Saturday, September 15, 2007

"நீர் மேலாண்மை"க்கு ஆஷ்டென் விருது

குறைந்த செலவில் மிகுந்த பயன் தரும் பம்புகள்,சொட்டு நீர் பாசன அமைப்புக்கள், மற்றும் எளிய தண்ணீர் தொட்டி என சுமார் 450,000 ஏழை விவசாய்களின் அன்றாட விவசாய தேவைகளை பூர்த்தி செய்து வாழ்கையை மேம்படுத்தியதற்காக புகழ் மிக்க ஆஷ்டென் விருது இவர்களுக்கு கொடுக்கப்பட்டது. இவர்களின் சிறப்பு "நீர் மேலாண்மை".
Mr Amitabha Sadangi of International development enterprises, India. with HRH Prince Charles.

புகழ் மிக்க ஆஷ்டென் 2006 விருது பெற்ற Idei (International
development enterprises India.) என்ற அமைப்பு பற்றி ஆஷ்டென்
விருது குழு தந்த அறிக்கை.

"commercialising a simple, sustainable technology which helps poor farmers achieve massive improvements in yield and income".

பம்புகள்.

குறைந்த ஆழத்திலுள்ள நீரை எளிதாக மேலேற்ற கால்களினால் இயங்கும் பம்புகள்.இவை சுமார் 8அடி - 20அடி ஆழத்திலிருந்து நீரை எளிதாக மேலே கொண்டுவர உதவும். ஆண்,பெண் இருபாலரும் இயக்கலாம். விட்டம்(Diameter) 3.5அங்குலம், 5அங்குலம் அளவுகளில் மணிக்கு சுமார் 3000லி-6000லி நீர் வரை விட்ட அளவு, நீரின் ஆழத்தைப் பொறுத்து எடுக்கலாம்.



சொட்டு நீர் பாசனம்.

பொதுவாக ஏக்கருக்கு சொட்டு நீர் பாசனம் ரூ.25000/= மேல் செலவாகும்.ஆனால் இவர்களது குழாய்கள் 125mm மற்றும் 250mm அளவுகளில் இருப்பதால் செலவு ஏக்கருக்கு சுமார் ரூ.3700 - ரூ 8000 வரை mm,இடம்,அமைப்பு பொறுத்து மாறும்.இது தவிர வீட்டுத் தோட்டத்திற்கு (kitchen garden) தேவையான சொட்டு நீர் அமைப்புக்கள் 3மாடல்களில் கிடைக்கின்றன.



rum Kit) 200 செடிகளுக்கு
தண்ணீர் தொட்டி.

எளிதாக மடக்கி எடுத்துச் செல்லக்கூடிய தண்ணீர் தொட்டி.3 அளவுகளில் 200லி, 5000லி, 10,000லி கிடைக்கின்றது.எளிதாக எடுத்து செல்லக்கூடிய 5 அடுக்குகள்(Layers) கொண்டது இத்தொட்டிகள்.விலை லிட்டருக்கு 40 பைசா வரை ஆகும் என்கிறார்கள். மழைநீர் சேமிக்கவும்,மலை பகுதிகளுக்கும் மிகவும் ஏற்றது.













மேலும் அறிய அவர்களது வலைதளம். http://www.ide-india.org/ பார்க்கவும்.
இறுதியாக இந்த வலைப் பதிவை படிக்கும் அனபர்களுக்கு, நமது கிராமங்கள் தன்னிறைவு பெற இந்த எளிய தொழில் நுட்பங்களை உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

6 comments:

வவ்வால் said...

நல்லப்பதிவு ,

படத்தில் இருப்பது போன்று பக்கெட், தகர டின் வைத்து சொட்டு நீர் பாசனம் செய்வதை சில இடங்களில் பார்த்துள்ளேன், மேலும் சில இடங்களில் பானை ஒன்றினை மரத்தின் அருகில் புதைத்து அதில் சிறிய ஓட்டைப்போட்டு தண்ணீர் கசியும் வண்ணம் வைத்து பாசனம் செய்கிறார்கள்.

இது போன்ற அதிக செல்லவில்லாத தொழில் நுட்பங்கள்(zero cost technology) தான் செலவைக்குறைத்து லாபம் தரும்.விவசாயிகளும் தயக்கம் இன்றி தங்களை மாற்றிக்கொள்வார்கள்.

வின்சென்ட். said...

திரு.வவ்வால் அவர்களுக்கு

தங்களின் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

kuppusamy said...

கிராமத்தில் உள்ள சிறு விவசாயிகள் பயன் பெற வேண்டும். படித்தவரகள் எடுத்துச் சொல்லலாம்.நவீன காலத்தில் எழிய முறைக்கு ஒரு நல் எடுத்துக் காட்டு. தொடரட்டும் உமது பணி.

வின்சென்ட். said...

திரு.குப்புசாமி அவர்களுக்கு

தங்களின் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

செந்தில்நாதன் செல்லம்மாள் said...

மிக நல்ல பதிவு.
வேலை பளு அதிகமானதால, அடுத்தடுத்து கவனம் செலுத்த முடியல....
உங்க பதிவுகளை படிச்சப்போ ரொம்ப மன நிறைவாக இருந்தது...

மிக்க நன்றி....

வின்சென்ட். said...

திரு.செந்தில்நாதன் செல்லம்மாள்

தங்களின் வருகைக்கும்,கருத்துக்களுக்கு மிக்க நன்றி.