Thursday, February 19, 2009

மழைநீர் சேகரிப்புத் திட்டம் - பண்ணை குட்டைகள்.

மழைநீர் சேமிப்பு குளங்களை விவசாய நிலங்களில் வெட்டுவதற்கு அரசு உதவி செய்கிறது. இத்திட்டங்கள் பற்றி விவசாய அன்பர்கள் அறிந்து பயன்படுத்தினால் நீர் நிர்வாகத்தில் கணிசமான அளவு தமிழகம் முன்னேற்றம் பெறும். அந்தந்த பகுதி விவசாய அலுவலகத்தில் இதன் விபரங்கள் கிடைக்கும்.
மழையளவு குறைந்த பல்லடம் தாலூக்காவில் அமைந்த இந்த குளத்தில் கிடைக்கின்ற மழைநீர் கீழே சென்றுவிடாமலிருக்க பாலித்தீன் கொண்டு லைனிங் செய்து விவசாயத்திற்கு பயன்படுத்துகிறார்கள்.
இந்த குளம் மழையளவு அதிகம் பெறும் பொள்ளாச்சி தாலூக்காவில் அமைந்துள்ளது.
இது போன்று பண்ணைகளில் மழைநீர் சேகரித்து விவசாயம் செய்யும் போது நாம் நீரின் கார அமில (pH) அளவைப் பற்றி கவலை கொள்ளத் தேவையில்லை. மேலும் நிலத்தடிநீரும் உயர்வதால் நாம் கவலையன்றி விவசாயம் செய்யலாம். மழை நீர் சேமிப்பின் பயன்கள் பற்றிய எனது பழைய பதிவினைப் படிக்க
http://maravalam.blogspot.com/2007/07/blog-post_16.html
மழைநீர் சேமிப்பு சென்னையில் ஏற்படுத்தியுள்ள ஆய்வைப் பற்றிப் படித்தேன் அதனை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
*தமிழகத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு முன் மழைநீர் சேகரிப்புத் திட்டம் கட்டாயமாக்கப்பட்டது. சென்னையில் இத்திட்டம் அமுல்படுத்தப்பட்ட ஐந்து லட்சம் வீடுகளில் நீர்மட்டம் 50 சதம் வரை உயர்ந்திருக்கிறது என சென்னை மாநகராட்சி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. வில்லிவாக்கத்தில் குடியிருக்கும் ஜமுனா ராமன் என்பவர் இந்து பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் தான் கண்கூடாகக் கண்ட பலனைப் பற்றி விரிவாகக் கூறுகிறார்.“வில்லிவாக்கத்தில் ஆறு ஆண்டுகளுக்கு முன் நான் வீடு வாங்கிய போது 150 அடி குழாய்க்கிணறு தோண்டுவதற்கு கணிசமாகச் செலவிட வேண்டியிருந்தது. அப்படியும் உப்புத் தண்ணீர்தான் கிடைத்தது. முன்னர் எங்களது நீர்த்தேவைகளுக்கு குழாய்த் தண்ணீரையும் தனியார் லாரிகள் விநியோகிக்கும் தண்ணீரையும் மட்டுமே நம்பியிருக்க வேண்டியிருந்தது. ஆனால் தற்போது நான் மட்டுமல்ல, எங்கள் பகுதியில் உள்ளவர்கள் வீடுகளில் நிலத்தடி நீர் நல்ல தண்ணீராக மாறியுள்ளது. அந்த நீரைக் குடிப்பதற்குத் தவிர மற்ற தேவைகளுக்கும் உபயோகித்துக் கொள்ள முடிகிறது. இதற்குக் காரணம் மழைநீர் சேகரிப்புத் திட்டம்தான்” என்கிறார் அவர்.சென்னை மாநகரத்தில் நீர்மட்டம் கடந்த ஐந்து ஆண்டுகளில் மூன்றிலிருந்து ஆறு மீட்டர் வரை உயர்ந்திருப்பதாக மெட்ரோவாட்டர் அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் அவர்களது ஆய்வில் தண்ணீரின் அளவு மட்டுமல்ல, தரமும் கூடியிருப்பதாகத் தெரியவந்துள்ளது. நீரில் கரைந்துள்ள மொத்த உப்பின் அளவைத் தெரிந்து கொள்ள பி.பி.எம். (Parts per million) என்ற அளவுகோல் பயன்படுத்தப்படுகிறது. அனுமதிக்கப்பட்ட உப்பின் அளவு 500 பி.பி.எம். தான். அதிக பட்சமாக 2000 பி.பி.எம். வரை இருக்க லாம். கடந்த ஐந்து ஆண்டுகளில் சென்னையின் பல பகுதிகளில் உள்ள நீரில் உப்பின் அளவு கணிசமாகக் குறைந்திருக்கிறது. உதாரணமாக, சிந்தாதிரிப் பேட்டையில் ஐந்து ஆண்டுகளுக்கு முன் 4900 பி.பி.எம். ஆக இருந்தது. தற்போது அது 500 பி.பி.எம். ஆகக் குறைந்திருக்கிறது. ஒவ்வொரு பருவமழை தொடங்கு முன் மெட்ரோ அதிகாரிகள் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ஆங்காங்கு சில இடங்களில் பரிசோதித்து விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி எடுத்தது நல்ல பலனை அளித்துள்ளது. ஆனால் போதுமான அளவு குடிநீர் கிடைக்கும் காலங்களில் இந்த அமைப்புகளைப் பராமரிப்பதில் மக்கள் அவ்வளவாக அக்கறை செலுத்துவதில்லை என்கின்றனர் அதிகாரிகள்.*
- பேராசிரியர் கே.ராஜு -
* நன்றி : தீக்கதிர்/கோவை 19-02-2009

4 comments:

Anbey Sivam said...

Excellent artical about water management, could you please provide me a contact number of the person who created this wonderful tank.

My Mail id sivacit@gmail.com

வின்சென்ட். said...

திரு.அன்பே சிவம்

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி. திரு.பாபு 98944-22180

Anonymous said...

dear vincent
i have visited your website.many useful informations are there.
from:
trsripathy@gmail.com
thank u..

வின்சென்ட். said...

திரு.ஸ்ரீபதி

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.