Saturday, October 23, 2010

மாடித் தோட்டம் அமைக்க ஒருநாள் பயிற்சி.

உலகின் பல நாடுகளிலும் “நகர விவசாயம்” பல்வேறு காரணங்களுக்காக பிரபலமாகி வருகிறது. மிக சிறத்த இந்த பொழுதுபோக்கை (Hobby) முனைப்புடன் செய்தால் உடல் ஆரோக்கியமடைவதுடன் தொழிலாக மாற்றி வருவாயையும் ஈட்டமுடியும். அதற்கான ஒருநாள் பயிற்சியை சென்னையில் நடத்துகிறார்கள். முதியோர், வீட்டிலிருப்போர், மாணவர்கள், தாவரங்களை விரும்பி வளர்ப்போர், இளவயதினர் மற்றும் சுய உதவிகுழுவினருக்கும் ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்வோம். வடகிழக்கு பருவமழை துவங்கப் போகும் நேரத்தில் பயிற்சி கிடைப்பதால் உடனே செயல்பட முடியும்.

தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி :

பேராசிரியர் மற்றம் தலைவர்
நகர்ப்புறத் தோட்டகலை வளர்ச்சி மையம்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம்
44, 6 வது அவென்யூ அண்ணா நகர்,
சென்னை 600 040

தொலைபேசி 044-2626 3484

Sunday, October 17, 2010

மாடியில் முள்ளங்கி வளர்ப்பு

அறுவடைக்குப் பின்.
முள்ளங்கி
தாவரவியல் பெயர்: Raphanus sativus

மிக எளிமையாக வளரக் கூடிய தாவரம். உலகம் முழுவதும் இதற்கு வரவேற்பு உண்டு. கிழங்கு மற்றும் இலை ( கீரை ) உணவாகப் பயன்படுகிறது. நிறம், உருவ அமைப்பு போன்றவைகளால் வகைபடுத்தப்படுகிறது. சிறந்த மருத்துவ தன்மை வாய்ந்தது ஆனால் இதிலிருந்து வரும் மணம் காரணமாக மக்கள் விரும்பி உண்பதில்லை.
அறுவடைக்குத் தயார்

இந்த வெள்ளை முள்ளங்கியை மாடித் தோட்டத்தில் மிக நன்றாக வளர்க்க முடியும். நல்ல சூரிய ஒளியும் இலை மக்கும் அதிகமாக இருந்தால் வளர்ச்சியும் எடையும் சிறப்பாக உள்ளது. அறுவடை காலமும் குறைகிறது. பொதுவாக 45 நாட்கள் முதல் 60 நாட்களுக்குள் அறுவடையை முடித்து விடலாம். எனது முதல் அறுவடையை புகைபடங்களாக உங்கள் பார்வைக்கு.

Friday, October 15, 2010

இன்று உலக கை கழுவும் நாள். கை கழுவும் நிகழ்ச்சி சென்னை கின்னஸ் சாதனை

கின்னஸ் சாதனை
பதினைந்தாயிரம் மாணவர்கள் ஒரே நேரத்தில் கை கழுவிய நிகழ்ச்சி, கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது என தமிழக சுகாதாரத்துறை செயலர் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், சுகாதாரமாக கைகளைக் கழுவுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15ம் தேதி, "உலக கை கழுவும் நாளாக' கடைபிடிக்கப்படுகிறது. மேலை நாடுகளில் சிறு கரண்டி மற்றும் முள் கரண்டிகளை உணவு உண்ண பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் 90 சதவீதம் மக்கள் உணவு உண்பதற்கு கைகளையே பயன்படுத்துகின்றனர். கைகள் சுத்தமில்லாமல் இருந்தால், குழந்தைகளுக்கு வயிற்றுநோய், சுகாதாரத் தொற்று ஏற்படுகிறது. உணவு உண்பதற்கு முன்பும், கழிவறையில் இருந்து வந்த பிறகும் சோப்பு போட்டு கை கழுவுதல் மிகவும் அவசியம்.

சிறந்த கை கழுவும் முறை
இதனால், குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களை 25 சதவீதம் கட்டுப்படுத்த முடியும். உலகத்தில் 15 லட்சம் குழந்தைகள் வயிற்று நோயால் இறக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் கை சுத்தம் இல்லாதது தான். இதனடிப்படையில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கடந்த ஆண்டு தமிழக பொது சுகாதாரத்துறை பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து, சென்னை நேரு விளையாட்டு அரங்கில் 15 ஆயிரத்து 115 மாணவர்களை ஒருங்கிணைத்து ஒரே நேரத்தில் கை கழுவும் நிகழ்ச்சியை நடத்தியது. இந்நிகழ்ச்சி "கின்னஸ்' சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது என்று சுப்புராஜ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Source : www.ikmahal.com/