Friday, October 29, 2010

அழகு தோட்டம் அமைக்க ஒரு நாள் பயிற்சி.

நகரங்களில் நிலபகுதியை தாவரங்களுடன் மனிதனால் உருவாக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு எழிலூட்டி இயற்கையை மனிதனின் இரசனைகேற்ப உருவாக்கி கொஞ்சம் சுற்றுச்சுழலை காப்பாற்றும் கலை (Landscape Gardening.). இன்று மிக பிரபலமாகி வரும் கலை. மிக எளிதாகவும் பொருளீட்ட உதவுகிறது. இதற்கான ஒருநாள் பயிற்சியை சென்னையில் நடத்துகிறார்கள்.
தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி.

பேராசிரியர் மற்றும் தலைவர்
நகர்புறத் தோட்டகலை வளர்ச்சி மையம்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம்
44, 6 வது அவென்யூ அண்ணா நகர்,
சென்னை - 600 040

தொலைபேசி : 044 - 2626 3484,  044 - 42170506


இதில் சில ஆச்சரியங்களையும் அனுபவித்திருக்கிறேன். இந்து நாளிதழில் “ஸாமியா” என்ற பெரிதாக வளர்ந்த செடி ரூ1000/= என்று படித்தேன்.
நாட்டில் இவ்வளவு விலை கொடுத்து வாங்க ஆட்கள் இருக்கிறார்களா என்ற எண்ணம். சென்ற வருடம் கேரளா சென்றிருந்த போது அதனையும் முறியடித்தது மிக சிறிய “அக்லோனிமா” என்ற செடி. ரூ.5000/= என்ற விலையுடன் விற்பனைக்கு இருந்தது.

இந்தியாவில் தான் இருக்கிறோமா ? என்று எண்ணினேன். உங்களுக்கும் என் எண்ணம் போன்று தோன்றிருக்கும். எனவே இந்த எழிலூட்டும் கலை ஆச்சரியங்கள் நிறைந்த துறை.

6 comments:

மதுரை சரவணன் said...

is it so... happy . thanks for sharing.

வின்சென்ட். said...

திரு. சரவணன்

உங்கள் வருகைக்கு நன்றி.

life after retirement said...

My Dear Vincent Sir,
I appreciate you posting photo of aarogyakudumbam in your famous site
thanks

Chitra said...

நல்ல செய்தி. தகவலுக்கு நன்றிங்க.

வின்சென்ட். said...

டாக்டர் அவர்களுக்கு

அந்த இடத்தை அற்புதமாக வடிவமைத்து “ஆரோக்கியமான” இடமாக மாற்றி அங்கு நட்புகளையும், உறவுகளையும் ஏற்படுத்தி ஆரோக்கிய குடும்பங்களை உருவாக்கி இயல்பான வாழ்கையின் நோக்கத்தை தருகிறீர்கள். அதனை வலைப் பூவில் பதிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் பணி மேலும் மேலும் சிறப்பாக அமைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிராத்தனை செய்கிறேன். உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

மேலும் “ஆரோக்கிய குடும்பம்” பற்றி அறிந்து கொள்ள:-
http://www.aarogyakudumbam.org/

வின்சென்ட். said...

திருமதி.சித்ரா

உங்கள் வருகைக்கு நன்றி.