கீரிட் காடு”களிடையே பசுமையை உண்டாக்க வந்துள்ளது இந்த வகை தோட்டக்கலை. இன்றைய காலகட்டதில் நகரங்களில் இடத்தின் மதிப்பு அதிகமாக அதிகமாக வீட்டுத் தோட்டத்தின் பரப்பு குறைந்து, தாவரங்கள் அழிக்கப்பட்டு, தேவையின் காரணமாக அடுக்குமாடி குடியிருப்புகள்  அதிகமாக கட்டப்பட்டு வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் அதிகரித்து வெப்ப அளவு வருடத்திற்கு வருடம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தாவரங்களால் மட்டுமே மிக குறைந்த செலவில் வெயிலின் தாக்கத்தைக் குறைத்து காற்றை சுத்தம் செய்ய இயலும். எனவே இந்த வகை தோட்டம் பிரபலமடைந்து வருகிறது. 
பாலிபுரோப்பிலீன் பிளாஸ்டிக்கிலான தாங்கி.
தொட்டிகள் பொருத்தப்பட்ட நிலையில்
  இந்த செங்குத்துத் தோட்டம்  ஏற்கனவே உள்ள சுவர்களிலோ அல்லது அதற்கென தனியாக சட்டங்கள் அமைத்தோ உருவாக்கலாம். உள்புறமோ அல்லது வெளிபகுதியிலோ அமைக்கலாம். பொதுவாக கண்ணாடி அமைப்புகள் கொண்ட அலுவலக, நட்சத்திர ஓட்டல்களின்  முகப்பு அறைகளில் உள்புறமாக பசுமை சுவர்களை உருவாக்குகின்றனர்.  பகல் நேரங்களில் சூரிய வெப்பத்தை கட்டிடங்கள் கிரகித்து சூரிய கதிர் வீச்சை ஏற்படுத்தும். இதனால் அந்தப் பகுதியில் வெப்பம் அதிகரிக்கும் இது போன்ற சுவர் தோட்டம் அமைக்கும் போது சூரிய வெப்பத்தை தாவரங்கள் தடுத்துவிடுவதால். சூரிய கதிர் வீச்சு குறையும். எனவே கட்டிடங்களின் அருகில் வெப்ப அளவு குறைய வாய்ப்பு ஏற்படுகிறது.  உயரமான பகுதிகளில் தண்ணீர் ஊற்றுவது சற்று கடினம் எனவே சொட்டுநீர் பாசனம் செய்தால் எளிமையாக பராமரிக்கலாம். மேலும்  அடுக்குமாடி குடியிருப்புக்களில் இதனை அமைக்கும் போது மேல் தளங்களில் குடியிருப்போரின் சமையலறை கழிவு நீரை சுத்திகரித்து எளிமையாக மறு உபயோகம் செய்ய ஒரு வாய்ப்பு. மேலை நாடுகளில் கட்டிடம் கட்டும் போதே சுவர் தோட்டத்திற்கான அமைப்புகளை ஏற்படுத்தி விடுகின்றனர்

