Wednesday, June 26, 2013

“நமக்கு நாமே” நோக்கதில் மக்கள் பயணம்



தாராளமயம், உலகமயம் என மக்களுக்கெதிரான சட்டங்கள், திட்டங்கள் செய்து பன்னாட்டு நிறுவனங்கள் உலக மக்களின் வாழ்வாதாரத்தை சுரண்டும் நிலையில் மக்கள் தாங்களே வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதில் முனைப்புடன் செயல்படுவது காலத்தின் கட்டாயம். குறிப்பாக நீராதாரத்தைக் காப்பதில் தமிழகத்தில் சில ஊர்களில் நடக்கும் நிகழ்வுகள் மகிழ்ச்சியைத் தருகிறது. இது ஒவ்வொரு சிற்றூர்களிலும் நிகழ்ந்தால் எங்கும் சுபிட்சம் எதிலும் நிறைவு.   

சில  நிகழ்வுகள் உங்கள் பார்வைக்கு

சேலம் மூக்கனேரி
மண்திட்டுக்ககளில் மரங்கள்


சேலம் மூக்கனேரி தூர்வாரப்பட்டு ஏரியின் நடுவில் மண்திட்டுக்கள் அமைத்து மரங்கள் வளர்க்கப்படும் அற்புதக் காட்சி.

குளம் காப்போம் குலம் காப்போம்

மண் திட்டுக்கள் உருவாக்கம்
கோவை மாநகரில் பெரியகுளத்தில் குளம் காப்போம் குலம் காப்போம் மூலம் தூர்வாரும் பணி கடந்த சிலவாரங்களாக நடைபெற்று மண் திட்டுக்கள் உருவாகியுள்ளன.

காஞ்சிபுரம் அருகே உள்ள அய்யங்கார்குளம் சஞ்சீவிராயர் கோவில் சீரமைக்கப்பட்டு வாருங்கள் காடு வளர்ப்போம் நிகழ்வு வரும் 29-06-2013 அன்று நடைபெறவுள்ளது. முடிந்தவர்கள் உற்சாகத்துடன் கலந்து கொள்ளுங்கள்.
இதுவரை அங்கே செய்த வேலைகளை பேஸ்புக்கில் பகிர்ந்து வந்துள்ளார்கள். அதன் தொகுப்பு கீழே உள்ளது.



சென்னையின் குடிநீராதாரமான செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றி பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணி வருகின்ற 3,4 - 08-2013 (இருதினங்கள்) நடைபெறவுள்ளது. முடிந்தவர்கள் உற்சாகத்துடன் கலந்து கொள்ளுங்கள்.

எனக்கு தெரிந்த நிகழ்வுகள் பற்றி பகிர்ந்திருக்கிறேன். வேறு நிகழ்வுகள் நடைபெறுமானால் பகிருங்கள், தெரிவியுங்கள்.



Photographs Source : Face Book & blogs

Friday, June 14, 2013

வீட்டுத் தோட்டம் பயிற்சிக் கருத்தரங்கு - பெண்களுக்கு மட்டும்




Source  : Pasumai Vikatan

தமிழகத்திலுள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணைகளின் விலாசம்


தென்மேற்கு பருவ மழை ஆரம்பித்த நிலையில் கீழ்கண்ட பண்ணைகளின் விலாசம் எல்லோருக்கும் உதவியாக இருக்கமென எண்ணுகிறேன்.

தமிழகத்திலுள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணைகள்
அரசு தோட்டக்கலைப் பண்ணை,
பிச்சிவாக்கம் (கிராமம் மற்றும் தபால்)
திருவள்ளூர் மாவட்டம்

அரசு தோட்டக்கலைப் பண்ணை,
18, அருள் நகர், மாதவரம் பால் பண்ணை ரோடு,
அம்பத்தூர் தாலுக்கா, திருவள்ளூர் மாவட்டம்
அரசு தோட்டக்கலைப் பண்ணை,
ஆத்தூர் (கிராமம்) செங்கல்பட்டு - காஞ்சிபுரம் ரோடு,
காஞ்சிபுரம் மாவட்டம்.
அரசு தோட்டக்கலைப் பண்ணை, மேல்கதிப்பூர், முசரவாக்கம் ரோடு, காஞ்சிபுரம் மாவட்டம்.
அரசு தோட்டக்கலைப் பண்ணை,
மேலொட்டிவாக்கம் (கிராமம்)       
காஞ்சிபுரம் மாவட்டம்.
அரசு தோட்டக்கலைப் பண்ணை,
விச்சத்தங்கள் (கிராமம்),
உத்திரமோரூர் ரோடு,
 காஞ்சிபுரம் மாவட்டம்.

