Monday, February 16, 2009

தமிழ்நாட்டுப் பாம்புகள்

பாம்புகளின் எண்ணிக்கை மிக மிக குறைந்து இன்று பூங்காக்களில் காட்சி உயிராக இருக்கும் அளவிற்கு மோசமான நிலைக்கு வந்து விட்டது. “பாம்பை கண்டால் படையும் நடுங்கும்” என்பது பழமொழி.. ஆனால் பல்வேறு காரணங்களால் இதன் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இதனால் எலிகளின் எண்ணிக்கையும் தொல்லையும் அதிகரித்துவிட்டது(வடகிழக்கு மாநிலங்களில் மூங்கில் பூக்கிறதென்றால் அம்மாநில அரசுகள் இந்த எலிகளைக் கண்டு பயப்படுகின்றனர் காரணம் அது செய்யும் உணவு நாசம்.) அது மாத்திரமன்று கொடிய தொற்று நோய்களை பரப்புவதும் இந்த எலிகளே. எலிகளின் இயற்கை எதிரி பாம்புதான். ஆனால் நாம் பாம்பை கொல்வதிலேயே கவனம் செலுத்துகிறோம். ஆனால் பிச்சாண்டிகுளம் பையோரிசோர்ஸ் சென்டர் “தமிழ்நாட்டுப் பாம்புகள்” என்னும் ஒரு ஆவணத்தை படங்களுடன் வெளியிட்டிருக்கிறார்கள். அதன் வகைகள், உடலமைப்பு, உணவு, வாழ்விடம், இனப்பெருக்க முறை,ஒவ்வொன்றின் விஷத்தன்மை என்று மிக சுருக்கமாக ஆனால் தெளிவாக வெளியிட்டிருக்கிறார்கள். இயற்கை சங்கிலியில் பாம்பும் ஒரு அம்சமே.

இதன் விற்பனை தொகை இயற்கை கல்விக்கும், தென்இந்தியாவில் வெப்பமண்டல காடுகளின் ஆராய்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் உதவுகிறது. எனவே இந்த ஆவணத்தை வாங்குவதன் மூலம் நாம் இயற்கையின் ஒரு படைப்பை அறிந்து கொள்ளுகிறோம் கூடவே கல்வி, ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கும் உதவுகிறோம். பள்ளி, கல்லூரி, விவசாயிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்களிடம் அவசியம் இருக்கவேண்டிய ஒரு பயனுள்ள தொகுப்பு.

மேலும் தகவல் மற்றும் ஆவணத்தைப் பெற:

PITCHANDIKULAM BIORESOURCE CENTRE,
AUROVILLE - 605 101.
Email : tdef@auroville.org.in

மற்றும்

ECO GREEN UNIT
No 44, DIVINE,
Lakshmi Nagar,
Ganapathi (po),
Coimbatore. 641 006
9442416767, 9443582598

No comments: