Tuesday, July 13, 2010

உயர்தர நாட்டு பசுக்கள் - ஒரு ஆர்வலரின் அனுபவம்


திரு.திரு. ராஜேந்திரன் அவர்கள் கிர் இன பசுக்களுடன்

கோவை புதூரில் வசிக்கும் நண்பர் திரு. ராஜேந்திரன் அவர்கள் தான் வளர்ப்பதற்காக நமது நாட்டு இன மாடுகளை தெரிவு செய்து அதன் தொடர்ச்சியாக அவர் குஜராத், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களின் பூர்வீகமாக இனமான தார்பார்க்கர், கிர், காங்ரெஜ் போன்ற இனங்களை அம்மாநிலங்களுக்கு நேரில் சென்று பார்த்து வந்து அவ்வினங்கள் பற்றிய தகவல்களையும், புகைபடங்களையும் பகிர்ந்து கொண்டார். அவை மிக பயனுள்ளதாக இருப்பதால் அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன். பொதுவாக இவை நோய் எதிர்ப்பு சக்தியுடன் வெயில் மற்றும் குளிர் இரண்டையும் தாங்கி வளர்வதாலும், பால் குறைந்த பட்சம் 10 - 15 லிட்டர் வரை கறப்பதாலும் நம் பகுதியில் லாபகரமாக பாராமரிக்க முடியும் என்பது அவரது கணிப்பு. மேலும் அதன் கோமியமும் , சாணமும் இயற்கை வேளாண்மைக்கு மிகச் சிறந்தது. பாலுக்கு சிறந்த மருத்துவ குணம் இருப்பதால் நல்ல விலையும் கிடைக்கிறது.

மேலும் தகவலுக்கு
S.ராஜேந்திரன்
கோவைப் புதூர்
கோயமுத்தூர் 641 042
அலை பேசி 92620 41231

4 comments:

ஈரோடு கதிர் said...

என் நண்பர் சூலூரில் மாட்டுப் பண்ணை வைத்துள்ளார்.

நேற்று காலை அவருடைய பேட்டி பொதிகையில் வந்தது

அவருக்கு உங்கள் இடுகையை அனுப்பியுள்ளேன்

வின்சென்ட். said...

திரு.கதிர்

உங்கள் வருகைக்கும் பரிந்துரைக்கும் மிக்க நன்றி. திரு.ராஜேந்திரன் கோவை புதூரில் தான் இருக்கிறார்.

விஜய் said...

மிக மிக பயனுள்ள பதிவு

கன்றுகள் விற்பனைக்கு உண்டா?

விஜய்

வின்சென்ட். said...

திரு.விஜய்

உங்கள் வருகைக்கு நன்றி. திரு.ராஜேந்திரன் விரைவில் அங்கு சென்று வாங்கவிருக்கிறார். எனவே அவரை தொடர்பு கொள்ளுங்கள்.