நல்ல வெளிச்சமுள்ள அல்லது சற்று நிழலான சுவர் பகுதி போதுமானது. புற ஊதா கதிர்களை  தாங்கி நீண்ட நாட்கள் வரும் பாலிபுரோப்பிலீன் பிளாஸ்டிக்கிலான சுவற்றில் பொருத்தப்படும் பகுதி, தொட்டிகள், பைகள் கடைகளில் நிறைய வந்துள்ளன. அவைகளை வாங்கி நமது தேவைகேற்ப வடிவமைத்து அலங்கார செடிகள், அல்லது சமையலுக்கு தேவையான செடி வகைகளை வளர்க்கலாம். பொதுவாக அடுக்குமாடி அல்லது வணிக வளாகங்களின் முகப்பு பகுதிகளில் அலங்காரச் செடிகளையும், குடியிருப்பு பகுதிகளின் அருகில் சமையலுக்கு தேவையான செடி வகைகளையும் வளர்க்கலாம். காம்பௌன்ட் சுவற்றையும் இதற்கு பயன்படுத்தலாம். இவைகள் இன்றி பாட்டில்கள், பழைய டயர்கள் போன்றவற்றையும் நமது பொருளாதாரத்திற்கேற்ப பயன்படுத்தலாம்.
எளிமையாக சொட்டு நீர் அமைப்பு
வண்ணமிக்க அழகு தாவரங்கள்
 எடை குறைந்த, நீரை அதிக நாட்கள் தக்க வைத்துக் கொள்ளும் தென்னைநார் கழிவு, மண்புழு உரம் போன்றவற்றை வளர்ப்பதற்கு உபயோகிக்கும் போது சிறப்பாக செடிகள் வளரும். ஆஸ்பரகஸ், பெரணி வகைகள், வண்ணமிகு கெலேடியம் வகை தாவரங்கள், சில வண்ண புற்கள், தொங்கு தொட்டிகளில் வளர்க்கப்படும் அனைத்து மலர் செடிகளையும், புதினா, கொத்தமல்லி, ஓரிகான போன்ற நறுமண தாவரங்களையும் சுவர் தோட்டத்தில் வளர்க்கலாம். இன்றைய நகரங்களின் தேவை இந்த “சுவர் தோட்டம்”

Friday, July 25, 2014

கோவையில் வீட்டுத் தோட்டப் பயிற்சி



 ஆரோக்கியமான இயற்கை உணவின் மேலுள்ள நம்பிக்கை, காய்கறிகளின் விலை கடுமையான உயர்வுக்குப் பின் மக்களின் கவனம் மெதுவாக வீட்டுத் தோட்டத்தின் பக்கம் திரும்பியுள்ளது. கோவையில் நடைபெற்ற “அக்ரி இன்டெக்ஸ்” வந்த திரளான மக்கள்  வீட்டுத் தோட்ட அரங்குகளை வெகுவாக இரசித்துப் பார்வையிட்டது சான்றாகும்.

தமிழக அரசு கோவைக்கும், சென்னைக்கும் சலுகை விலையில் வீட்டுத் தோட்ட உபகரணங்களை கொடுத்துள்ளது. இது மற்ற நகரங்களுக்கும் நிச்சயம்  விரிவாக்கப்படும் என எண்ணுகிறேன். வாங்கியவர்களுக்கும் / வாங்கப் போகிறவர்களுக்கும்  இந்த ஒரு நாள் பயிற்சி உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

1. வீட்டுத் தோட்டம்
2. நீர் மேலாண்மை
3. உர மேலாண்மை
4. பூச்சி / நோய்  மேலாண்மை

இவற்றோடு மூலிகைகள் மற்றும் சிறுதானியங்கள் பற்றிய தகவல் தொகுப்பு.


தொடர்புக்கு :-

அலைபேசி  75985 16303
            94420 19007  
   

Sunday, June 8, 2014

“தோட்டக்கலை சிகிச்சை” (Horticultural Therapy )



தோட்டக்கலை என்பது வெறும் காய்கறிகள் | பழங்கள் | மலர்கள் | அழகுச்செடிகள் உற்பத்தி, பொழுதுபோக்கு, தொழில் மற்றும் வேலைவாய்ப்பு, அந்தஸ்து என்ற வழக்கமான நிலைகளைத் தாண்டி வயதானவர்கள், குழந்தைகள், மனநோயாளிகள், மன இறுக்கம், தனிமை, திக்கற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள், குறிப்பிட்ட பழக்கங்களுக்கு அடிமையானவர்கள், இழப்பை சந்தித்தவர்கள், வாழ்கை மாற்றத்தை அடைந்தவர்கள், விபத்தில் ஊனமானவர்களுக்கு மிக மிகச்சிறப்பானது இந்த “தோட்டக்கலை சிகிச்சை” (Horticultural Therapy ) முறையாகும்.

