இந்தியாவில் வருடத்திற்கு சுமார் 5,000,000,000 டன் அளவிற்கு மண் அரிப்பு ஏற்படுவதாக ''வெட்டி வேர் இன்டர்நேஷ்னல் பிளாக்''கூறுகிறது. அதில் 30% கடலிலும்,10% அணைகளிலும் சேர்வதாகவும், 60% இடமாற்றம் அடைவதாகவும் கூறுகிறது. பொதுவாக நீரினால் தான் அதிகம் மண் அரிப்பு எற்படும்.இதில் கவனிக்கபடவேண்டியது, நீர் திரும்ப நீர் சூழற்சி முறையில் மேலே சென்றுவிடும். ஆனால் மண் ???




சென்ற மாதம் பெய்த வடகிழக்கு பருவமழை முடிந்தவுடன் என் கண்களுக்குப்பட்ட சில மண் அரிப்பு காட்சிகள். விவசாயத்தில் மிக முக்கியமானது மண் அரிப்பை தடுப்பது.Top Soil எனப்படும் வளமான மேல் மண் அது அடித்துச் செல்லப்பட்டால் விளைச்சல் குறையும். திரும்பவும் வளம் சேர்க்கவேண்டும். எனவே நல்ல விளைச்சலைப் பெற மண் அரிப்பை தடுப்பது மிக மிக அவசியம். வரும் முன் காப்போம்.
Prevention is Better than Cure.
No comments:
Post a Comment