Wednesday, June 4, 2008

உலக சுற்றுசூழல் தினம்

சுற்றுசூழல் தினம் இன்று (ஜூன் 5 தேதி) உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. மனிதனின் ஆசையினாலும், அறிவினாலும் இயற்கையை அளவிற்கதிகமாக சுரண்டியதன் விளைவுகளை நாம் புயலாகவும், பூகம்பமாகவும், சுனாமியாகவும், வறட்சியாகவும், வெள்ளமாகவும் பார்க்கிறோம். லட்சக்கணக்கில் உயிர்களை இழக்கிறோம். சுற்றுசூழலை காக்கவேண்டிய பொறுப்பு ஒவ்வொரு மனிதரிடமும் இருக்கவேண்டும். குறிப்பாக அரிதாகி வரும் உயிரினங்களை காப்பாற்றி அவைகளை பாதுகாப்பதில் நாம் அதிக கவனம் கொள்ளவேண்டும்
சென்ற வாரம் இந்தோனேஷியாவின் மழைகாடுகளில் மிக அரிதாகக் காணப்படும் ஜாவா காண்டா மிருகத்தின் வீடியோ படத்தை WWF -இந்தோனேஷியா வெளியிட்டனர். சுமார் 1 மாத காலம் பிரத்யேக காமிரா கொண்டு எடுக்கப்பட்டது அந்த காட்சியை (Embedding வசதி இன்மையால் தொடர்பு தர இயலவில்லை) கீழ்கண்ட தொடர்பின் மூலம் கண்டுகளியுங்கள்.

http://www.youtube.com/watch?v=-cVe5U25xFI

No comments: