Sunday, September 28, 2008

“உயிர் நிழல் 2008....” கானுயிர் புகைபடக் கண்காட்சி.

இந்த அவசர உலகில் எல்லோராலும் வன உயிர்களை காண்பதற்கென்று நேரம் ஒதுக்கியோ அல்லது அதன் வாழ்விடத்திற்கு சென்று பொறுமையுடன் காத்திருந்து காணவோ முடிவதில்லை. அக்குறையை போக்க இந்தியாவின் தலைசிறந்த 20 க்கும் மேற்பட்ட கானுயிர் புகைபட வல்லுனர்கள் உயிரைக்கூட சமயங்களில் பணயம் வைத்து எடுத்த புகைபடங்களை “உயிர் நிழல் 2008....” மூலம் நம் கண்களுக்கு விருந்தளிக்கவுள்ளனர்.

கோவையின் ஓசை சுற்றுச்சுழல் அமைப்பு 2002 ஆம் ஆண்டு முதல் கானுயிர் புகைபடக் கண்காட்சியை மிக சிறப்பாக நடத்திவருகின்றனர். இவ்வாண்டும் இக்கண்காட்சி புகைப்படங்களுடன், தினமும் ஆவணப்படங்கள் திரையிடல், அறிஞர்களுடன் கலந்துரையாடல்,, புலிகளின் வாழ்கை பற்றி சிறப்பு பகுதி, மாணவர்களின் பங்களிப்பு என இயற்கையை புரிந்து கொள்ள நம்மை அழைக்கிறது.

இடம்: கோவை வ.உ.சி. பூங்கா (VOC PARK)
நாள் : 03-10-2008 முதல் 12-10-2008 வரை.

கானகம் சென்று கானுயிர்களை காணாவிட்டாலும், நமது உற்றார், உறவினர்களுடன் குறிப்பாக குழந்தைகளுடன் சென்று இக்கானுயிர் புகைபட கண்காட்சியை காண இவ்வலைப் பூ உங்கள் அனைவரையும் அழைக்கிறது.

No comments: