Wednesday, June 20, 2012

ரியோ+20(Rio+20) நிலையான அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகள் மாநாடு



20 ஆண்டுகளுக்கு முன்னர்   ரியோடி ஜெனிரோவில் நடைபெற்ற ஐ.நா அனைத்துலக பூமி மாநாட்டின் தொடர்ச்சியாக, தற்போது ரியோ+20 என்ற நிலையான அபிவிருத்திக்கான ஐ.நா மாநாடு இன்று தொடங்கி 3 நாட்கள் அதே ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெறவிருக்கின்றது. மாநாட்டின் இரு முக்கிய நோக்கங்களில் ஒன்று எவ்வாறு பசுமை பொருளாதாரத்தை உருவாக்கி நிலையான வளங்குன்றா வாழ்வாதாரத்தை தந்து மக்களை வறுமையிலிருந்து மீட்பது. மற்றொன்று எவ்வாறு உலக நாடுகளிடையே கட்டமைப்பை ஏற்படுத்தி வளங்குன்றா வளர்ச்சியை நிலைநிறுத்துவது.

பசுமை பொருளாதாரம் பற்றிக் காண : http://maravalam.blogspot.in/2012/06/2012.html

தற்போதைய உலக மக்களின் நிலைமை.

இன்று உலக ஜனதொகை 7 பில்லியன். 2050 இது 9 பில்லியன் ஆகும்

ஐந்தில் ஒருவர் அதாவது 1.4 பில்லியன் மக்கள் ஒரு நாளைக்கு $1.25 (சுமார்.ரூ.68/=) கீழே உள்ள தொகையில் வாழ்கிறார்கள்.

1.5 பில்லியன் மக்கள் மின்சார பெற வழியின்றி இருக்கிறார்கள்.

2.5 பில்லியன் மக்கள் கழிவறை வசதியின்றி வாழ்கிறார்கள்.

சுமார் 1 பில்லியன் மக்கள் பட்டினியாய் படுக்கைக்கு செல்கிறார்கள்.

பசுமை இல்ல வாயு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இப்படியே தொடர்ந்து உயர்ந்தால் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் நன்கு அறிந்த உயிரினங்கள் மறைந்துவிடும்.


 இந்த நிலைமாறி நமது குழந்தைகளுக்கும், பேரகுழந்தைகளுக்கும் வருங்காலங்களில் அமைதியான வாழவைத்தர வேண்டுமானால் இந்த ரியோ+20 மாநாடு வெற்றி பெற வேண்டும். ரியோ+20 மாநாடு வெற்றி பெற இவ்வலைப் பூ மனமார்ந்த வாழ்த்துகளை உலக தலைவர்களுக்கு சமர்பிக்கின்றது.

“Rio+20 will be one of the most important global meetings on sustainable development in our time.”
– UN Secretary-General Ban Ki-moon


2 comments:

kuppusamy said...

நல்ல தகவல் மிக்க நன்றி. நன்கு நடக்க வாழ்த்துக்கள்

வின்சென்ட். said...

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.