Thursday, December 18, 2008

“Birds of Tamilnadu” - முனைவர்.K.ரத்னம் அவர்களின் பயன்மிக்க நூல்.

இயற்கையைப் பராமரிப்பதில் பறவைகளின் பங்கு குறிப்பிடத்தக்கது. விதைகளை எல்லா இடங்களுக்கும் பரப்பி வனத்தை விரிவுபடுத்துவதிலும் , பூச்சியினங்களை கட்டுப்படுத்துவதிலும், சுற்றுசுழல் மாசுபடாமல் சுத்தம் செய்வதிலும் பறவைகளுக்கு நிகர் பறவைகள்தான்.பறவைகளின், மிருகங்களின் உணவுப்பாதையில் சென்றுவரும் விதைகள் அதிக முளைப்புத் திறன் பெற்றவை என்பது நாம் அறிந்ததே. விவசாயத்திலும் இதற்கு நல்ல பங்கு உண்டு. ஆயிரக்கணக்கான பறவைகள் இருந்தாலும் நாம் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில்தான் பறவைகளைப் அறிந்திருக்கிறோம். புதிதாக சில பறவைகளைப் பார்த்தாலும் நம்மால் இனம் காண முடிவதில்லை. அக்குறையை போக்க வந்துள்ள நூல்தான் முனைவர்.K.ரத்னம் அவர்களின் “ Birds of Tamilnadu” .
தமிழகத்தின் சுமார் 328 பறவைகளின் அங்க அடையாளங்கள், காணப்படும் இடங்கள், வாழ்வுமுறை, உணவு, குரல், இனப்பெருக்கம் என மிகத்தெளிவாக வண்ணப் படங்களுடன் விளக்கியிருப்பது இந்நூலின் சிறப்பு. ஆங்கிலம், தமிழ் கூடவே அறிவியல் பெயரும் இருப்பது பின்னாட்களில் குழந்தைகளுக்கு மிக உபயோகமாக இருக்கும். முனைவர்.K.ரத்னம் அவர்கள் தமிழ்துறைத் தலைவராக மன்னர் சரபோஜி கலைக்கல்லூரி, தஞ்சாவூரில் பணியாற்றிவிட்டு ஓய்வு பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிறந்தநாள், சாதனைக்குப் பரிசு என குழந்தைகளுக்கு விலைமிக்க கம்யூட்டர் விளையாட்டுப் பொருட்கள், ஆடைகள், அணிகலன்கள் என பரிசளிக்கிறோம். ஒரு மாறுதலுக்காக இது போன்ற வாழ்கைக்குப் பயன்தரும் நூல்களை பரிசாக அளித்தால் இயற்கையை புரிந்துகொள்ள குழந்தைகளுக்கு ஒரு வாய்ப்பாக இருக்குமே. விவசாய்களிடமும் இருக்க வேண்டிய நூல்.

கிடைக்குமிடம்:
மாணிக்கவாசகர் நூலகம்
சிதம்பரம்................230069
சென்னை................25361039, 24357832
மதுரை....................2622853
கோவை..................2397155
திருச்சி....................2706450

4 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

தகவலுக்கு நன்றி!
இதை நான் அஞ்சலில் பெற எழுத வேண்டிய முகவரி தர முடியுமா???
அத்துடன் ஆசியாவில் தமிழர் வாழும் நாடுகளில் ஒரே இனப் பறவையை மாறுபட்ட பெயர் கொண்டு அழைக்கிறார்கள். அந்த பாகுபாட்டையும் குறிப்பிட்டுள்ளாரா? பயனுள்ளதாக இருக்கும்.
குறிப்பாக தாரா, வாத்து இதில் தமிழ்நாட்டிலும்;ஈழத்திலும் குழப்பம் உள்ளது போல் தெரிகிறது.

வின்சென்ட். said...

திரு.யோகன் பாரிஸ்

உங்கள் வருகைக்கு நன்றி.

ஆசிரியர் விலாசம்.
=====================
Dr.K.RATNAM Ph.D
19-B TRICHY ROAD
SULUR 641 402
COIMBATORE (DIST)
PHONE No:0422-2688789
=====================
அறிவியல் பெயர் இருப்பதால் குழப்பம் இருக்காது என்று எண்ணுகிறேன். ஆசிரியரின் தொடர்பு எண் தந்திருக்கிறேன்.விளக்கம் பெற்றுக் கொள்ளுங்கள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

புத்தகங்களிலே இதுபோன்ற வகைகளை என் மகளே விரும்பி வாங்குவாள்.. முயற்சிக்கிறேன்..

நேற்றுவரை பின்னூட்டம் போட விடவே இல்லை ப்ளாக்கர்.. இன்று தான் பின்னூட்டப்பெட்டியை காட்டி இருக்கிறது..

வின்சென்ட். said...

திருமதி.முத்துலெட்சுமி-கயல்விழி

உங்கள் வருகைக்கு நன்றி.ஆசிரியரின் விலாசம் தந்திருக்கிறேன்.ஏதேனும் சந்தேகம் இருந்தால் அவரை தொடர்பு கொள்ளுங்கள்.புத்தகத்தை அவரிடம் கூட பெற்றுக்கொள்ளலாம்.