Wednesday, November 10, 2010

சில ஆப்பிரிக்க நாடுகளில் (Sub-Saharan Africa ) மழைநீரை மட்டுமே நம்பி நடக்கும் இயற்கை விவசாயம். மழையளவு 200 மிமீ முதல் 300 மிமீ.

திருமதி. V. மஞ்சுளா M.Sc., M.Phil.
படிப்பதிற்கு ஏதோ கதை என்று நினைக்கத் தோன்றும். செப்டம்பர் மாதம் எரிடீரியா (வடகிழக்கு ஆப்பிரிக்கா ) நாட்டின் ஹமெல்மாலோ விவசாய கல்லூரியில் பணியாற்றும் திருமதி. V. மஞ்சுளா M.Sc., M.Phil. அவர்களின் ஆப்பிரிக்க விவசாயம் பற்றிய உரையையும் பின்பு அதைப் பற்றி உரையாடவும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களது விவசாய முறை எளிமையாகவும் உபோகமாகவும் இருப்பதால் முக்கியமானவைகளை மாத்திரம் உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்.
மரங்களுடன் கூடிய விவசாயம்
இயற்கை  மற்றும் வாழ்கை முறை :

சஹாரா பாலைவனத்தின் தாக்கம் (Sub-Saharan Africa )இருப்பதால் இந்த பகுதிகள் மிகுந்த வறட்சியுடன் மழையளவு மிக குறைவாக உள்ளது. ஆனால் விவசாயமும் நடைபெறுகிறது. பொதுவாக ஆண்கள் கட்டாய இராணுவ சேவைகளுக்கு செல்வதால் 95% பெண்களாலும் குழந்தைகளாலும் விவசாயம் பராமரிக்கப்படுகிறது. பொருளாதார சிக்கல்கள் இருப்பதால் செயற்கை உரம், பூச்சிக் கொல்லி தவிர்க்கபடுகிறது. விதைகளும் பாரம்பரிய முறைபடி சேமிக்கப்பட்டு உபயோகப்படுத்தபடுகிறது. உழவு செய்யப்படுவதில்லை. மூடாக்கு வெகுவாக உபயோகத்தில் உண்டு. பணப் பயிர் இல்லை. கிடைக்கின்ற மழை நீரை பல முறைகளில் சேமித்து பல்வேறு பயன்கள் தரும் மர வளர்ப்பை மையமாக வைத்து விவசாயம் செய்கிறார்கள்.
மரங்களுக்கிடையே உணவுப் பயிர்கள்
குறிப்பிட்ட அகலத்திற்கு மரங்களை நட்டு இடையே உணவு பயிர்களை ( Alley Cropping )பயிர் செய்கிறார்கள். அதுவும் தனிப்பயிராக (Mono Crop) இல்லாமல் பல வகை (Mixed Crops) பயிர்களை சுழற்சி முறையில் செய்கிறார்கள். மரத்தின் இலைகளும், குச்சிகளும் மூடாக்கு இட பயன்படுகிறது பின்பு அதுவே உரமாகின்றது.


விதைகளைக் கூட ஜேப் ப்ளான்டர் ( Jab Planter ) என்ற எளிய கருவி மூலம் உரத்துடன் விதைக்கிறார்கள்.
இது ஏறக்குறைய 17 வது நூற்றாண்டில் தென் அமெரிக்காவில் புழக்கத்தில் இருந்ததின் நவீன வடிவம். எண்ணிப் பார்த்தால் 925 -950 மிமீ மழை பெறும் தமிழகத்தில் விவசாயம் போராட்டமாக மாறியுள்ளது. பலருக்கும் வேறுபட்ட கருத்துக்கள் இருக்கும் பின்னூட்டம் மூலம் தெரிவித்தால் எல்லோருக்கும் உபயோகமாக இருக்கும்.
PHOTOS SOURCE : Mrs. V. Manjula M.Sc.,M.Phil

Saturday, November 6, 2010

காளான் வளர்ப்பு - ஒருநாள் பயிற்சி

கிராம புறங்களில் மழை காலங்களில் இயற்கையாக காளான் தோன்றும் அவற்றை சேகரித்து உண்பார்கள். ஆனால் இன்று அவற்றை வருடம் முழுவதும் மிக சிறிய இடத்தில் மற்ற காய்கறிகளைப் போல் வளர்க்க முடியும். உணவிற்கான காளான்கள் மட்டுமின்றி மருத்துவ குணமுடைய காளான்களும் உண்டு. விலை மற்றும் தேவையின் அடிப்படையில் மிகுதியாக நகர்புறங்களில் சந்தை வாய்ப்பு உள்ளது. விரைவாக கெட்டுவிடும் என்பதால் வளர்ப்பிடம் நகர்புறத்தின் அருகில் இருப்பது நலம். அதற்கான ஒருநாள் பயிற்சி சென்னையில் நடத்துகிறார்கள். ஓய்வு நேரம் மட்டுமே போதும் என்பதால் வீட்டிலிருக்கும் பெண்கள், மாணவர்கள், முதியோர், சுய உதவி குழுக்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் இப்பயிற்சியை மேற்கோள்ளலாம்.


தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி :

பேராசிரியர் மற்றம் தலைவர்
நகர்ப்புறத் தோட்டகலை வளர்ச்சி மையம்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம்
44, 6 வது அவென்யூ அண்ணா நகர்,
சென்னை 600 040

தொலைபேசி 044-2626 3484, 044 - 4217 0506

Monday, November 1, 2010

வடகிழக்கு பருவ மழையும், வெட்டிவேரும்..

வடகிழக்கு பருவ மழைதான் தமிழகத்தை பொறுத்தவரையில் அதிகமாக நீர் தேவையை பூர்த்தி செய்கிறது. குறைந்த நாட்களில் அதிக மழை பொழிவை தந்து இயல்பு வாழ்கையை பாதிக்கிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டம். ஆவணப்படுத்தபட்ட 1865 ஆம் ஆண்டு முதல் வடகிழக்கு பருவ மழையின் போதுதான் சேதம் ஏற்படுகிறது.

நீலகிரி சேதம் 1865 ஆண்டு முதல்

வெட்டிவேர் ஒரு நிரந்தர தீர்வினை தர இயலும் ஆனால் அதற்கான முயற்சிகளை எடுப்பதில்லை. இது பற்றி அங்குள்ள பிரபலமான நபர் ஒருவருடன் உரையாடிய போது வெட்டிவேர் பரவி மலையின் அழகை கெடுத்துவிடும் என்றார். தென்இந்திய வகை வெட்டிவேருக்கு முளைப்புத் திறன் இல்லை என்றாலும் அவர் வெட்டிவேரை உபயோகிக்க விரும்பவில்லை. அவர் பார்த்தீனியம், சீமைக்கருவேல் பட்டியிலில் இதனையும் வைத்திருந்தார்.



நம் நாட்டிலிருந்து அறிமுகமான வெட்டிவேர் இன்று கீழைநாடுகளில் சிறப்பாக உபயோகிப்பதை பார்க்கும் போது மனம் மகிழ்ந்தாலும் சுற்றுச்சுழலுக்கும், விவசாயத்திற்கும் அதிகம் பயன்படும் நமது வெட்டிவேரை நாமே முழுமையாக உபயோகிக்காமல் இருப்பது மன வருத்தத்தை தருகிறது. கீழைநாடு ஒன்றில் எடுக்கப்பட்ட இரு விவசாயிகள் பற்றிய மேலேயுள்ள அனிமேஷன் படம் விளக்கம் தரும்.