காரணமாக சிறு நகரங்களில் கூட அடுக்குமாடி குடியிருப்புக்கள் மிக அதிகமாக தோன்ற ஆரம்பித்துள்ளது. அதிக வாங்கும் சக்தி காரணமாக எல்லோரது வீட்டிலும் அழகு செய்யும் மனப்பாங்கு அதிகரித்துள்ளது குறிப்பாக அழகுச்செடிகள் வளர்ப்பு. கணவன்,மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் போது ஆர்வம் இருப்பினும் அதனை கவனிப்பதற்கு நேரம், நல்ல மண், தண்ணீர் (குடிப்பதற்கே இல்லாத போது) தேவை. இவைகளை பூர்த்தி செய்ய வந்துள்ள ஒரு பொருள்தான் இந்த செடி வளர்க்கும் பை (Grow Bag ). விவசாயத்திற்கு வேலையாட்கள் பற்றாக்குறை, குறைந்த நீர், இடம், அதிக மகசூல் என பசுமைக்கூடத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கிறேன்.
கோவையில் நடந்து முடிந்த விவசாய கண்காட்சி 2007 இல் காயர் வாரியத்தில் (Coir Board ) அரங்கத்தில் அறிமுகத்திற்கு வைத்திருந்தார்கள் விசாரித்தபோது ஏற்றுமதிக்கானது என்றார்கள். இதற்கு முன்பே வளர்ப்பிற்காக என்னிடம் இருந்ததால் அதனை உங்களிடம் பகிர்ந்து கொள்ளுகிறேன்.
புற உதா கதிர் (UV) தடுப்பு வசதியுடன் வெளி பகுதி வெண்மை நிறத்திலும் உள் பகுதி கறுப்பு நிறத்திலும் உள்ள இந்த பையினுள் 98 x 18 x 4.5 செ.மீ அளவில் சுத்தம் செய்யப்பட்ட தென்னை நார் கழிவு இருக்கும். நீர்
ஊற்றிய பின் 100 x 20 x 11 செ.மீ அளவில் பெருக்கமடையும். பை கிடைத்தவுடன் தேவையான அளவில் நாம் துவாரம் செய்து அதனுள் மண்புழு உரம் நிறைத்து நீர் ஊற்றினால் இயற்கை முறையிலும் திரவ இரசாயன NPK தர தற்போதுள்ள முறையிலும் பயிர் செய்ய தயாராகிவிடும்.
தென்னை நார் கழிவு ஒரு காலத்தில் சுற்றுச்சுழல் மாசுபாடு பொருளாக இருந்தது போய் இன்று உலக தரம்
வாய்ந்த மதிப்பூட்ட பட்ட பொருளாக மாறியுள்ளது.
நீரை மறு உபயோகம் (Reuse குறிப்பாக சமையலறை கழிவு நீர்) செய்யமுடிகிறது.
நீரின் அளவும் மிக மிகக்குறைவு.
களைகள் முளைப்பது இல்லை என்றே சொல்லலாம்.
மண் இல்லாமையால் வேர் மூலம் வரும் நோய்கள் கட்டுப்படுத்தப்படுகிறது.
மதிப்பு மிக்க மலர் மற்றும் ஸ்டிராபெரி (Strawberry)பழ சாகுபடிக்கு ஏற்றது (பசுமைக்கூடம்).
வீடுகளில் எளிதாக வைத்து காய்கறிகள் வளர்க்கலாம்.