இன்றைய அதிவேக வாழ்கை முறை, தவறான உணவுப்பழக்கம், வேலைப்பழு, இரவு வேலை நேரம், நெரிசல் மிக்க நீண்ட பயணம், கடுமையான அலுவலக உழைப்பு போன்றவை  சாதாரணமானவர்களை  அதிக மன உளச்சல் /உடல் சோர்வு | மனஅழுத்ததிற்கு இட்டுச் செல்கிறது. அதற்கு எளிய ஆனால் சிறப்பான தீர்வு “தோட்டக்கலை சிகிச்சை” முறை என்றால் அநேகருக்கு ஆச்சரியம் தரலாம். இன்றைய வாழ்வியல் முறையில் . “நமக்கு நாமே” தீர்வு என்று இரசாயன உற்பத்தியை தவிர்த்து இயற்கை முறையில் தோட்டக்கலையை சிகிச்சையாக செய்ய ஆரம்பித்தால் குடும்ப ஆரோக்கியத்தை காப்பதோடு நோயற்ற மகிழ்ச்சியான குடும்ப வாழ்வை வாழலாம்.

அமெரிக்க சுதந்திர பிரகடனத்தில் கையொப்பம் இட்டவரும், “அமெரிக்காவின் மனநல மருத்துவதின் தந்தை” என்று புகழ் பெற்றவரும், பல்துறை வல்லுனருமான Dr. பெஞ்சமின் ரஷ் என்பவர் 1798 ஆண்டுகளில் மனநலம் குன்றியவர்களுக்கு “தோட்டக்கலை” மூலம் சிகிச்சை தருவதால் அவர்களின் மன நிலையை மேம்படுத்தலாம் என பதிவு செய்தார். பின்பு 1800 களில் ஸ்பெய்ன் நாட்டில் மனநல மருத்துவமனைகளில் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டது. உலகப் போருக்குப் பின் வயதான, ஊனமுற்ற போர்வீரர்களுக்கு தோட்டக்கலை சிகிச்சை அளிக்கப்பட்டது. இன்று வளர்ந்த நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு முறையாக “தோட்டக்கலை சிகிச்சை” உருவெடுத்துள்ளது. தொழில் முறையில் தோட்டக்கலை மூலம் சிகிச்சை மருத்துவ மனைகள், காப்பகங்கள், வயதானவர்கள் தங்கும் விடுதிகளில் நடைபெறுகிறது.

இதனால் பெறப்படும் நன்மைகள்.

வயதானவர்களுக்கு உடல் ரீதியாக  வலிமை, ஆற்றல், சுறுசுறுப்பான நடமாட்டம்,  நல்ல கண்-கை தொடர்பு (hand-eye coordination) ஆகியவற்றில் முன்னேற்றம் காணலாம். மன அழுத்தத்தை குறைத்து மன வலிமையையும், நம்பிக்கையையும் தரும்.

பார்த்தல், தொடுதல், நுகர்தல், சுவைத்தல் மூலம் குழந்தைகள் | மனநலம் குன்றியவர்களின் இயற்கை புரிதலை மேம்படுத்தும். கவனம், மனதை ஒரு முகப்படுத்துதல், முன்னேற்றம், புதிய நுட்பத்தை மனம் நாடுதல், நல்ல திட்டமிடுதல், பிரச்சனைகளுக்கு தீர்வு, ஞாபக சக்தியை அதிகரித்து நல்ல மனப்பான்மையையும் குழந்தைகளிடம் ஏற்படுத்தித் தரும்.
சமூக ரீதியாக மக்களிடையே நல்ல தொடர்பு கிட்டும், நமது கூட்டுக் குடும்ப முறையில் சுமுகமான உறவு பலப்படும்.
புதிய நுட்பம்

தோட்டக்கலை என்பது தாவரங்கள் மட்டுமின்றி நீரின் முக்கியத்துவம், நீர் மேலாண்மை, பறவைகள், மிருகங்கள், பூச்சியினம், பட்டாம் பூச்சி, நோய் மற்றும் அதன் நிர்வாகம், உர மேலாண்மை என பல உட்பிரிவுகளைக் கொண்டது. எனவே பல்வேறு துறைகளில் நமது கவனம் திருப்பப் படுவதால் நிறைய துறைகளில் அனுபவம் கிடைக்கிறது.


