![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEidwYiN0xalsAvhZEWt3JXPx9lUcEdXzxAd0j8zQpxCCvysSu_W9X8rRGv718kYtiHJtBjd9w86IHRZEqRYL8kVaTH9UaV13tVmki0Em-AvFNCawsViFSa52q9kZH5vK4BICcqU2uy4kFM/s400/tree.jpg)
கோவை அவினாசி பிரதான சாலையிலிருந்து 200 மீ தூரத்தில் மசாக்காளி பாளையம் செல்லும் சாலையில் 55 வருட பெரிய அரசமரம் சாலை விரிவாக்கத்திற்காக வெட்டப்பட இருந்தது. இதனை கேள்விப்பட்ட மாணவர் திரு. அருண்குமாரும் அவரது நண்பர்களும் குறை தீர்க்கும் நாளன்று (29-03-2010 ) மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் அம்மரத்தை வெட்ட வேண்டாம் என விண்ணப்பம் செய்தனர். அவர்களின் வேண்டுகோள் ஏற்கபட்டு இன்று வரை மரம் வெட்டப்படவில்லை. “சலசல”வென்ற சத்ததுடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது.
![](http://2.bp.blogspot.com/_HtnC2rwwwhM/S_zDJmS5YbI/AAAAAAAACT4/KfNE5vD7QtA/s400/Ficus+Religiosa.jpg)
விஞ்ஞானப் பெயர் : Ficus Religiosa
புனிதமான மரம்.
புத்தருக்கு ஞானம் கிடைத்தது இந்த மரத்தடியில்தான் என்பது வரலாறு.
கோவை மாநகரின் கற்பக விருட்சம்,
மாணவர் திரு. அருண்குமாரும் அவரது நண்பர்களும்; குழந்தைகள் தானே என்று இல்லாமல் இயற்கை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அவர்களது குறிகோளை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியரும் போற்றுதலுக்கு உரியவர்கள்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg8QTUFxmqGZpaPITRnjze3k1uDRwT8aleJUdBlnRr3XgITGZWmyUDKOisbK_vlCCADuHIq8zA5QQn0RskQ3THKK2s5eGdT1gmsDkOAuWH1NsK7Qn6LwZBHCv0C0bKPgm2u-Kin_sAzTJg/s400/tree1.jpg)
பணம் மட்டுமே குறிகோளாகக் கொண்டு பெரிய வனங்களையே சூறையாடும் கும்பல்களிடையே திரு. அருண்குமாரும் அவரது நண்பர்களும் தக்க சமயத்தில் இறங்கி இந்த இளம் வயதில் விடிவெள்ளி நட்சத்திரங்களாக இயற்கையை பாதுகாக்க இருப்பது மனதிற்கு ஆறுதல் தருகிறது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhagGDNjFXkIfVI8l5_1DVJq0TPrj6s644T6KLJAbcRyHx4nc9P1Fa1kJZA6Y6Stg4qI1DAFipG3MZQipInjb6LVDMriXhIkU_Z89yGZxxHd1OLPooHwIz6Ct3KapV4MX00fBp2okBFd0s/s400/appli.jpg)
மதிப்பிற்குரிய ஐயா,
வணக்கம் ஐயா, எங்கள் பகுதியில் உள்ள 55 ஆண்டுகளாக உள்ள அரசமரத்தை வெட்டக் கூடாது என கேட்டுக் கொள்கிறோம்.
நான் உங்களுக்கு நிழல் தருகிறேன், சுவாசக் காற்று தருகிறேன் பிறகு ஏன் என்னை அழிக்க நினைக்கிறீர்கள். என்னை அழித்துவிட்டு வெயிலில் வாடி அழிந்துவிடாதீர்கள். என்னை அழித்து விட்டால் என் மேல் கூடுகட்டி வாழும் பறவைகளுக்கு என்ன பதில் சொல்வேன். நான் கார்பன்-டை-ஆக்ஸைடை எடுத்து உங்களுக்கு நான் சுத்தமான காற்றை தருகிறேன். ஆகையால் என்னை அழிக்காமல் காத்திடவும்.
இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள குழந்தைகள்,
த. அருண்குமார்.
இடம்: பீளமேடு.
நாள் : 29-03-10
உங்களது வாழ்த்துக்களை திரு. அருண்குமாருக்கு தெரிவிக்கவிக்க விரும்பினால் அவரது தந்தையின் அலைபேசி எண் தருகிறேன். வாழ்த்தி விடுங்கள். ஊக்கமும் உற்சாகமும் அக்குழந்தைகளை மேலும் பல அரிய செயல்கள் செய்ய உதவும்.
ப. தண்டபாணி : 94420-15060