
ஆஸ்திரேலியக் கடற்கரைகளில் திமிங்கலங்கள் கரை ஒதுங்குவது அதிகமாகி வருகிறது. அவற்றை மீண்டும் கடலில் கொண்டு போய் விடும் முயற்சியில் பல்வேறு அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் இவ்வாறு கரைஒதுங்கும் சம்பவங்கள் மேலும் அதிகரிக்க உள்ளது என்று ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கரையொதுங்குவதற்கு வெப்பமயமாதல் பிரச்சனைதான் காரணம் என்று அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள கடற்கரை ஒன்றில் கடந்த நான்கு மாதங்களில் மட்டும் 500க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. இவற்றில் பெரும்பாலானவை உயிரிழந்தன. 1920ஆம் ஆண்டிலிருந்து இவ்வாறு நிகழ்வது வாடிக்கையாகி விட்டாலும், அண்மையில் இந்த சம்பவங்கள் அதிகரித்து விட்டன. உணவைத்தேடி இடம் பெயர்வதால்தான் இந்தப் பிரச்சனை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
நன்றி: தீக்கதிர் 05-04-2009 படம் உதவி : வலைதளம்
No comments:
Post a Comment