
வாழ்வதிலும் பொருள் வேண்டும்.
நண்பரின் விசிடிங் கார்டில் பார்த்த வாசகம். “வாழ்வதிலும் பொருள் வேண்டும்” என்ற வாசகத்திற்கு ஏற்ப வாழ்ந்து கொண்டிருப்பவர் திருமதி.திம்மக்கா. சாலையின் இருபுறமும் வரிசையாக நட்ட மரங்களுக்காக கிடைத்த பெயர் சாலுமரதா திம்மக்கா. கர்நாடக மாநிலத்தில் ஃகுப்பீ கிராமத்தில் பிறந்த திம்மக்கா கல்வி பயிலாதவர், விவசாயக்கூலி. உடல் குறையுள்ள திரு.சிக்கய்யாவை மணம் முடித்தாலும் குழந்தை பாக்கியம் இன்மையால் ஊராரின் பேச்சுக்கு ஆளாக நேர்ந்தது. பலர் வற்புறுத்தியும் மறுமணம் செய்ய மறுத்த கணவருடன் வாழ்வதற்கு பொருளுக்காக கல் குவாரியில் கல் உடைத்தும், வாழ்வதிலும் பொருள் இருக்கவேண்டும் என்பதற்காக ஹுலிக்கல் மற்றும் கடூருக்கு இடையே இருக்கும் நான்கு கி.மீ நீளமுள்ள அப்போதைய மண் சாலையில் அவர்கள் வளர்த்த 294 மரங்கள்.



1991 ஆண்டு கணவர் திரு சிக்கையாவை இழந்த திம்மக்காவின் வாழ்க்கை 1995 ஆண்டு முதல் மாற துவங்கியது. அவர்கள் செய்த தன்னலமற்ற உழைப்பிற்கு மாநில,தேசீய மற்றும் சர்வதேச அளவில் அங்கீகாரங்களும், பரிசுகளும் கிடைத்தன. அந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள கணவர் சிக்கையா உயிருடன் இல்லை என்பதுதான் குறை. இன்று அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் இவரது பெயரில் சுற்றுச்சூழல் கல்வி போதிக்கப்படுகிறது. ஆனால் இவரது விருப்பம் தனது கிராமத்தில் ஒரு மருத்துவ மனை வேண்டுமென்பதே.
இன்று நாம் காணும் படித்த மக்கள் தங்கள் வீட்டிற்கருகில் கூட மரங்கள் இருக்க விரும்புவது இல்லை என்பதே உண்மை. நமது நாட்டை வளமான நாடாக மாற்ற தேவை கிராமத்திற்கு ஒரு சாலுமரதா திம்மக்கா.
Salumaradha Thimmakka
Kudur
Hulikal Post - 561101
Magadi Taluka,
Karnataka
Source: goodnewsindia.com
4 comments:
Great mam!! Your are our mother Earth!! God be with you...
திரு.சசிதரன்
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.
பெரியோருக்கு எனது அன்பு வணக்கங்கள்.
திரு.இளங்கோ
உங்கள் வருகைக்குமிக்க நன்றி.
Post a Comment