பல ஆயிரம் வருடங்களாக இருந்த வந்த “பாட்டி வைத்தியம்” கூட இந்த “தோட்டக்கலை சிகிச்சையின் ஒரு அங்கம் எனலாம். சென்ற 30 வருடங்களில் ஏற்பட்ட மருத்துவ மாற்றம் இந்த பரம்பரை ஞானத்தை இளம் தலைமுறையினரிடம் குறைத்துவிட்டது, பல மருத்துவ தாவரங்கள் அழிந்து வருகின்றன அவைகளை மீட்டெடுத்து பின்விளைவுகளற்ற வைத்தியமும், ஞானமும், மருத்துவ தாவரங்களும் காப்பாற்றப்பட்டு அடுத்த தலைமுறைக்கு வேண்டுமானால் தோட்டக்கலை அவசியம் தேவை.


Saturday, April 26, 2014

நெற்பவளம் என்னும் யோபுவின் கண்ணீர்


நெற்பவளச் செடி

ஜெபமாலையும் இயற்கையான துவாரமும்
நெற்பவளம்
பண்டைய உலகத்தில் இயற்கை சார்ந்த பொருட்கள் அணிகலன்களாகவும் ஆபரணங்களாகவும்  பயன்படுத்தபட்டுள்ளது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே நெற்பவளம் என்னும் தானியம் உணவாகவும் ஆபரணமாகவும் பயன்படுத்தபட்டுள்ளது நாகரீகம் வளர ஆபரணங்கள் உலோகத்திற்கு மாறிய பின் “தங்கம்” இன்று அரசாட்சி செய்கிறது. தங்கத்தின் விலையும் உயர உயர நெற்பவளம்  மீண்டும் புத்துயிர் பெற ஆரம்பித்துள்ளது. ஆன்மீகத்தில் இதன் பங்கு கணிசமாகவுள்ளது. இதன் ஆங்கிலப் பெயரான "யோபுவின் கண்ணீர்"  (Job’s Tear ) என்பது கூட பைபிளில் யோபு என்ற செல்வந்தர் இறைபக்தியின் காரணமாக எல்லாவற்றையும் இழந்தபின் கூட பக்தியுடன் இருந்ததால் அவர் அதிகம் கண்ணீர் விட வேண்டியிருந்தது. அவரை கனப்படுத்தும் முகமாக “யோபுவின் கண்ணீர்” என்றழைக்கின்றனர்.  இன்றும் கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் ஜெபமாலையாக நெற்பவளத்தையே உபயோகிக்கின்றனர். காலபோக்கில் நெற்பவளம் கிடைப்பது அரிதானதால் பிளாஸ்டிக் மணிகள் அந்த இடத்தை நிரப்பியுள்ளது.

பலவித ஆபரணங்கள்

“அன்னை தெரசா” அவர்கள் நெற்பவிள ஜெபமாலையுடன்.

நெற்பவிள காதணீ.


புல் வகை குடும்பத்தை சார்ந்த இப்பயிர் வெப்பமண்டலத்தைச் சார்ந்த கிழக்காசிய நாடுகளை தாயகமாகமாகக் கொண்டது. ஆண்டுப் பயிரான இதற்கு குறைந்த பட்ச நீர் போதுமானது. நன்கு நீர் கிடைக்கும் இடங்களில் 6 அடி உயரம் வளர்ந்து நிறைய மணிகளைத் தரும் .வடமாநிலங்களில் “வைஜயந்தி” என்று அழைக்கின்றனர். மருத்துவ குணம் கொண்ட இதனை தானியமாகவும் உட்கொள்ளலாம் அதை சமயம் கடினமான, பளபளக்கும், நடுவில் துவாரமுள்ள இம்மணியை கோர்த்து ஆபரணமாக அணிய உடல் ஆரோக்கியம் பெறும். மாலையாகவும் வளையல், காதணி என்று பல்வேறு அணிகலன்கள் செய்யப்படுகின்றன. “அன்னை தெரசா”அவர்கள் நெற்பவளத்தால் செய்யப்பட்ட ஜெபமாலையை உபயோகித்தார்கள் என்பது கூடுதல் தகவல். இந்து சமயத்திலும் இதனை மாலையாக அணிகிறார்கள். பௌத்த, முஸ்லிம் சமயங்களிலும் இதற்கு சிறப்பான இடமுண்டு. பெண்கள் சுய உதவிக்குழுகள் வீட்டுத்தோட்டதில் வளர்த்து வியாபார ரீதியாக இதனை ஏற்றுமதி கூட செய்ய வாய்புள்ளது.