அரசு தோட்டக்கலைப் பண்ணை,
கடப்பட்டு (கிராமம்), திருப்பத்தூர்  (தாலுக்கா) வேலூர் (மாவட்டம்)
அரசு தோட்டக்கலைப் பண்ணை, நவலோக் (கிராமம்) வலஜா (தாலுக்கா)
வேலூர் (மாவட்டம்)
அரசு தோட்டக்கலைப் பண்ணை, தகரக்குப்பம் (கிராமம்),
ஜவ்வாது மலை, திருவண்ணாமலை மாவட்டம்
அரசு தோட்டக்கலைப் பண்ணை, திம்மபுரம், காவேரிப்பட்டணம் (கிராமம்) தர்மபுரி மாவட்டம்
அரசு தோட்டக்கலைப் பண்ணை,
ஜீனூர் (கிராமம்), செக்கரிமேடு, 
பெங்களூர் ரோடு,
தர்மபுரி மாவட்டம்
அரசு தோட்டக்கலைப் பண்ணை, நெய்வேலி, சொரந்தூர் (கிராமம்), நெய்வேலி நகரம்,
கடலூர் மாவட்டம்
அரசு தோட்டக்கலைப் பண்ணை,  சின்னக் கண்டியக்குப்பம் (கிராமம்), விருத்தாசலம்,
கடலூர் மாவட்டம்
அரசு தோட்டக்கலைப் பண்ணை,
மருக்குலம் (கிராமம்),
திருச்சி கரூர் ரோடு, கரூர் மாவட்டம்
அரசு தோட்டக்கலைப் பண்ணை,
குடுமியான்மலை, வயலொகம் (கிராமம்),
கும்பகோணம் ரோடு,   புதுக்கோட்டை மாவட்டம் 

அரசு தோட்டக்கலைப் பண்ணை,
வல்லத்திரக்கோட்டை,
வம்பன் (கிராமம்),
புதுக்கோட்டை மாவட்டம் 
அரசு தோட்டக்கலைப் பண்ணை,
நாட்டுமங்கலம்,
அரந்தாங்கி,
பேராவூரணி ரோடு,
புதுக்கோட்டை மாவட்டம் 
அரசு தோட்டக்கலைப் பண்ணை,
உதையாட்சி (கிராமம்),
தேவக்கோட்டை,
சிவகங்கை (மாவட்டம்)
அரசு தோட்டக்கலைப் பண்ணை,        
நேமம் (கிராமம்),
சிவகங்கை (மாவட்டம்)
அரசு தோட்டக்கலைப் பண்ணை, பெரியகுளம், புதுப்பட்டி (கிராமம்), எண்டப்பாதி கிராமம் அருகில்,  தேனி மாவட்டம்
அரசு தோட்டக்கலைப் பண்ணை,
பூவாணி (கிராமம்), வில்லிப்புத்தூர் அருகில், விருதுநகர் மாவட்டம்
அரசு தோட்டக்கலைப் பண்ணை,
வெங்கடேஸ்வரன் (கிராமம்), மேல்த்தொட்டப்பட்டி கிராமம் அருகில் ‚
வில்லிப்புத்தூர்
விருதுநகர் மாவட்டம்
ப்ரயண்ட் பூங்கா, கொடைக்காணல்,
தென்மலை பகுதி,
திண்டுக்கல் மாவட்டம்
அரசு தோட்டக்கலைப் பண்ணை,
தாண்டிக்குடி கிராமம்,
திண்டுக்கல் மாவட்டம்
அரசு தோட்டக்கலைப் பண்ணை,
சிறுமலை (கிராமம்), தென்மலை பகுதி, 
திண்டுக்கல் மாவட்டம்
அரசு தோட்டக்கலைப் பண்ணை, கண்காணிப்புக்கூடம், கொடைக்காணல்,
திண்டுக்கல் (மாவட்டம்)
அரசு தோட்டக்கலைப் பண்ணை,
கொத்தப்பள்ளி (கிராமம்),
ரெட்டியார் சத்திரம்,   
திண்டுக்கல் மாவட்டம்             

        
அரசு தோட்டக்கலைப் பண்ணை,
குண்டல் (கிராமம்), கன்னியாகுமரி, நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலை, கன்னியாகுமரி மாவட்டம்
அரசு தோட்டக்கலைப் பண்ணை,
பேச்சிப்பாரை (கிராமம்), கன்னியாகுமரி (மாவட்டம்)

அரசு தோட்டக்கலைப் பண்ணை,
குற்றாலம்,
திருநெல்வேலி மாவட்டம்

அரசு தோட்டக்கலைப் பண்ணை,
கருமந்துரை,
ஆத்தூர் (தாலுக்கா),
சேலம் மாவட்டம்
அரசு தோட்டக்கலைப் பண்ணை,   
கம்பம் அருகில்,
பகடுப்பட்டு ரோடு,
ஆத்தூர் (தாலுக்கா),
சேலம் மாவட்டம்
அரசு காய்கறி விதை உற்பத்தி மையம், கருமந்துரை,
ஆத்தூர் (தாலுக்கா),       
சேலம் மாவட்டம்
அரசு தோட்டக்கலைப் பண்ணை,
ஏற்காடு,
சேலம் மாவட்டம்
அரசு தோட்டக்கலைப் பண்ணை,
முள்ளுவாடி,
புதுப்பேட்டை (வழி),
ஆத்தூர் (தாலுக்கா),
சேலம் மாவட்டம்

அரசு தோட்டக்கலைப் பண்ணை,
செம்மேடு (கிராமம்),
நாமக்கல் மாவட்டம்
அரசு தோட்டக்கலைப் பண்ணை,
பாசோலை (கிராமம்),
நாமக்கல் மாவட்டம்
அரசு தோட்டக்கலைப் பண்ணை,
அறுநூற்றுமலை, சிறுமலை மலை,
சேலம் மாவட்டம்
அரசு தோட்டக்கலைப் பண்ணை,
மணியார்குண்டம் (கிராமம்),
நாமக்கல் மாவட்டம்.         

