Sunday, April 13, 2008

சுற்றுப் புற சுழல் பாதுகாப்பதில் கோவை மாநகராட்சியின் பயனுள்ள முயற்சி.

ஒரு முறை மட்டுமே உபயோகிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு (பைகள்,குவளைகள்,விரிப்புக்கள் போன்றவை) கோவை மாநகராட்சி தடை விதித்துள்ளது. தடைக்கான காரணத்தையும் மீறினால் அபராதமும் விதிக்கப்படும் என பொது மக்களுக்கு அறிவித்துள்ளனர்.

இத்தடையை மீறுபவர்களுக்கான அபராதம்

இப்பிளாஸ்டிக் பொருட்களைத் தயாரிப்பவர்களுக்குரூ.5000
மொத்த இருப்பு வைத்துருப்பவர்களுக்கு--------------- ரூ.2500
சில்லறை விற்பனை செய்பவர்களுக்கு-----------------ரூ.750
உபயோகிப்பவர்களுக்கு-------------------------------------ரூ 100

தொழில் செய்வோருக்கு இழப்புத்தான் ஆனாலும் சுற்றுப் புற சுழலுக்கு பாதிப்பு வரும் போது இம்முயற்சிகள் அவசியமாகின்றது. முயற்சியை வரவேற்று ஒரு முறை மட்டுமே உபயோகிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தைத் தவிர்ப்போம்.

2 comments:

வெங்கட்ராமன் said...

மிகச் சரியான நடவடிக்கையை எடுத்துள்ளது. எல்ல ஊர்களிலும் இந்த சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்.

இயறகையை நேசிக்கின்ற கோவை மாநகராட்சிக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.

வின்சென்ட். said...

திரு.வெங்கட்ராமன்

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.