Friday, June 29, 2007

மழை நீர் சேமிப்பு

திட்டமிடத் தவறுகிற போது, தவறு செய்ய திட்டமிடுகிறோம்.



நீர் பற்றாக்குறை உண்மைதான். ஆனால் இயற்கை தரும் மழையை நாம் எந்த அளவிற்கு சேமிக்கிறோம். ஒரு கணக்கீட்டைப் பார்ப்போம்.



2400 ச.அ(1கிரவுண்டு)10mm மழை பெய்தால் கிடைக்கும் நீர் சுமார் 2,230 லிட்டர்
1 ஏக்கரில் 10mm மழை பெய்தால் கிடைக்கும் நீர் சுமார் 40,460 லிட்டர்
1 ச. கி.மீ 10mm மழை பெய்தால் கிடைக்கும் நீர் சுமார் 10,000,000 லிட்டர்



இதில் நாம் எவ்வளவு நீரை சேமிக்கிறோம் ? எவ்வளவு பேர் உண்மையில் வீட்டில் மழை நீர் சேமிப்பு செய்கிறோம் ? எவ்வளவு விவசாயநிலங்களில் பண்ணை குட்டைகள் உள்ளன? எவ்வளவு ஏரிகள், குளங்கள் தூர்வாரப்பட்டது? இயற்கை நம் நாட்டிற்கு இரண்டு பருவ மழை பொழிவை தருகிறது, திட்டமிடாமை காரணமாக சேமிக்காமல் வெள்ளம் ஏற்பட்டு உயிர் இழப்புக்களையும் நஷ்டங்களையும் சந்திக்கிறோம். சில மாதங்களுக்கு முன் ''இந்து'' நாளிதழில் வந்த ஒரு செய்தி என்னை அதிர்ச்சியடைய வைத்தது. வளர்ந்த பணக்கார நாடான ஆஸ்திரேலியாவின் ஒரு பகுதியில் கழிவு நீரை சுத்தம் செய்து குடி நீராக அடுத்த வருடமே வினியோகம் செய்யப்போகிறார்கள் என்பது தான் அது. ஆனால் நம் நாட்டின் சராசரி மழை பொழிவு 1250mm. சுமார் 1 பில்லியனுக்கு மேல் மக்கள் தொகை, உலகில் அதிக கால்நடை உள்ள நாடு, சுமார் 70% மக்கள் விவசாயம், மிக வேகமாக வளர்ந்து வரும் தொழில்துறை என வருங்காலத்தில் நம் நாட்டின் நீர் தேவை அதிகரிக்கப்போகிறது. நாம் என்ன செய்யப்போகிறோம் ??
திட்டமிட்டு இந்த பருவ மழை பொழிவை சேமிப்போம். இல்லையேல் தவறு செய்ய திட்டமிடுகிறோம் என்பதில் சந்தேகம் இல்லை. திட்டமிடுவோம் வெற்றிபெறுவோம்.
சில ஊர்களில் நமக்கு கிடைக்கும் மழை பொழிவைக் கணக்கிட CLICK HERE

1 comment:

Anonymous said...

This is a meaninful alternative for the farmers who own dry lands and this is the means to empowerment,prosperity for them.we must try to tap the governmnetal channels to propagate this form by the buudget allocated for agri devt.
c.subramaniyan,Jatropha centre,virudhunagar.