அரசு தோட்டக்கலைப் பண்ணை,
வீரபாண்டி (கிராமம்),
ஆணைக்கட்டி,
கோயமுத்தூர் (தாலுக்கா),
கோயமுத்தூர் மாவட்டம்         

அரசு தோட்டக்கலைப் பண்ணை,    
கல்லார் (கிராமம்)
மேட்டுப்பாளையம் ரோடு, கோயமுத்தூர்
அரசு தோட்டக்கலைப் பண்ணை,
பர்லியார்,
மேட்டுப்பாளையம் சி.என்.ஆர் நீலகிரி மாவட்டம்
அரசு தோட்டக்கலைப் பண்ணை,
காட்டேரி, குன்னூர் - இராணிமேடு ரயில் நிலையம் அருகில்,
குன்னூர்,           
நீலகிரி மாவட்டம்

அரசு தோட்டக்கலைப் பண்ணை,
வெஸ்ட்வே,
குன்னூர்,
நீலகிரி - 643101



அரசு பழப்பயிர் மையம்,
வெட்வே ரயில் நிலையம், குன்னூர்,
நீலகிரி (மாவட்டம்)- 643101
             
சிம்ஸ் பார்க்,
குன்னூர்,
நீலகிரி மாவட்டம்
                              
அரசு தோட்டக்கலைப் பண்ணை,
விஜயநகரம்,
ஊட்டி,                    
நீலகிரி (மாவட்டம்) - 643001
அரசு தோட்டக்கலைப் பண்ணை,
தும்மணட்டி,
ஊட்டி,
நீலகிரி (மாவட்டம்) - 643001

அரசு தாவரவியல் பூங்கா,
ஊட்டி,
நீலகிரி (மாவட்டம்) - 643001


   
அரசு தோட்டக்கலைப் பண்ணை,
நஞ்சநாடு (கிராமம்),
நீலகிரி (மாவட்டம்) 
அரசு தோட்டக்கலைப் பண்ணை,
தேவாலா,
நடுக்கனி தபால்,
கடலூர்-643211,
நீலகிரி (மாவட்டம்) 
அரசு தோட்டக்கலைப் பண்ணை,
தொட்டபெட்டா,
ஊட்டி,
நீலகிரி (மாவட்டம்) -643001


Source : http://agritech.tnau.ac.in/ta/horticulture/horti_extension%20services_state%20horticulture%20farms_ta.html

Wednesday, June 5, 2013

2013 ஆண்டு சுற்றுச்சுழல் தின கருப்பொருள்- உணவு வீணாகுதல்


சிந்தியுங்கள், சாப்பிடுங்கள், சேமியுங்கள்
இந்த வருட சுற்றுச்சுழல் தின  கருப்பொருள் உணவு வீணாக்குதல் பற்றியது. சிந்தியுங்கள், சாப்பிடுங்கள், சேமியுங்கள் (Think, Eat, Save). ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் [UN Food and Agriculture Organization (FAO)] சில புள்ளிவிபரங்கள் நம்மை வருத்தத்தில் ஆழ்த்துகின்றன. 


ஒவ்வொரு வருடமும் 1.3 பில்லியன் டன்கள் உணவுப் பொருட்களை நாம் வீணாக்குகிறோம். ஆனால் உலகின் 7 மனிதர்களில் ஒருவர் பட்டினியாக படுக்கைக்குச் செல்கிறார். 5 வயதிற்குட்ப்பட்ட 20,000கும் அதிகமான குழந்தைகள் தினமும் பசியால் மடிகின்றனர். இந்த உணவு உற்பத்தி என்பது 25% நிலம், 70% நன்னீர், 80% காடுகள் அழிப்பு மற்றும் 30% பசுமை குடில்  வாயுக்கள் வெளியேற்றத்தை உள்ளட்டக்கியது.


உணவு - நாம் உண்ணுவதற்கு ஏற்ப மாறுவதற்கு முன் உணவில் மறைந்துள்ள நீர் (Virtual Water), உணவு தூரம் (Foodmile), சமைக்க தேவையான எரிபொருள் மற்றும் நீர் (Cooking fuel+ Water),  சமைப்பவரின் திறமை + நேரம் (Cook’s ability+ Time) போன்ற பல்வேறு அம்சங்களைக் உள்ளடக்கியது. எனவே உண்ணும்  உணவை வீணாக்குவதால் மேற்கண்ட முக்கியமான அம்சங்களை வீணடிக்கிறோம் என்பதை நினைவில் கொண்டு அளவோடு உண்டு சுற்றுச்சுழல் காப்போம்.


மேலும் படிக்க:-