Wednesday, November 4, 2009

வேளாண்மை அறிவியல் நிலையங்களின் தேசிய மாநாடு - கோவை

தேசிய அளவில் 569 வேளாண்மை அறிவியல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. அவற்றில் 30, தமிழகத்தில் உள்ளது. இதில் 14 அறிவியல் நிலையங்கள் கோவை வேளாண்மை பல்கலைகழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இம்மாநாட்டில் தமிழக முதல்வர் அவர்களும், மத்திய வேளாண்மை துறை அமைச்சர் திரு. சரத்பவார் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த வேளாண்மை விஞ்ஞானிகள் பங்கேற்கவுள்ள இம்மாநாட்டில் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகளின் அனுபவங்கள், வெற்றிக் கதைகள், சிறப்பு தொழில் நுட்ப பரிமாற்றம் ஆகியவை இடம் பெறும்.

இடம் : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோவை.
நாள் : நவம்ர் 6,7,8 தேதிகள்.

No comments: