Wednesday, July 8, 2009

அரிதாக கிடைக்கும் சில தருணங்கள்.

இன்று மாலை வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்த போது ஒற்றை காட்டு ஆண் யானை சாலையின் மிக அருகே. நிறுத்தி புகைபடம் எடுக்குமளவிற்கு மனதில் தைரியம் !!. எப்படி வந்தது? இடையில் இருக்கும் அந்த கம்பிக்குத்தான் எத்தனை சக்தி.!!!!!!

அமைதியான பார்வை
போதுமான உணவு மற்றும் நீர் இல்லாமையால் வன விலங்குகள் படும் அவதி நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகின்றது. காரணம் பருவ மழை சரியான நேரத்தில் பெய்யாதது. வனவிலங்குகள் பாதுகாக்கப்பட வேண்டுமானால் வனங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். வளமான நாட்டிற்கு அறிகுறி அந்நாட்டின் வன பரப்புத்தான். எனவே வன பரப்பை அதிகமாக்குவோம்.