Thursday, December 2, 2010

*சில்வர் புல்லட்( அ ) மைல் எ மினிட் MIKANIA MICRANTHA

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மரத்தில் முழுவதும் படர்ந்துள்ள ஒரு காட்சி
பெயருக்கு ஏற்ப இதன் வளர்ச்சி அபரிமிதமானது. நல்ல சூழ்நிலை இருந்தால் ஒரு நாளைக்கு 8 செ.மீ வரை வளரக்கூடியது. உலகப் போரின் போது வீரர்கள் மற்றும் தளவாடங்களை எதிரிகளிடமிருந்து மறைக்க (camouflage) இங்கு கொண்டு வரப்பட்ட தாவரம். உலகின் மிக முக்கிய உயிரினவள செழுமையிடம் (BIODIVERSITY HOTSPOT) இந்தியாவில் இரண்டு, அவை மேற்கு தொடர்ச்சி மலையும், வடகிழக்கு  பகுதிகளாகும். இந்த இரண்டு பகுதிகளிலும் இதன் தாக்கம் உள்ளது. உயிரினவளம் அதிகம் நிறைந்த இப்பகுதிகளில் இத்தாவரம் வேகமாக பரவுவதால் நீண்ட கால அடிப்படியில் இந்த பகுதிகளுக்கான பல்லுயிர் பெருக்கம் பெருமளவில் பாதிக்கப்படும்.
 நீயா? நானா? போட்டியில் சீமைக் கருவேலும் மைல் எ மினிட் கொடியும்

95% மூழ்கிவிட்ட வேப்பமரம்
மரங்களின் மேல் படர்ந்து அவை ஓளிசேர்க்கை செய்வதை தடுத்து அதன் வளர்ச்சியை வெகுவாக பாதிக்கிறது. உயிரற்ற தொலைபேசி கம்பங்கள் முதல் வாழை,பனை என இது படராத இடமே இல்லை என்னுமளவிற்கு பரவியுள்ளது. மரவளர்ப்பிற்கும் பல்லுயிர் பெருக்கத்திற்கும் தற்போதைய எதிரி.

நமது வாழ்வாதாரத்தை அழிக்க எதிரி மனித, ஆயுத, வர்த்தக ரூபத்தில் வர வேண்டிய அவசியமில்லை தாவர ரூபத்திலும் வரலாம். பார்த்து பழகிவிட்டதால் கண்டுகொள்ளாமல் இருந்துவிடுகிறோம். ஓட்டைப் பாத்திரத்தில் நீர் பிடிப்பதை போன்றதுதான் நாம் இவைகளைப் பற்றி அறிந்து கொள்ளாமல் இருப்பது. காகிதத்தில் கணக்கிட்டு வளர்ந்த நாடு எனவும், உலகின் 100 கோடீஸ்வர்களில் நிறையபேர் இந்தியர்கள் எனவும் சொல்லிக் கொள்ளலாம் ஆனால் நாட்டின் 8 மாநிலங்கள், 26 ஏழை ஆப்பிரிக்க நாடுகளை விட மோசமாக உள்ளது என்ற செய்தியை நாம் மனதில் கொண்டு இந்த தாவரங்களை அழித்து நாட்டின் வாழ்வாதாரத்தை வளப்படுத்த முயல்வோம்.

2 comments:

kumar v said...

Dear Vincent Sir,

Thank you so much for letting us know about these plants. Is there any methods/pratices available while destroying them,to avoid it's seeds spreading in the area and growing again and again. Please do share..Please apologise me writing in english, still I was unable to setup my tamil keyboard.

Thanks,
Kumar

வின்சென்ட். said...

திரு. குமார்

உங்கள் வருகைக்கு நன்றி. பார்த்தீனியத்திற்கும், ஆகாயத்தாமரைக்கும் இயற்கை முறையில் தீர்வு உண்டு. மற்றவை சற்று கடினம். குறிப்பாக சீமைக் கருவேல் அதன் விறகு மற்றும் கரிக்காக விரும்பி வளர்க்கிறாரகள்.