Saturday, February 28, 2009

மக்கள் சேவையில் மீண்டும் “கீரீன் கோவை”

கோவை மாவட்டத்தை பசுமையாக மாற்ற மரங்களை உற்பத்தி செய்த “கீரீன் கோவை” அமைப்பு சிறு மற்றும் குறு விவசாய்களின் நலன் கருதி வாசனை செடிகளிலிருந்து எண்ணை எடுக்கும் கொதிகலனை (Oil extraction Unit) ஆனைக்கட்டி பகுதியில் நிறுவியுள்ளனர். ஆனைகட்டி அதன் சுற்றுபுறங்களில் வன மற்றும் வளர்ப்பு மிருகங்கள், பறவைகளால் விவசாயம் செய்வது சற்று கடினமே. சில பகுதிகள் மழை மறைவு பகுதியாக இருப்பது மேலும் விவசாயத்தை பாதிக்கின்றது.இதனை தவிர்க்க நாம் வாசனை தரும் பயிர்களை பயிர் செய்யலாம். மிருகங்கள் பறவைகள் தீண்டுவதில்லை, பச்சோலி பயிரிட்ட காட்டில் ஆடு மேய்கின்றது. ஆனால் அவைகள் பச்சோலி செடிகளை தீண்டுவதில்லை.
குறைந்த அளவு நீர் போதும். ஆனால் வெறும் இலைகளாகவோ அல்லது வேர்களாகவோ விற்றால் மதிப்பு மிகக்குறைவு. ஆனால் எண்ணையாக மாற்றினால் மதிப்பு அதிகம். அதனை எண்ணையாக மாற்றி மதிப்புக் கூட்ட கொதிகலன் (Oil extraction Unit) தேவை. இதனை சிறு மற்றும் குறு விவசாய்கள் நிறுவுவது கடினம். காரணம் நிறுவுவதற்கான செலவு மற்றும் வருடம் முழுவதும் நாம் அதனை இயக்க தேவையான கச்சாப் பொருள் (Raw material) வேண்டும். இல்லையேல் நஷ்டம் வரும்.

இதனை கருத்தில் கொண்டு கீரீன் கோவை சிறு மற்றும் குறு விவசாய்கள் வாழ்க்கை தரத்தை முன்னேற்ற இந்த கொதிகலன்( S.S என்னும் துருபிடிக்காத எஃகு கொண்டு )அமைப்பை நிறுவியுள்ளனர். கீரீன் கோவை அமைப்பின் திரு. இராமன்ஜீ அவர்கள் கொதிகலன் முன்.
இதனால் எண்ணையின் தரம் மிக நன்றாக இருக்கும். இதனால் கோவை மற்றும் ஆனைக்கட்டி பகுதி விவசாய்கள். கீழ் கண்ட பயிர்களை உற்பத்தி செய்து இந்த கொதிகலனை உபயோகித்து மதிப்புக்கூட்டி தங்களின் விவசாய வருமானத்தை மேம்படுத்தலாம்.

1. ரோஸ் மேரி Rosemary (Rosmarinus officinalis)
2. எலுமிச்சம் புல். Lemon Grass (Cymbopogon citratus)
3. பச்சோலி Patcholi (Pogostemon Cablin)
4. மருகு Dhavanam (Artemisia pallens)
5. திருநீற்றுப் பச்சிலை (Ocimum Basilicum)
6. துளசி Tulsi (Ocimum Sanctum)
7. சிட்ரோனல்லா Citronella (Cymbopogon winterianus)
8. பாமரோசா Pamarosa (Cymbopogon martini)

மேலும் விபரங்கள் பெற:
திரு. இராமன்ஜீ. புரோஜக்ட் அதிகாரி
“கீரீன் கோவை”
ஆனைக்கட்டி
தமிழ்நாடு

அலைபேசி : 94426-46713

Friday, February 27, 2009

வேதனையும், சாதனையும்.

