Saturday, July 31, 2010

உழுவதற்கும் களை எடுப்பதற்கும் ஓர் எளிய கருவி


வேகமாகச் சுருங்கிவரும் விளைநிலங்கள், கடுமையான ஆட்பற்றாக்குறை, வீழ்ந்துவரும் வருமானம் போன்ற காரணங்களால் விவசாயத்தைத் தொடரத்தான் வேண்டுமா என்ற கேள்வி விவசாயிகளிடையே எழுந்துள்ளது. “குறுநில விவசாயிகளுக்கு ஒரு ஜோடி உழவு மாடுகளைப் பராமரிப்பதே பெரும் சுமையாக மாறிவந்தபோது, டிராக்டரை வாங்குவதற்கு வங்கிக்கடன் தாராளமாகக் கிடைத்ததால் அது அவர்களுக்கு ஒரு மாற்றாக முதலில் தோன் றியது. ஆனால் மாதாமாதம் கடனைத் திருப்பிக் கட்டுவது இயலாததாக மாறி, நிலத்தையே விற்கவேண்டிய நிலைக்கு பல விவசாயிகள் தள்ளப்பட்டனர்” என்கிறார் அகமதாபாதிலுள்ள தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் நிதின் மௌரியா.

கருவி உருவான விதம்

விவசாயிகளுக்குச் சொந்தமான நிலம் ஒரு ஏக்கரோ, 10 ஏக்கர்களோ உழுவதையும் களை எடுப்பதையும் அவர்கள் தொடர்ந்து செய்தாக வேண்டும். ஆட்பற்றாக்குறையைச் சமாளிக்க மகாராஷ்ட்ர மாநில ஜல்கான் மாவட்டத்தைச் சேர்ந்த ஏழை விவசாயி கோபால் பிஸே உருவாக்கிய கிருஷிராஜா என்ற சைக்கிள் களை எடுப்புக் கருவிக்கு விவசாயிகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. உழவு மாடுகளை வாங்கக்கூட இயலாத நிலையில் இம்மாதிரி ஒரு கருவியைத் தயாரிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானார் பிஸே.

“எங்களுக்குச் சொந்தமான 0.8 ஹெக்டேர் நிலம் வளமான பூமிதான். கிணறு தோண்டுவதற்கு ஆட்களை அமர்த்த வசதி இல்லாததால் நானும் என் மனைவியுமே சிரமப்பட்டு ஒரு கிணற்றைத் தோண்டினோம். ஒரு நாள் ஒரு சைக்கிளில் சில மாவு மூட்டைகளை ஏற்றிச் சென்ற ஒரு வியாபாரியைப் பார்த்ததும் உழவுக்குப் பயன்படும் வகையில் சைக்கிளை மாற்றியமைக்கும் யோசனை எனக்கு வந்தது. என்னை மாதிரியோர் ஏழை விவசாயிக்கு ஒரு ஜோடி உழவு மாடுகளைவிட ஒரு சைக்கிளைப் பராமரிப்பது கட்டுப்படியாகக் கூடியது. உழவு மாடுகளுக்குப் பதிலாக அவை செய்யக் கூடிய வேலைகளைச் செய்யும் வகையில் ஒரு சைக்கிளின் முன் சக்கரம், அச்சு, ஹாண்டில்பார் ஆகியவற்றை மாற்றியமைத்தேன்” என்கிறார் கோபால் பிஸே.

விடாமுயற்சிக்குப் பலன்

களையெடுப்பதற்கும் உழுவதற்கும் தனித்தனியான உபகருவிகளை கிருஷி ராஜாவுடன் இணைத்துக் கொள்ள முடியும். “சைக்கிளை நான் இம்மாதிரி மாற்றி யமைப்பதைப் பார்த்து மற்ற விவசாயிகள் முதலில் கேலியாகச் சிரித்தனர். ஆனால் நான் விடா முயற்சியுடன் பாடுபட்டேன். கடைசியில் என் உழைப்புக்குப் பலன் கிடைத்திருக்கிறது. இன்று கிருஷி ராஜாவுக்கு உள்ளூர் சந்தையில் நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளது” என்கிறார் பிஸே பெரு மையுடன். இக்கருவியைக் கொண்டு அவ்வளவாக இறுக்கம் இல்லாத மண்ணை ஓரடி ஆழம் வரை உழமுடியும். ஜல்கான் மாவட்டத்தில் 200 விவசாயிகள் உழவு மாடுகளை விட்டுவிட்டு, கிருஷிராஜாவுக்கு மாறிவிட்டனர்

மேற்கொண்டு தகவல் வேண்டுவோர்
திரு கோபால் பிஸேயுடன் (9970521044)
டாக்டர். நிதின் மௌரியாவுடன் (079/26732456) தொடர்பு கொள்ளலாம்.

(தகவல் & புகைப்படம் : தி இந்து). தமிழாக்கம் -பேராசிரியர் கே. ராஜு தீக்கதீர்

12 comments:

Aba said...

பயனுள்ள செய்தி.

வின்சென்ட். said...

Mr.Abarajithan

உங்கள் வருகைக்கு நன்றி.

நீச்சல்காரன் said...

அற்புதம்

வின்சென்ட். said...

திரு.நீச்சல்காரன்

உங்கள் வருகைக்கு நன்றி.

Robin said...

Great!

வின்சென்ட். said...

திரு.ராபின்

உங்கள் வருகைக்கு நன்றி.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தேவையே புதிய கண்டுபிடிப்புக்களைத் தருகிறது. அது எளிமையாவும் இருந்துட்டா அப்பறமென்ன .. :)

வின்சென்ட். said...

திருமதி.முத்துலெட்சுமி

நீங்கள் கூறுவது உண்மை.இது மிக எளிமையாக உள்ளதுஇதன் சிறப்பு.

Anonymous said...

PLEASE PUBLISH MORE AGRICULTUR RELATED NEWS,QUALITY AGRO INDUSTRIES,WORLD NO 1 FOOD PROCESSING & RICEMILL MACHINERIES AND MANY MORE ITEAMS TO HELP THE WORLD OF PEOPLE IN TAMIL. sridhar_kva@yahoo.in

வின்சென்ட். said...

திரு. ஸ்ரீதர்

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி. முடிந்த அளவிற்கு உங்கள் விருப்பத்தை பூர்த்தி செய்கிறேன்.

Essar Green World said...

அருமையான பதிவு

வின்சென்ட். said...

M/s Essar Green World

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.