Sunday, March 30, 2014

குடும்ப மகிழ்ச்சி


சிறுகுடும்ப தபால் வில்லைகள்

குடும்ப மகிழ்ச்சியென்பது நாம் உண்ணும் உணவில்தான்  உள்ளது. குறிப்பாக இயற்கை இடுபொருட்கள் மூலம் உற்பத்தி செய்யும் உணவுக் பொருட்கள் சுவை தருவதோடு நல்ல ஆரோக்கியத்தையும் தருகிறது என்றால் மிகையில்லை. அறுபது மற்றும் எழுபதுகளில் எல்லா ஊடகங்களிலும் சிறுகுடும்பம், குடும்பக் கட்டுப்பாடுகள் பற்றி அதிக அளவில் விளம்பரங்கள், சாதனங்கள் பற்றிய அறிமுகங்கள் இருந்தன. சிறு குடும்ப தபால் தலைகள் 70-90 களில் வெளிவந்தன. அப்போது இந்திய தம்பதிகளிடையே கருத்தரிக்கும் திறன் நன்கு இருந்ததுஆனால் 2000 ஆம் ஆண்டுகளில் நிலைமை மாறி கருத்தரிப்பு நிலையங்கள் சிறு நகரங்களில் கூட தோன்ற ஆரம்பித்தன.


 இன்று  குழந்தை தத்தெடுத்தல் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். பிறக்கின்ற குழந்தைகளில் குறிப்பிட்ட சதவீதம் ஆட்டிசம் (autism), கற்றல் குறைபாடு (Learning Disability), மனவளர்ச்சி குன்றுதல்  போன்றவை குடும்ப மகிழ்ச்சியை வெகுவாக பாதித்துள்ளது. 60  களில் அறிமுகப்படுத்தப்பட்ட இரசாயன விவசாயம், மாசடைந்த நிலத்தடி நீர்,  உணவு முறையில் மாற்றம் காரணமென்று பெரும்பான்மை மக்கள் கருதுகின்றனர். பாரம்பரிய தானியங்கள், உள்ளூர் இரக விதைகள், வீட்டுத் தோட்டம், விலை சற்று அதிகமிருந்தாலும் இயற்கை அங்காடிகளுக்கு ஆதரவு, யோகப் பயிற்சி போன்ற செயல்கள்  முக்கிய குடும்ப மகிழ்ச்சியை (குழந்தை பேறு) தரும்.

பெரியவர்களுக்கு நோயற்ற ஆரோக்கிய நிலைமையைத் தரும். பெரியவர்கள் ஆரோக்கியமாக இருந்தாலே மருத்துவமனை செல்லுதல் குறைவதால் குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும்.  இதனால் சில சமூக அவலங்கள் (மறுமணம், ஏச்சுப்பேச்சுக்கள், முதியோர் இல்லம், மனநல காப்பகங்கள் ) குறைய வாய்ப்புள்ளது.

Wednesday, January 15, 2014

கோவையில் “வீட்டிலும் செய்யலாம் விவசாயம்”- பயிற்சிக் கருத்தரங்கு.



