Tuesday, July 19, 2011

மாநிலம் தழுவிய உழவர் தினக் கொண்டாட்டம்.


கோவை வேளாண்மை பல்கலைக் கழக வளாகத்தில் வருகின்ற வெள்ளி (22-07-2011) முதல் ஞாயிறு (24-07-2011) வரை 3 நாட்களுக்கு மாநிலம் தழுவிய உழவர் தின கொண்டாட்டம்  நடை பெறவுள்ளது. அச்சமயம் 5 விவசாய அன்பர்களுக்கு வேளாண் செம்மல் விருது வழங்கப்படவுள்ளது. புதிய பயிர் வகைகள் மற்றும் பண்ணைக் கருவிகளை வெளியிடவுள்ளனர். தமிழகத்திலுள்ள வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்களும், வேளாண்மை அறிவியல் நிலையங்களும் (KVK)   தங்கள் கண்டுபிடிப்புக்களை பார்வைக்கு வைக்கின்றனர். பல்வேறு கருத்தரங்கங்களும் நடைபெறவுள்ளது. அனைவரும் கலந்துகொண்டு பயன் பெறுவோம்.

No comments: