Saturday, February 28, 2009

மக்கள் சேவையில் மீண்டும் “கீரீன் கோவை”

கோவை மாவட்டத்தை பசுமையாக மாற்ற மரங்களை உற்பத்தி செய்த “கீரீன் கோவை” அமைப்பு சிறு மற்றும் குறு விவசாய்களின் நலன் கருதி வாசனை செடிகளிலிருந்து எண்ணை எடுக்கும் கொதிகலனை (Oil extraction Unit) ஆனைக்கட்டி பகுதியில் நிறுவியுள்ளனர். ஆனைகட்டி அதன் சுற்றுபுறங்களில் வன மற்றும் வளர்ப்பு மிருகங்கள், பறவைகளால் விவசாயம் செய்வது சற்று கடினமே. சில பகுதிகள் மழை மறைவு பகுதியாக இருப்பது மேலும் விவசாயத்தை பாதிக்கின்றது.இதனை தவிர்க்க நாம் வாசனை தரும் பயிர்களை பயிர் செய்யலாம். மிருகங்கள் பறவைகள் தீண்டுவதில்லை, பச்சோலி பயிரிட்ட காட்டில் ஆடு மேய்கின்றது. ஆனால் அவைகள் பச்சோலி செடிகளை தீண்டுவதில்லை.
குறைந்த அளவு நீர் போதும். ஆனால் வெறும் இலைகளாகவோ அல்லது வேர்களாகவோ விற்றால் மதிப்பு மிகக்குறைவு. ஆனால் எண்ணையாக மாற்றினால் மதிப்பு அதிகம். அதனை எண்ணையாக மாற்றி மதிப்புக் கூட்ட கொதிகலன் (Oil extraction Unit) தேவை. இதனை சிறு மற்றும் குறு விவசாய்கள் நிறுவுவது கடினம். காரணம் நிறுவுவதற்கான செலவு மற்றும் வருடம் முழுவதும் நாம் அதனை இயக்க தேவையான கச்சாப் பொருள் (Raw material) வேண்டும். இல்லையேல் நஷ்டம் வரும்.

இதனை கருத்தில் கொண்டு கீரீன் கோவை சிறு மற்றும் குறு விவசாய்கள் வாழ்க்கை தரத்தை முன்னேற்ற இந்த கொதிகலன்( S.S என்னும் துருபிடிக்காத எஃகு கொண்டு )அமைப்பை நிறுவியுள்ளனர். கீரீன் கோவை அமைப்பின் திரு. இராமன்ஜீ அவர்கள் கொதிகலன் முன்.
இதனால் எண்ணையின் தரம் மிக நன்றாக இருக்கும். இதனால் கோவை மற்றும் ஆனைக்கட்டி பகுதி விவசாய்கள். கீழ் கண்ட பயிர்களை உற்பத்தி செய்து இந்த கொதிகலனை உபயோகித்து மதிப்புக்கூட்டி தங்களின் விவசாய வருமானத்தை மேம்படுத்தலாம்.

1. ரோஸ் மேரி Rosemary (Rosmarinus officinalis)
2. எலுமிச்சம் புல். Lemon Grass (Cymbopogon citratus)
3. பச்சோலி Patcholi (Pogostemon Cablin)
4. மருகு Dhavanam (Artemisia pallens)
5. திருநீற்றுப் பச்சிலை (Ocimum Basilicum)
6. துளசி Tulsi (Ocimum Sanctum)
7. சிட்ரோனல்லா Citronella (Cymbopogon winterianus)
8. பாமரோசா Pamarosa (Cymbopogon martini)

மேலும் விபரங்கள் பெற:
திரு. இராமன்ஜீ. புரோஜக்ட் அதிகாரி
“கீரீன் கோவை”
ஆனைக்கட்டி
தமிழ்நாடு

அலைபேசி : 94426-46713

No comments: