Wednesday, June 3, 2009

வெப்பமயமாதலுக்கு 3 லட்சம் பேர் பலி

ஐ.நா.வின் முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னன், உலக மனித நேய அமைப்பின் தலைவராக உள்ளார். இந்த அமைப்பு, உலக வெப்பமயமாதலால் ஏற்பட்ட இழப்புகள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அறிக்கையில் அன்னன் கூறியிருப்பதாவது:-

உலக வெப்பமயமாதல் விளைவுகள் ஆரம்பித்துவிட்டன. இதற்கு, ஓராண்டில் மட்டும் மூன்று லட்சம் பேர் இறந்துள்ளனர். 30 கோடிப்பேர் பல வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர். வளரும் ஏழை நாடுகளில்தான் அதிக பாதிப்பு.இதே நிலை நீடித்தால், வரும் 2030ல் உக்கிர வெயில், வெள்ளம், வறட்சிக்கு மட்டும் ஐந்து லட்சம் பேர் இறக்கநேரிடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இன்னும் 25 ஆண்டில், கார்பன் வாயு வெளிப்படுவதை தடுத்து, வெப்பமயமாதல் குறைக்கப்பட்டால், பல கோடிப்பேர் பாதிப்பை தவிர்க்கலாம். இல்லாவிட்டால், 31 கோடி பேர், பல்வேறு நோய்களுக்கு ஆட்படுவர்; இரண்டு கோடி பேர், வறுமையால் பாதிக்கப்படுவர்; எட்டு கோடிப்பேர், பாதிப்பில் இருந்து மீள ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு இடம் பெயர்வர். ஆப்பிரிக்க, வங்கதேச, எகிப்து, கடலோர, காடு அதிகமாக உள்ள நாடுகளில்தான் அதிக பாதிப்பு ஏற்படும். பணக்கார நாடுகள் பெரிய அளவில் பாதிக்கவில்லை. வளரும் ஏழை நாடுகள்தான் அதிக பாதிப்பை கண்டுள்ளன; எதிர்காலத்திலும் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

சில ஆப்பிரிக்க நாடுகள், மேற்கு ஆசியா, தெற்காசிய நாடுகளில் வறுமை அதிகமாக இருக்கும். மக்கள் தொகை பெருக்கத்தால்தான் இந்த பாதிப்பு அதிகமாக உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Source : தீக்கதிர்/கோவை 03-06-09

2 comments:

Anonymous said...

all of us should do in reducing carbon footprint

வின்சென்ட். said...

திரு. அனானி

உங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி.