Monday, April 22, 2013

புவிதினம் ஏப்ரல் 22

எனது மனதை உற்சாகப்படுத்திய, பாதித்த இரு நிகழ்வுகளை இந்த புவிதினத்தில் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். எனக்கு ஏற்பட்ட  அதே உற்சாகம், பாதிப்பு உங்களுக்கும் ஏற்படலாம் என எண்ணுகிறேன்.
 



பரளிக்காடு என்ற இந்த  இடத்தில் இறங்கியவுடனே பிரயாணக் களைப்பு மாறி சில் என்ற காற்று தழுவிச் செல்ல என்னையும் அறியாமல் கண்களை மூடி சுத்தமான காற்றையும், சுகமான புங்கமர நிழலையும் அனுபவித்தது வர்ணிக்க வார்தைகள் இல்லை. இந்த நிலையில்தான் நமது முந்தைய சந்ததி நமக்கு இப்புவியை விட்டுச் சென்றார்கள்.

உத்தர பிரதேசத்தின் தலைநகர் லக்னோவில் மத்திய அரசின் நிறுவனமொன்றிற்கு செல்லும் போது எடுத்தது. பசுகளை தெய்வமாக வணங்கும் நம் நாட்டில் உணவிற்காக போராடும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறோம். இந்த நிலையில்தான் நாம் இந்த இப்புவியை அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்லப் போகிறோமா?


சிந்தித்து செயல்பட்டால் மாற்றம் தரமுடியும். முடிவு மனிதனின்  கையில்!!!!

இன்றைய நிலை குறித்த எனது பழைய பதிவு
இன்றைய கிராம நீராதாரம்.

8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மாற்றுவது நம் கையில் உள்ளது...

அனைவரும் சிந்திக்க வேண்டிய விசயம்...

Anonymous said...

நல்ல கேள்வி.

கோவை நேரம் said...

இப்பவும் பரளிக்காடு அதே நிலையில் இருக்கிறதா..அங்கும் இன்னேரம் மாசு படுத்தி இருப்பார்களே மானிடர்கள்..
உலக புவி தினத்தை கொண்டாடுவது மட்டுமன்றி பூமியை பாதுகாக்க எதையாவது செய்யவேண்டும்.

வின்சென்ட். said...

உங்கள் மூவரின் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி. பரளிக்காடு இன்னும் நன்றாகவை உள்ளது.

பூ விழி said...

சிந்திக்க மட்டுமல்ல உடனடி தீர்வும் எடுக்க யோசிக்கவில்லை என்றால் பலனை அனுபவித்துதான் ஆகா வேண்டும்

வின்சென்ட். said...

உங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி.

கோமதி அரசு said...

பசுகளை தெய்வமாக வணங்கும் நம் நாட்டில் உணவிற்காக போராடும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறோம்.//

வீட்டில் பசுக்களுக்கு தீனி கொடுக்காமல் இப்படி கண்டதை சாப்பிடவிட்டு அதன் பாலை கன்றுக்கு கூட கொடுக்காமல் அத்தனையும் உறிஞ்சி விற்று காசு பண்ணுவார்கள்.

வின்சென்ட். said...

உங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி.