Saturday, July 17, 2010

வித்தியாசமாய் ஒரு விழிப்புணர்வு கண்காட்சி.

மணல் சிற்பம் .
இன்று ( 17-07-2010 ) “ சிறுதுளி ” அமைப்பின் சிறுதுளி பெருவெள்ளம்... அன்றும் , இன்றும் என்ற மழைநீர் சேமிப்பு பற்றிய விழிப்புணர்வு கண்காட்சி. கோவை வ.உ.சி மைதானத்தில் துவங்கியது. மதிப்பிற்குரிய டாக்டர்.அப்துல் கலாம் அவர்கள் துவக்கி வைத்தார்கள். பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர் பங்கேற்று சிறப்பாக மாதிரி அமைப்புக்களை உருவாக்கியிருந்தனர். மணல் சிற்பம் அனைவரையும் கவர்ந்தது. ஸ்கோப் அமைப்பின் ஆரோக்கியமான கழிவறை, மழைநீரை சுத்தப்படுத்தி சேமிக்க உதவும் IISc, பெங்களூர் நிறவனத்தின் கண்டுபிடிப்பு, CDD (Consortium for DEWATS Dissemination Society ) இன் கழிவு நீர் சுத்திகரிப்பு முறை என சுற்றுச்சுழலை காப்பாற்ற உதவும் பல நல்ல விஷயங்கள் விளக்கங்களுக்கும், நாமே நிறுவி பயன்படுத்துவதற்கும் இருந்தது மன நிறைவை தந்தது. இன்றைய காலத்திற்கு மிக அவசியமான இந்த கண்காட்சி நாளையும் நடைபெறும்.

நொய்யல் ஆற்றின் மாதிரியை பார்வையிடும் மதிப்பிற்குரிய டாக்டர். அப்துல் கலாம் அவர்கள்.
விளக்கம் தரும் பள்ளி மாணவன்.
மழைநீரை சுத்தப்படுத்தும். IISc, பெங்களூர் நிறுவனத்தின் கண்டுபிடிப்பு,
ஸ்கோப் அமைப்பின் கழிவறை அமைப்பு காலத்தின் தேவை.

சரியான மழைநீர் சேமிப்பு அமைப்பு.

மழை காலத்தில் கேரளாவில் அதிகம் காணப்படும் நீர் சேமிப்பு முறை.

நீர் எடுக்கும் முறை.


நீர் பற்றிய மிகத் தெளிவான உண்மை.

2 comments:

kumar v said...

Dear Vincent Sir,

Thanks so much for this posting. I felt as if I visited exhibition and this is the need of the hour. Thanks so much for sharing..

Thanks,
Kumar Victor

வின்சென்ட். said...

திரு.குமார் விக்டர்

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. நீங்கள் கூறியது போல் இது காலத்தின் கட்டாயத்தை தேவை.