Friday, December 26, 2008

தேனீ வளர்ப்பு - ஒரு பார்வை

அயல் மகரந்த சேர்க்கையில் தேனீக்கள், பறவைகளின் பங்கு கணிசமானது. ஆனால் இவைகளின் தொகை குறைந்து கொண்டே போவதால் உணவு உற்பத்தியும் குறைந்து கொண்டே போகின்றது. இதனை மேம்படுத்த UNDP (United Nations Environment Programme) மிக சிறந்த ஒரு திட்டத்தை வரும் 5 வருடங்களுக்கு $26.45 மில்லியன் டாலரில் இந்தியா, கென்யா, பிரேசில், கானா, நேபாளம்,பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் செயல்படுத்தவுள்ளனர். இதனால் உணவு உற்பத்தி அதிகரிப்பதுடன் தேன் மற்றும் மெழுகு உற்பத்தியும் அதிகரிக்கிறது. இதனால் கிராமப்புற வேலை வாய்ப்பு ஏற்படுகிறது.

வியாதி, வனம்அழிதல், இரசாயன பூச்சிகொல்லிகளை உபயோகித்தல், விவசாய மாற்றத்தால் விவசாயிகள் தேனீ வளர்ப்பை கைவிட்டது, புதியஇனங்களின் அறிமுகம், வைரஸ்களால் பாதிப்பு என பல்வேறு காரணங்களால் இதன் தொகை குறைந்து கொண்டே போகின்றது. எனவே UNDP யின் இந்த திட்டம் வரவேற்க வேண்டிய நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டிய திட்டம். பயன்படுத்திக் கொள்ளவோம்.

தேனீக்கள் பற்றி முழுவதும் அறிந்து கொள்ள கீழ்கண்ட தொடர்புகளை பயன்படுத்துங்கள்
http://www.islamkalvi.com/science/honey_bee.htm
http://iyargai.blogspot.com/search/label/தேனீ
பயிற்சி மற்றும் தேனீ வளர்ப்பிற்கு கீழ்கண்ட தொடர்பை பயன்படுத்துங்கள்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகம், கோவை.
http://www.ecogreenunits.blogspot.com/

Source: The Hindu 16-08-2008
Photo : Mr. Babu

4 comments:

ரவி said...

நன்றி !!!!!!!!!!!

வின்சென்ட். said...

திரு.செந்தழல் ரவி

உங்கள் வருகைக்கு நன்றி.

A N A N T H E N said...

:) நல்ல பதிவு நன்றி

வின்சென்ட். said...

திரு.ஆனந்தன்

உங்கள் வருகைக்கு நன்றி.