Friday, March 20, 2009

குறைந்த விலையில் இயற்கை பூச்சிக்கொல்லி மருந்து சென்னை கல்லூரி மாணவர்கள் கண்டுபிடிப்பு

விவசாயிகளுக்காக குறைந்த செலவில் சென்னை லயோலா கல்லூரி ஆய்வு மாணவர்கள் உருவாக்கியுள்ள பொன்னீம் என்ற இயற்கை பூச்சிக் கொல்லி மருந்து அறிமுகப் படுத்தப்பட்டது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் பூச்சியியல் ஆராய்ச்சி நிறுவனம் இயங்கி வருகிறது. பூச்சியியல் விஞ்ஞானி பாதிரியார் இன்னாசி முத்துவை இயக்குனராக கொண்டு செயல்படும் இந்த ஆய்வு மையத்தில் பூச்சியியல் சம்பந்தப்பட்ட ஏராளமான ஆய்வுகள் நடந்து வருகின்றன. சுற்றுசூழல்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் குறைந்த விலையிலும் இயற்கை பூச்சிகொல்லி மருந்தை உருவாக்க இந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் தீவிர ஆய்வில் இறங்கினர். அவர்களுக்கு இயக்குனர் இன்னாசிமுத்து வழி காட்டியாக இருந்து உதவினார். இந்த ஆய்வு மாணவர்கள் புங்கை எண்ணை, வேப்பெண்ணை மற்றும் தாவரங்களில் பெறப்பட்ட சில பொருட்களைக் கொண்டு இயற்கை பூச்சிக் கொல்லி மருந்து உருவாக்கினார்கள். இதற்கு பொன்னீம் என்று பெயரிடப்பட்டுள்ளது. முற்றிலும் இயற்கையாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த பூச்சிக் கொல்லியைக் கொண்டு நெல்,பருத்தி, நிலக்கடலை, சோளம் உள்ளிட்ட தானியங்கள், காய்கறிகள், காபி,தேயிலை போன்ற மலைப்பயிர்கள் ரோஜா, மல்லிகை முதலான மலர்கள் ஆகிய வற்றை தாக்கும் அனைத்து வகையான பூச்சிகளையும் புழுக்களையும் அழிக்க லாம். இதை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது. உற்பத்தி அதிகரிப்பதுடன் தானியங்கள் மற்றும் பழங்களின் சுவை யும் அதிகரிக்கும். ஒரு லிட்டர் மருந்தை 400 லிட்டர் தண்ணீர் கலந்து ஒரு ஹெக்டேருக்கு பயன்படுத்தலாம். மாணவர்கள் உருவாக்கியுள்ள இந்த இயற்கை பூச்சிக் கொல்லியின் அறிமுக விழா லயோலா கல்லூரியில் நடந்தது. தமிழக அரசின் நுகர்வோர் செயல் பாடுகள் பிரிவின் உயர் அதிகாரி கா. பாலச்சந்திரன் அறிமுகப்படுத்தினார். ஒரு லிட்டர் பாட்டில் விலை ரூ135.00.
நன்றி :தீக்கதிர் 20-03-09

2 comments:

karun said...

very good innovation.Where can i get the product.pl.mail us to karunanithi07m@gmail.com

வின்சென்ட். said...

Dr. இன்னாசி முத்து (இயக்குனர்)
பூச்சியியல் ஆராய்ச்சி நிறுவனம்,
லயோலா கல்லூரி,
நுங்கம்பாக்கம்,
சென்னை.

என்ற முகவரியில் அணுகி விபரங்களைப் பெற்றுக்கொள்ளுங்கள்.