Thursday, December 31, 2009

புத்தாண்டு வாழ்த்துக்களுடன் ஒரு சிறு செய்தி.

திருமதி.வாஞ்சி பாட்டியின் கையிலிருப்பது நம் நாட்டின் எதிர்காலம் (நீர்) என்று சொல்லலாம். காரணம் பாரம்பரிய மானாவாரி நெல் ரகத்தை மற்றவர்கள் கைவிட்ட நிலையில் இன்னும் பாதுகாத்து ஒவ்வொரு வருடமும் தவறாமல் பயிர் செய்து இன்றளவும் காப்பாற்றி வருகிறார். இயற்கை தந்த இந்த ரகத்தை நமக்கு தருவதற்கு இவர் தயார் ஆனால் நாம் அதனை பெற்று நீர் நிர்வாகத்தில் சிக்கனத்தை கடைபிடிக்க போகிறோமா ?? அல்லது ‘உல்டா’ செய்து நெல் ரகத்தை உருவாக்கப் போகிறோமா ?? எதுவாயினும் இவரது புகைபடத்தை வாழ்த்து அட்டையாக மாற்றி அவரை கௌரவப்படுத்துவதில் இவ்வலைப் பூ மகிழ்ச்சியடைகிறது. அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

மேலும் இந்நெல் ரகம் பற்றி அறிய கீழ்கண்ட தொடர்பை பயன்படுத்தவும்.

http://maravalam.blogspot.com/2009/02/blog-post.html
http://maravalam.blogspot.com/2009/09/blog-post_19.html

7 comments:

Unknown said...

படித்த நொடியிலிருந்தே சிந்திக்க வைக்கும் எளிமையான வலிமையான பதிவு!

வின்சென்ட். said...

திரு.ISR

உங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி.இது போன்ற இரகங்கள் பல காரணங்களால் கைவிடப்படுவது நாட்டிற்கும் உலகத்திற்கும் நல்லதல்ல என்பது எனது கருத்து.

na.jothi said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த புத்தாண்டில் வழி பிறக்கும் என்ற
நம்பிக்கையில்

வின்சென்ட். said...

திரு.ஜோதி

உங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி.

Unknown said...

Vanakkam Good website

வின்சென்ட். said...

திரு. விஜயகுமார்

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

Anonymous said...

Ivaradhu mugavari kuduthaal en pondra vivasayiku nanmaiyaaga irukum.