Sunday, July 6, 2008

மருவத்துவ சேவையுடன் மரத்திற்கும் சேவை.




சென்ற வாரம் கோவை பி.எஸ்.ஜி மருத்துவ மனைக்கு சென்றிருந்தேன். மரங்கள், புல்தரை என மிக நேர்த்தியாக வளாகம் இருந்தது. திரு. அன்பு என்ற ஓவியர் மரம் மற்றும் இயற்கை பற்றி வரைந்திருந்த ஓவியங்கள் அனைவரின் கவனத்தையும் மிகவும் கவர்ந்ததுடன் விழிப்புணர்வு உண்டாக்குவதாகவும் இருந்தது. குறிப்பாக அந்த முதல் படம் இன்றுள்ள மனிதன் மரத்தை வெட்டுவது கண்ணிற்குத் தெரியாத நாளய மனிதனை வெட்டுவதாக சித்தரித்திருந்து அற்புதமாக இருந்தது. அதனை புகைப்படமெடுத்து உங்கள் பார்வைக்கு வைப்பதன் காரணம், இந்த அதிவேக வாழ்கையில் உங்களில் சிலரேனும் மரங்களை நட்டு பாதுகாப்பீர்கள் என்ற நம்பிக்கையில்தான். மரம் நடுவோம், மழைபெறுவோம்

4 comments:

puduvaisiva said...

Dear Friend

The Paintings and message are well
thank you

puduvai siva.

வின்சென்ட். said...

திரு. புதுவை சிவா

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மிக சிறப்பான ஓவியங்கள்..

வின்சென்ட். said...

திருமதி.கயல்விழி முத்துலெட்சுமி

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி. இன்னும் சில மருத்துவமனையின் உள்புரமும் உள்ளது. அவைகளை நான் எடுக்கவில்லை.