 |
திருமதி. V. மஞ்சுளா M.Sc., M.Phil. |
படிப்பதிற்கு ஏதோ கதை என்று நினைக்கத் தோன்றும். செப்டம்பர் மாதம் எரிடீரியா (வடகிழக்கு ஆப்பிரிக்கா ) நாட்டின் ஹமெல்மாலோ விவசாய கல்லூரியில் பணியாற்றும் திருமதி. V. மஞ்சுளா M.Sc., M.Phil. அவர்களின் ஆப்பிரிக்க விவசாயம் பற்றிய உரையையும் பின்பு அதைப் பற்றி உரையாடவும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களது விவசாய முறை எளிமையாகவும் உபோகமாகவும் இருப்பதால் முக்கியமானவைகளை மாத்திரம் உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்.
 |
மரங்களுடன் கூடிய விவசாயம் |
இயற்கை மற்றும் வாழ்கை முறை :
சஹாரா பாலைவனத்தின் தாக்கம் (
Sub-Saharan Africa )இருப்பதால் இந்த பகுதிகள் மிகுந்த வறட்சியுடன் மழையளவு மிக குறைவாக உள்ளது. ஆனால் விவசாயமும் நடைபெறுகிறது. பொதுவாக ஆண்கள் கட்டாய இராணுவ சேவைகளுக்கு செல்வதால் 95% பெண்களாலும் குழந்தைகளாலும் விவசாயம் பராமரிக்கப்படுகிறது. பொருளாதார சிக்கல்கள் இருப்பதால் செயற்கை உரம், பூச்சிக் கொல்லி தவிர்க்கபடுகிறது. விதைகளும் பாரம்பரிய முறைபடி சேமிக்கப்பட்டு உபயோகப்படுத்தபடுகிறது. உழவு செய்யப்படுவதில்லை. மூடாக்கு வெகுவாக உபயோகத்தில் உண்டு. பணப் பயிர் இல்லை. கிடைக்கின்ற மழை நீரை பல முறைகளில் சேமித்து பல்வேறு பயன்கள் தரும் மர வளர்ப்பை மையமாக வைத்து விவசாயம் செய்கிறார்கள்.
 |
மரங்களுக்கிடையே உணவுப் பயிர்கள் |
குறிப்பிட்ட அகலத்திற்கு மரங்களை நட்டு இடையே உணவு பயிர்களை ( Alley Cropping )பயிர் செய்கிறார்கள். அதுவும் தனிப்பயிராக (Mono Crop) இல்லாமல் பல வகை (Mixed Crops) பயிர்களை சுழற்சி முறையில் செய்கிறார்கள். மரத்தின் இலைகளும், குச்சிகளும் மூடாக்கு இட பயன்படுகிறது பின்பு அதுவே உரமாகின்றது.
விதைகளைக் கூட ஜேப் ப்ளான்டர் ( Jab Planter ) என்ற எளிய கருவி மூலம் உரத்துடன் விதைக்கிறார்கள்.
இது ஏறக்குறைய 17 வது நூற்றாண்டில் தென் அமெரிக்காவில் புழக்கத்தில் இருந்ததின் நவீன வடிவம். எண்ணிப் பார்த்தால் 925 -950 மிமீ மழை பெறும் தமிழகத்தில் விவசாயம் போராட்டமாக மாறியுள்ளது. பலருக்கும் வேறுபட்ட கருத்துக்கள் இருக்கும் பின்னூட்டம் மூலம் தெரிவித்தால் எல்லோருக்கும் உபயோகமாக இருக்கும்.
PHOTOS SOURCE : Mrs. V. Manjula M.Sc.,M.Phil