Monday, July 9, 2012

விதை காப்பாளர்கள் – (4)


EarthE Award அங்கீகாரம்
Dr.வந்தனா சிவா சூழலியல், நிலம், நீர், காடுகள், இயற்கை விவசாயம், விதைஉரிமை போன்றவைகளில் மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கவும், பாதுகாக்கவும் போராடி வருகிறார். இதுபோன்ற விஷயங்களில் உலகத்திற்கு இந்தியாவின் முகம் Dr.வந்தனா சிவா அவர்கள் தான் என்றால் மிகையில்லை. 1982ஆம் ஆண்டு தனது முனைவர் பட்டம் பெற்ற இயற்பியல் துறையை விட்டு அறிவியல், தொழில்நுட்ப, சூழலியல் ஆராய்ச்சி அறக்கட்டளையை (RFSTE) Research Foundation for Science, technology and Ecology (India) தொடங்கினார். பின்பு  நவதான்யா என்ற அமைப்பை ஏற்படுத்தி பாரம்பரிய விதைகளை பாதுகாத்து 5,00,000 விவசாயிகளிடம் அதனை ஒரு விழாவாக நடத்தி பாரம்பரிய விதைகளின் மகத்துவத்தை பரப்பி வருகிறார். விதை சேமிப்பை பெண்களிடம் மிக சிறப்பாக கொண்டு சென்றுள்ளார். விதைகளுக்கான பள்ளியை (Bija Vidyapeeth) உத்தரகாந் மாநிலத்தில் நிறுவியுள்ளார். மாற்று நோபல் பரிசு என்று அழைக்கப்படும் "வாழ்வாதார உரிமை விருது" 1993ஆம் ஆண்டு பெற்றவர். 2010 இல் சிட்னி அமைதி பரிசு என்று நிறைய உலக அளவிலான பரிசுகள் பெற்றவர். இந்த ஆண்டு 2012 எர்த்இ (EarthE Award) பரிசுப் பத்திரம் இவருது உருவப் படத்துடன் அளிக்கப்படவுள்ளது இவரது உழைப்பிற்கும், சேவைக்கும் கிடைத்த உலக அங்கீகாரம்.  20 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். உயிரோடு உலாவ”,   “பசுமைப் புரட்சியின் வன்முறை ஆகிய நூல்கள் ஏற்கெனவே தமிழில்  மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. பாரம்பரிய விதைகளை மீட்டெடுத்து பாதுகாத்து மக்களிடம் பிரபலமாக்க இவர் எடுத்துக் கொள்ளும் முயற்சிகள் அனைத்தையும் வாழ்த்தி வரவேற்பதோடு நில்லாமல் இவரது செயல்பாடுகளை நம் விவசாய நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டாலே இவரது பணிக்கு நாம் செய்யும் பேருதவியாகும். மேலும் நவதானியவைப் பற்றி அறிந்து கொள்ள http://www.navdanya.org


ஒரு சிறிய வீடியோ.




விதை காப்பாளர்கள் (1) 
விதை காப்பாளர்கள் (2) 
விதை காப்பாளர்கள் (3)

No comments: