இராஜஸ்தான் மாநிலத்தின் lதிரு.ராஜ் சிங் தஹியா முறையான பள்ளி படிப்பு பெறாதவர். ஆனால் சாணம் மற்றும் தாவரக் கழிவுகளிலிருந்து குறைவான செலவில் மின்சாரம் தயாரிக்க முடியும் என்பது அவரது கண்டுபிடிப்பு. 10kw மின்சாரம் எடுக்க ரூ.1,25,000 மும், 35kW மின்சாரம் எடுக்க ரூ.3,25,000 மும் செலவாகின்றது. 20 கிலோ கழிவிலிருந்து 1 மணி நேரத்திற்கு 30 குதிரை சக்தி திறன் கொண்ட எஞ்சினை இயக்க முடியுமாம். இந்த கண்டுபிடிப்பிற்காக ஜனாதிபதி விருது பெற்றவர்.
ஜனாதிபதியிடம் விருது பெறும். lதிரு.ராஜ் சிங் தஹியா
28-01-2010 “இந்து” நாளிதழில் வந்த கட்டுரையின் தமிழாகத்தை
ஒலி வடிவில் கேட்க கீழ்கண்ட தொடர்பை உபயோகியுங்கள்.
http://blogs.thehindubusinessline.com/audio/wp-content/uploads/2010/01/biotamiloutputwav.MP3
முனைவர். K.R. ஸ்ரீதர் அமெரிக்காவிலுள்ள உலகின் சிறந்த ஆராய்ச்சி நிறுவனமான “நாசா ” வில் ( NASA ) பணியாற்றியவர். பணிக்குப் பின் தனது ஆராய்ச்சியை சுத்தமான, குறைந்த செலவில் மின்சாரம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு, அதில் வெற்றி பெற்று “புளூம்எனர்ஜி கார்பெரேஷன்” எனும் நிறுவனத்தை உருவாக்கி புளூம்பாக்ஸ் எனும் பெட்டியை உற்பத்தி செய்கிறார். அதனை பிரபல நிறுவனங்களான கூகுள், இபே போன்ற நிறுவனங்கள் உபயோகித்து லட்சக் கணக்கான டாலர்களை மிச்சப்படுத்துகின்றனர். இன்னும் சில ஆண்டுகளில் கையடக்கப் பெட்டியில் நமது வீட்டிற்குத் தேவையான மின்சாரத்தை 24 மணிநேரம் 365 நாட்களும் தங்குதடையின்றி பெறமுடியும். சூரியசக்தி, காற்றாலை போன்றவற்றில் தடை ஏற்படும். இதில் அந்த தொல்லையில்லை என்பது இதன் சிறப்பு.
அதன் வீடீயோ காட்சி.
அவரது நிறுவனம் பற்றி அறிய கீழ்கண்ட தொடர்பை உபயோகியுங்கள்.
http://www.bloomenergy.com/
முதல் கண்டுபிடிப்பிற்கு மரம், மூங்கில் வளர்ப்பு ஊக்குவிக்கப்படுவதால் பசுமையான இந்தியாவை காண முடியும். விவசாயத்தில் மறுமலர்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளது. இரண்டாவது கண்டுபிடிப்பால் அனல் மின் நிலைய பயன்பாட்டை குறைப்பதால் சுற்றுச்சுழல் மாசுபாட்டைக் குறைக்க முடியும். மத்திய, மாநில அரசுகள் இந்த இரு கண்டுபிடிப்புக்களையும் நமது நாட்டில் செயல்படுத்தினால் நிறைய செலவினங்களை தவிர்த்து சுற்றுச் சுழலை எளிதாக காப்பாற்ற இயலும். பெரிய நிறுவனங்களும் இதனை செயல்படுத்தலாம். அவ்வாறு செய்ய இவ்வலைப் பூ வாழ்த்துகிறது.


பெரிய மழலை பட்டாளமே அங்கு இருந்தார்கள். மரத்தை காப்பாற்றிய பெருமிதம் அவர்கள் முகத்தில் இருந்தது. குழந்தைகளின் பெற்றொர், ஆட்டோ ஓட்டுனர்கள், கடை உரிமையாளர்கள் என அனைவரும் அதில் பெருமிதம் கொள்வதோடு மேலும் மரங்களை வளர்க்கவும், பாதுகாக்கவும் ஆவலாய் இருப்பது எனக்கு மேலும் உற்சாகம் தந்தது. இந்த சமூக அக்கறைதான் நம்மை காப்பாற்றிக் கொண்டிருக்கின்றது என்பதே உண்மை.
இக்குழந்தைகளின் மனதில் இயற்கையை காப்பாற்ற வேண்டும் என்ற விதையை இங்குள்ள பெரியவர்கள் விதைத்திருக்கிறார்கள் அது மிக பெரிய விருட்சமாக வளர எல்லா வரங்களையும் பெற்று மேலும் சேவை செய்ய இவ்வலைப் பூ வாழ்த்துகிறது.. இதுபோன்று பல கோடி குழந்தைகள், மக்கள் இந்த உலகத்திற்கு தேவை.


எஞ்சினை தாவர எண்ணைக்கு சிறப்பாக மாற்றாமல் தடம் மாறி எரிபொருள் “கச்சா எண்ணை” என்று ஆனபோது மேற்கண்ட அனைத்து நிகழ்வுகளும் நடந்து இன்று அழிவின் எல்லைக்கு வந்தவுடன் “ஞானம் பிறந்து” மறுபடியும் “பயோ-டீசல்” என பெருமளவு தொகையுடன் ஆராய்ச்சிகள். அதிலும் நம் நாட்டில் நன்கு விளையும் புன்னை, புங்கன் போன்ற வறட்சியை தாங்கி வளரும், நோய் சற்று குறைவான சுற்று சுழலை மேம்படுத்தும் தாவர வகைகளை விடுத்து ஜெட்ரோபாவில் அதிக கவனம் ஓரு நெருடல்தான். உணவு பொருட்களையும் “பயோடீசலாக” மாற்ற நினைப்பது ஏழை மற்றும் வளரும் நாடுகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
5 பில்லியன் நஷ்ட ஈடு கேட்கப்பட்டு பின் மிக குறைவான தொகைக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் சுற்றுசுழல் மாசுபாடு இன்று வரை தொடர்கிறது.




