Saturday, August 15, 2009

வட இந்தியாவின் நிலத்தடி நீர் பற்றி நாசா நீரியல் நிபுணரின் கட்டுரை

வட இந்தியாவின் நிலத்தடி பற்றி நாசா (NASA) செயற்கை கோள் படங்களை வைத்து அங்கு பணி புரியும் நீரியல் நிபுணர் திரு.மேத்யூ ரோடெல் மேலும் இருவருடன் சேர்ந்து நேசுர் (NATURE) என்ற இதழில் அளித்துள்ள கட்டுரை நமக்கு ஓர் எச்சரிக்கை மணி. அதிக கவலை தரும் அந்த கட்டுரையிலிருந்து சில செய்தித் துளிகள்.


பஞ்சாப், ராஜஸ்தான், அரியானா, தில்லி போன்ற பகுதிகளிலுள்ள நிலத்தடி நீர் வருடத்திற்கு 1 அடி வீதம் குறைகிறது. இதனால் வருங் காலங்களில் சமூக / பொருளாதார மாற்றம் அப்பகுதியிலுள்ள சுமார் 114 மில்லியன் குடும்பங்களை பாதிக்கும்.


பசுமை புரட்சியின் போது அதிகமாக நிலத்தடி நீரை உபயோகித்து அதிக பலன்கள் பெற்ற பகுதிகள் இவை என்பது குறிப்பிடதக்கது. மாற்று ஏற்பாடுகள் செய்து நிலத்தடி நீரை உயர்த்தாவிடில் வேளாண்மையில் உற்பத்தி குறைவு, குடிநீர் தட்டுப்பாடு காரணமாய் கருத்து வேறுபாடுகளும், சச்சரவுகளும் ஏற்படும்.


சுமார் 109 கன.கீமீ அளவிற்கு நிலத்தடி நீர் சுமார் 6 வருடங்களில் (2002 - 2008 )உறிஞ்சப்பட்டு விட்டது. (1கன.மீ = 1000 லிட்டர் )இது நமது நாட்டின் பெரிய அணைகளில் ஒன்றான “மேல் வையின்கங்கா” (Upper Wainganga)அணையைக் காட்டிலும் இருமடங்கும், அமெரிக்காவில் மனிதனால் உருவாக்கப்பட்ட “லேக் மீடு” (Lake Mead) அணையின் கொள்ளளவைக் காட்டிலும் 3 மடங்கும் அதிகம்.

இது போன்ற காட்சிகள் தமிழகத்தில் ஏற்படாமல் காப்பது நமது கடமை

தமிழகத்திலும் கடந்த சில வருடங்களாக குறைவான மழைப்பொழிவால் மிக அதிகமாக நிலத்தடி நீரை நம்பியிருக்கிறோம். அண்டை மாநிலங்களுடன் நீருக்காக போராட வேண்டிய நிலைமை. “நிஷா” புயல் போன்றவை வரும்போது அழிவினை சந்திக்கிறோம். இயற்கையை வெல்வது கடினம்தான் இருப்பினும் சில எளிய சாத்தியபடக் கூடிய நடவடிக்கைகளால் நிலத்தடி நீரை உயர்த்தி மகிழ்ச்சியான வாழ்க்கையை வரும் தலைமுறையினருக்கு தரமுடியும்




நீரின் உபயோகத்தை குறைப்பது, மறுஉபயோகம் மற்றும் மறுசுழற்சி செய்தல்.

மழை தரும் மரங்களை அதிக அளவில் வளர்ப்பது குறிப்பாக தரிசு நிலங்களில் வறட்சியை தாங்கி வளரும் வேம்பு, புங்கன், புளி போன்றவைகளை வளர்த்தல்.

வெட்டிவேரைப் பயன்படுத்தி நீரின் வேகத்தை தடுத்து நிலத்தடி நீரை உயர்த்துவதுடன் மண் அரிப்பைத் தடுத்தல்.

பண்ணைக் குட்டைகள் ஒவ்வொரு விவசாய நிலத்திலும் அமைத்து மழை நீரை சேமிப்பது.

ஓடைகளில் தடுப்பணைகள் கட்டுவது.

அதிக நீரை எடுத்துக் கொள்ளும் பயிர்களை தற்காலிகமாக தவிர்த்து மாற்றுப்பயிராக வறட்சியை தாங்கி வளரக்கூடிய பயிர்களை பயிர் செய்தல்.

பாசன முறைகளில் மாற்றம் செய்து சொட்டுநீர், தெளிப்புநீர் போன்ற முறைகளுக்கு மாறுதல்.

புதிய யுக்திகளை கடைபிடித்தல். (ஊ.த) நெல் பயிரிடுவதில் ஒற்றை நாற்று முறை. மற்ற பயிர்களாக இருப்பின் துல்லியவேளாண்மை திட்டம்.

நீராதாரங்கள் மாசுபடுவதை தடுத்து விவசாயத்திற்கு ஏற்ற வகையில் அவைகளை பாதுகாப்பது.

வெர்சுவல் வாட்டர் (கண்ணிற்கு தெரியாத நீர்) பற்றி அறிந்து கொள்ளுதல்.அதனை பற்றி அறிய http://maravalam.blogspot.com/2008/09/blog-post.html பார்க்கவும்.


Source: The Hindu/Cbe 14-08-09 Page 14

3 comments:

வின்சென்ட். said...

திரு.சுந்தரராஜன்

உங்கள் வருகைக்கு நன்றி.

வடுவூர் குமார் said...

எச்சரிக்கை மணி அடித்திரீக்கிறீர்கள்,நன்றி.

வின்சென்ட். said...

திரு.வடுவூர் குமார்

உங்கள் வருகைக்கு நன்றி.