பொறுப்பற்ற சில இளைஞர்களால் வேதனை:
பொதுவாக கோடைகாலம் ஆரம்பித்தாலே வனத்துறை மிக எச்சரிக்கையுடன் இருப்பார்கள் காரணம் நீர் பற்றாக்குறை காரணமாய் வனவிலங்குகளின் பாதுகாப்பு மற்றும் வனத்தில் ஏற்படுகின்ற “தீ”. இந்த தீ இயற்கையாக ஏற்பட்டால் ஜீரணித்துக் கொள்ளலாம். ஆனால் இந்த தீ சில சமூக பொறுப்பற்ற அதிலும் படித்து வேலை செய்யும் இளைஞர்களால் பொழுதுபோக்கிற்காக ஏற்படுவதை ஜீரணித்துக் கொள்ள முடிவதில்லை. 24-02-09 அன்று செய்தியாக வந்தது இதுதான் ஊட்டி - கல்லட்டி சாலையில் 25 வது U வளைவில் அருகிலுள்ள பகுதிக்கு தீ வைத்து அந்த வழியே சென்ற நபரை அணுகி தீக்கு முன் தாங்கள் இருப்பது போன்று புகைப்படம் எடுக்க அணுகியுள்ளனர். ஆனால் பொறுப்புள்ள அந்த இளைஞர் இது தவறு என்று கூறி மறுத்துவிட்டு உடனடியாக செயல்பட்டதால் சேதத்தை சுமார் 2 ஹெக்டர் அளவிற்கு குறைக்க முடிந்தது.
ஒரு பொறுப்புள்ள முதியவரின் சாதனை:
76 வயதான திரு.ஐய்யசாமி கடந்த 25 ஆண்டுகளாக வேட்டுவன் புதூர் கிராமத்தில் சொற்ப வருமானத்தில் சுமார் 10,000 மரங்களுக்கு மேல் நட்டு பராமரித்துள்ளார். இப்போது அவைகள் விறகுக்காகவும், வீட்டு உபயோக பொருட்களுக்காகவும் வெட்டப்படுவதை பற்றி மிகவும் வருத்தமடைகிறார். இதனைப் பாதுகாக்க மாவட்ட ஆட்சியரிடமும் மனு கொடுத்துள்ளார்.

இன்றைய இளைஞர்களிடம் சுற்றுச் சுழல் பற்றி அதிகம் தெரிவிக்கபட வில்லையா? அல்லது செல்வச் செழிப்பால் பொறுப்பின்றி இருக்கின்றார்களா? இவர்களுக்கு சுற்றுச் சுழல் பற்றி அறிவுறுத்த வேண்டியது நமது கடமை. எனவே உங்களின் மேலான ஆலோசனைகளை பின்னூட்டம் மூலம் தெரிவியுங்கள். வலைப் பூக்கள் மூலம் நம் கடமையை செய்வோம்.
Source: “The Hindu

Thursday, February 26, 2009

மர மேளா, கோவை. (Tree Mela, coimbtore).

தமிழ்நாடு வன வரிவாக்க மையமும், இந்திய வன ஆராய்ச்சி மற்றும் மர பெருக்க மையமும் இணைந்து “மர மேளா” என்னும் மரம் பற்றிய விழாவை கொண்டாட உள்ளனர். மரவகைகள், சாகுபடி முறை, சந்தை படுத்துதல், வருமானம் என மரம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி மூலம் நடைபெறும். இந்த நல்ல வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் வளமான எதிர்காலத்தை தமிழகம் பெற இந்த வலைப் பூ விரும்புகிறது.

இடம்: இந்திய வன ஆராய்ச்சி மற்றும் மர பெருக்க மையம்(IFGTB)
கௌலிபிரவுன் சாலை,
ஆர்.எஸ். புரம்,
கோவை.

நாள்: மார்சு மாதம் 7 மற்றும் 8 தேதிகள் (இரு நாட்கள்)

அனுமதி : இலவசம்.

தொடர்புக்கு : திரு.ரவிச்சந்திரன் IFS
துணை வனப் பாதுகாவலர் (விரிவாக்கம்)
இந்திய வன ஆராய்ச்சி மற்றும் மர பெருக்க மையம்(IFGTB)
கௌலிபிரவுன் சாலை,
ஆர்.எஸ். புரம்,
கோவை.
தொலைபேசி : 0422-2431540
அலைபேசி : 94862-41158.