Friday, June 27, 2008

மரம் வளர்க்க பாரத ஸ்டேட் வங்கி கடனுதவி.

பெருமரம்/பீநாரி/பீ மட்டி மரம் வளர்க்க சந்தை வாய்ப்புடன் கடன் வழங்க பாரத ஸ்டேட் வங்கியும், வளர்ந்த மரத்தை வாங்க குடியாத்தம் வாசன் மேக்வின் நிறுவனமும் முன் வந்துள்ளது. விவசாய கடன் வழங்குவதில் நல்ல மாற்றம் என்று கூறலாம். காரணம் அறுவடை நாளில் ரூ.2200/- அல்லது மார்கெட் விலை எது அதிகமோ அதன்படி விலை தர ஒப்பந்தம் செய்துள்ளார்கள் என்பது மகிழ்ச்சியான செய்தி.

மரத்தின் பெயர்...........: பெருமரம்/பீநாரி/பீ மட்டி
தாவரவியல் பெயர்....: AILANTHUS EXCELSA
காலம்........................: 7 ஆண்டுகள்
பயன்படும் தொழில்....: தீக்குச்சி தாயாரிப்பு

கடன் விபரம், அளவு:-
பங்கு தொகை தவிர்த்து தவணைக் கடனாக ஏக்கருக்கு இறவையில் ரூ.31,000/- மானாவாரியல் ரூ.22,500 வழங்கப்படும். கடன் தொகை ரூ.50,000/- வரை பிணையம் (நில அடமானம்) இல்லை. செலவினங்களுக்கேற்ப கடன் தொகை வருடா வருடம் வழங்கப்படும். கடனை ஒரே தவணையாக 7 ஆம் ஆண்டு இறுதியில் செலுத்தவேண்டும்.

உற்பத்தியும் தேவையும் (தமிழ் நாடு):-
இந்தியாவின் தீப்பெட்டித் தேவையில் 95% மரக்குச்சியும், 5% மெழுகு குச்சியாகவும் உள்ளது. இந்த 95% மரக்குச்சி உற்பத்தியில் 80% தமிழ் நாட்டில் நடைபெறுகிறது. ஒரு மாத உற்பத்திக்கு சுமார் 10,000 டன் மரம் தேவை. இத்தேவையைப் பூர்த்தி செய்ய நம்மை விட பரப்பளவில குறைந்த கேரளாவிலிருந்து 80%, கர்நாடகாவிலிருந்து 3%, மீதமுள்ள 17% மட்டுமே தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. மற்ற மாநிலங்களிலிருந்து இறக்குமதி வருங்காலங்களில் சற்று கடினமே. மேலும் உற்பத்தி செலவு கூடுகிறது. தீப்பெட்டி தவிர பேக்கிங் செய்ய பெட்டியாகவும் பயன்படுகிறது. எனவே இதன் தேவை என்பது முக்கியமானது.
வளரியல்பு:-
குறைந்த நீர் போதுமானது.
குறைந்த வெப்பம் 8°c-12.5°c
அதிக வெப்பம் 45°c-47.5°c
வறட்சியிலும் நன்கு வளரும்
அதிக பராமரிப்பு தேவையில்லை.
இதன் இலைகளை ஆடு,மாடுகள் தீண்டாது.
முதல் 4-5 ஆண்டுகள் ஊடுபயிர் செய்யலாம்.
ஒரு முறை பயிரிட்டால் திரும்ப வெட்டலாம்
வணிக நோக்கில் வளர்க்கும் போது கவனிக்கவேண்டியது.
பக்ககிளைகள் தவிர்த்து நேராக வளர்க்க வேண்டும்.
வெட்டியவுடன் 3 நாட்களுக்குள் தொழிற்சாலைக்கு
அனுப்பினால் எடைக் குறைவு நஷ்டம் வராது.
சுற்றழவு குறைந்தது 18" (அங்) இருக்க வேண்டும்.
15 நாட்களுக்குள் தொழிற்சாலைக்கு அனுப்ப வேண்டும்
இல்லயேல் தீக்குச்சி செய்யப் பயன்படாது.
நன்மைகள்.
தரிசு நிலமும் பயன்பாட்டிற்கு வருகிறது.
தமிழகத்தின் 17% வனப்பரப்பை மேலும் கூட்டலாம்.
கிராமப் புற வேலை வாய்ப்பு கூடுகிறது.
முக்கிய தொழிலுக்கு கச்சாப் பொருள்.
சுற்றுச் சுழல் மேம்படுகிறது.
விவசாய வரவு கூடுகிறது.

மேலும் விபரங்கள் பெற
வாசன் மேக்வின்
நெ. 21,புது தெரு, போஸ்பேட்டை
குடியாத்தம்
வேலூர் மாவட்டம்.
தொலைபேசி. 04171-320416,222251,320560
அல்லது
அருகிலுள்ள பாரத ஸடேட் வங்கிக் கிளைகள்.
வனம் அழிந்தால் அது வறட்சியின் துவக்கம்.
வனம் வளர்ந்தால் அது வளமையின் துவக்கம்.
Source : பாரத ஸடேட் வங்கிக் கையேடு மற்றும் வாசன் தீக்குச்சி தொழிற்சாலை+ வனக்கல்லூரி Mtp வழங்கிய நூல்.
படம் உதவி :திரு. ராஜன்.

No comments: