Saturday, April 30, 2011

அச்சம் தரும் அணு உலைகள் -- (3)

செர்னோபில் அணு உலை  வெடிப்பில் (1986 ) பாதிக்கப்பட்ட குழந்தைகள்
அணு உலைகள் தான் வளர்ச்சி தரும் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. காரணங்கள் பல இருப்பினும் என்னை அதிகம் பாதிப்பது குழந்தைகளின் ஊனம். சில பணமுதலைகளுக்காக வளர்ச்சி என்று பொய் முகம் காட்டி நமது இயற்கைச் சுழலை மிக மிக அதிக பொருட்செலவில் சிதைத்து, ஏழை விவசாயிகளின் நிலங்களை அபகரித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை பாழாக்கி, வெகுஜனங்களின் உடல் ஆரோக்கியத்தையும் கேள்விக் குறியாக்குவதை  எவ்வாறு வளர்ச்சி என்பது.

தொழில்மய நாடுகளான ஜெர்மனி, ஜப்பான், சீனா போன்ற நாடுகளே மறுபரிசீலனை செய்ய, நமது அணு விஞ்ஞானிகள் அறிவுறுத்தியும் அரசியல்வாதிகள் பிடிவாதமாக இருப்பது அவரிகளின் இறையாண்மையை கேள்விக்குறியாக்குகிறது.

ஒருவேளை ஞானம் பெற்று பசுமை புரட்சி போன்று  தவறு நடந்து விட்டது மாறிவிடலாம் என்றால், அமைக்க செலவிட்ட அளவிற்கு மூடுவதற்கும் செலவிடவேண்டும்.

போபால்  விஷவாயு விபத்து போன்று  ஏற்பட்டால் கம்பெனிகளின் பொறுப்பு சொற்ப அளவில் மட்டுறுத்தபட்டு அவைகளின் சொத்துகளுக்கு பங்கம் வராமல் பார்த்துக் கொண்டு, இங்கே இருக்கும் பொதுஜனங்கள் 20  அல்லது 30 மைல் சுற்றளவில் வெளியேற்றப்பட்டால் என்ன? செத்துமடிந்தால் என்ன? ஆள்பவர்களுக்கு அதைப் பற்றியெல்லாம் கவலையில்லை. கம்பெனிகளின் சொத்துக்கள் பாதுகாக்கப்பட்டு அவை மேலும்  பெருக வேண்டும். அவ்வளவே.


முடிவெடுக்கும் அதிகாரத்திலிருப்போர் மிக சுக வாழ்கை வாழ்ந்து 50+ வயது தாண்டியவர்கள். அவர்களுது ஆயுட்காலம்  இன்னும் சொற்ப ஆண்டுகளே !! இன்றைய குழந்தைகளின் எதிர்காலம் ????

நமது ஆடம்பர வாழ்வா???  குழந்தைகளின் ஆரோக்கிய வாழ்வா?? புரிந்து கொள்ளவேண்டியது நாம்தான்.

பசுமை எரிசக்தி (Green Energy ) பற்றிய எனது பழைய பதிவு.
மாற்று எரிசக்தி
 
 அச்சம் தரும் அணு உலைகள் - (1)
அச்சம் தரும்  அணு உலைகள் - (2)

Photo Source : Internet

2 comments:

கூடல் பாலா said...

மிகவும் அருமையான பதிவு !

வின்சென்ட். said...

திரு. கூடல் பாலா

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.