
மிக எளிமையான முறையில் வேருக்காக வளர்க்க பெரிய பைகளில் வளர்த்த பின்பு பையை அகற்றி வேரை மிக எளிதாக அறுவடை செய்யலாம். தற்சமயம் மிக குறைந்த விலையில் கிடைக்கும் அரிசி மற்றும் சிமென்ட் சாக்குப் பைகளில் வளர்த்தலாம். நல்ல வாசனையுடன் தரமாக இருக்க 1 முதல் 11/2 வருடங்கள் ஆகும். எங்கு வேண்டுமானலும் வளர்க்கலாம் குறிப்பாக மொட்டை மாடிக்களில் அதிக சூரிய ஒளியும், சமயலறை நீர் மறு உபயோகத்திற்கு கிடைப்பதாலும், அதிகமாக கரிம நிலைபாட்டில் ( Carbon sequestration ) உதவுவதால் நகரங்களில் வளர்க்க மிகவும் ஏற்றது. மிக கொஞ்சமாக மண், தேங்காய்மஞ்சு (மிக குறைந்த Ec < 1 அளவில்), சம அளவு மண் புழு உரம், வேம் இவற்றை கலந்து பைகளில் நிரப்பி 3 அல்லது 4 சிம்புகளை அல்லது நெட்பாட் நாற்றுக்களை வைக்க நமது வேருக்காக வெட்டிவேர் வளர்ப்பு ஆரம்பமாகிவிட்டது எனலாம். தேங்காய்மஞ்சு இருப்பதால் அதிகநாட்கள் நீரை தக்க வைத்துக்கொள்ளும். அதிக நீர் இருந்தாலும் பிரச்சனை இல்லை. வேம் வேரின் வளர்ச்சிக்கு நன்கு உதவும். மண் புழு உரம் செடிகளுக்கு நல்ல வளர்ச்சியை தரும். முதல் தரமான வேரினை அறுவடை செய்யலாம்.முயற்சி செய்யுங்கள். முயற்சி திருவினையாக்கும்.
5 comments:
்நன்றி திரு வின்சண்ட் அவர்களே. அந்தப் பையின் விலை, உள்ளே போடும் பொருள்களின் விலை விபரம், மற்றும் கிடைக்கும் இடம் ஆகியவை தெறிவித்திருந்தால் உபயோகமாக இருக்கும். நாற்று நீங்களே கொடுப்பீர்கள் என்று நினைக்கிறேன். மிக்க நன்றி.
திரு.குப்புச்சாமி அவர்களுக்கு
உங்கள் வருகைக்கு நன்றி.அரிசி அல்லது சிமெண்ட் சாக்குப் பையாக இருந்தால் அதிக பட்சம் ரூ.2/=,தென்னை நார் கழிவு கிலோ ரூ.4 - 6 (Ec <1), மண்புழு உரம் கிலோ ரூ.4 - 6.
நல்ல தகவல். நன்றி
திரு.கபீஷ்
உங்கள் வருகைக்கு நன்றி.
Post a Comment