 முன்பதிவிற்கு :

 தொலைபேசி அல்லது செல்போன் மூலம் 044-66802977 என்ற எண்ணை அழைத்து, குரல் வழிகாட்டுதல்படி பதிவு செய்யவும்.மேலும் விபரங்களுக்கு 99406-51071 (காலை 10 மணி முதல் 6 மணி வரை)

Thursday, December 26, 2013

சென்னை / கோவை நகர வீட்டுத் தோட்ட ஆர்வலர்களுக்கு ஓர் இனிய தகவல்



சென்னை / கோவை நகர வீட்டுத் தோட்ட ஆர்வலர்கள் தங்களின் காய்கறி தேவைகளை ஓரளவிற்கு தாங்களே உற்பத்தி செய்ய தேவையான பொருட்களை 50% மானிய விலையில் தர தமிழக அரசு முன் வந்துள்ளது. நீங்களே செய்து பாருங்கள்  Do it yourself என்ற பெயரில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலம் இத்திட்டம் 16 ச.மீ பரப்பளவில் செய்ய  பொருட்களை பயனாளிகளுக்கு அளிக்கவுள்ளனர். 

பொருட்களின் பட்டியல்

செயல்முறை விளக்கக் கையேட்டைக் காண கீழ்கண்ட தொடர்பை பயன்படுத்துங்கள்.




விண்ணப்பம் ஆன்லைனில் அனுப்ப கீழ்கண்ட தொடர்பை பயன்படுத்துங்கள்.



தொடர்பிற்கு.....
 உங்களின் வீட்டுத் தோட்டம் சிறப்பாக அமைய இவ்வலைப் பூ வாழ்த்துகிறது.

ஆதாரம் மற்றும் நன்றி : http://tnhorticulture.tn.gov.in/

Monday, September 2, 2013

ஹூஜல்கல்சர் (Hugelkulture)



வேண்டாத பொருட்களின் மறுஉபயோகம், குப்பை என்று எண்ணும் பொருட்களை பயனுள்ளதாக மாற்றும் சக்தி வீட்டுத் தோட்டதிற்கு உண்டு. சில முறைகள் நூற்றாண்டு காலமாக வெளிநாடுகளில் வழக்கத்தில் உண்டு. அவைகளில் ஒன்று ஹூஜல்குல்சர்
வேண்டாத அட்டைகள்

மரக்குச்சிகள்

மண்புழு உரம் கலந்த தென்னைநார் கழிவு

புதினா நாற்றுக்கள்.

நன்கு வளர்நதுள்ள புதினா

ஆரோக்கியமான இலைகள்
 “ஹூஜல்குல்சர் (hugelkulture) என்ற வாயில் நுழையாத இந்த ஜெர்மன் வார்த்தைக்கு உயரமான மேட்டுப்பாத்தி என்று பொருள் கொள்ளலாம். சிறு வித்தியாசம் பாத்தியின் அடியில் பெரிய மரத்துண்டுகளை அடுக்கி அதற்கு மேல் மண் இட்டு செடிகளை நடுவார்கள். நாட்கள் செல்லச் செல்ல மரதுண்டுகள் மக்கி உரமாக மாறும் அதே சமயம் மரதுண்டுகள் நீரையும் தன்னகத்தே உறிஞ்சிக் கொள்வதால் மேலேயுள்ள தாவரங்களுக்கு உரமும் நீரும் அடிக்கடி தரவேண்டிய அவசியம் குறைவு. வேர்களுக்கு தேவையான காற்றும், எளிதில் செல்ல மக்கிய மரத்துண்டுகளும் இருப்பதால் வேர்கள் நன்கு பரவி செடிகள் ஆரோக்கியமாக இருக்கும். இந்த முறை கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் ஜெர்மனியிலும் நூற்றாண்டுகளுக்கும் மேலாக  வழக்கத்தில் உள்ளது.  எளிமையானதும் செலவு குறைந்த ஒரு முறையாகும். வேண்டாத அட்டைப் பெட்டிகள், மரத்துண்டுகள், காய்ந்த இலைக் குப்பைகள், என அனைத்தையும் உபயோகித்து சிறப்பான ஹூஜல்கல்சர் முறையை வீட்டுத் தோட்டத்தில் மிக எளிதாக கடைபிடிக்கலாம். பெரிய அளவில் செய்யவேண்டிய அவசியம் இல்லை. சிறிய தொட்டிகளில் கூட செய்யலாம்.