Friday, March 11, 2011

இந்த வருட " உலக நீர் நாள் " சின்னம்



மேலேயுள்ள படம் இந்த வருட " உலக நீர் நாள் " சின்னம். நகரங்களுக்கு தண்ணீர் என்ற தலைப்பில் கொண்டாடப்படுகிறது. படத்திற்கான   HTML Code கீழே உள்ளது . பதிவர்கள் இச்சின்னத்தை தங்களின் வலைப்பூக்களில் இட்டு தண்ணீரின் முக்கியத்துவத்தை பிரபலபடுத்த அன்பாய் கேட்டுக் கொள்ளுகிறேன்.

<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhP2n-Y8MjiLCmSf7g08GscA-HjuWVbKLPtar5dhz55LMzDSsPWP7nXnE_T1tqLQaLg7r7JFC-w9Je2CHloeRrDgW83qk8TMyGTRANjHXbAhBtvAuNNBWM0Rc6lnHT5mfKnbuuxYE_UMlE/s1600/wwd11+copy.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="250" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhP2n-Y8MjiLCmSf7g08GscA-HjuWVbKLPtar5dhz55LMzDSsPWP7nXnE_T1tqLQaLg7r7JFC-w9Je2CHloeRrDgW83qk8TMyGTRANjHXbAhBtvAuNNBWM0Rc6lnHT5mfKnbuuxYE_UMlE/s320/wwd11+copy.jpg" width="200" /></a></div>

Monday, March 7, 2011

மரங்களை நேசித்த மாமனிதர் மதிப்பிற்குரிய “அய்யாசாமி” அய்யா அவர்கள் இயற்கை எய்தினார்.


எந்தவித எதிர்பார்ப்புமின்றி இந்த பூமியை பசுமைபடுத்தி நாம் வளமாக வாழவேண்டுமென்று   தன் வாழ்நாளில் 3000க்கும் மேற்பட்ட மரங்களை நட்டு வளர்த்த மரங்களின் தந்தை சத்தியமங்கம் ஏழூர் அய்யாசாமி”  அய்யா  அவர்கள் இன்று ( 07-03-2011 ) காலை இயற்கை எய்தினார்.  அவர் மறைந்தாலும் அவர் நட்டுச் சென்ற மரங்கள் ஆயிரமாண்டுகள் அவர் கதை பேசும். ஆழ்ந்த அஞ்சலிகளை உங்கள் சார்பாகவும் இவ்வலைப் பூவின் சார்பாகவும் அவர் பாதத்தில் சமர்பிக்கிறேன். 

மேலும் படிக்க திரு. கதிர் அவர்களின் 

Saturday, March 5, 2011

வீடுகளில் போன்சாய் வளர்ப்பு - - ஒருநாள் பயிற்சி.


இந்திய பொருளாதார வளர்ச்சியில் பல புதிய பொழுதுபோக்குகள் நடுத்தர, மேல்நடுத்தர மக்களிடம் தற்சமயம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அவற்றுள் ஒன்று போன்சாய் வளர்ப்பு. சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் இவை மிக பிரபலம். இந்தியாவில் வீடுகளில் பூஜை அறை போன்று  ஜப்பான் வீடுகளில்  டோகோனோமா” (Tokonoma) என்றழைக்கப்படும் வழிபடும் இடங்களில் போன்சாய் மரங்கள் வளர்க்கப்பட்டு அவர்களது இறைவழிபாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றது. அந்த அளவிற்கு அங்கு போன்சாய் பிரபலம் பெறுகிறது.

இக்கலைக்குத் தேவையான   தாவர வகை, தேவையான மண்வகை, ஊட்டசத்து, நோய், பல்வேறு வகையான வளர்ப்பு முறைகள் (Different styles of bonsai ) போன்றவைகளை தெரிந்து கொண்டால்  சிறப்பாக நாமே போன்சாய் மரங்களை வளர்க்கலாம். இதற்கான ஒருநாள் பயிற்சியை நகர்ப்புறத் தோட்டகலை வளர்ச்சி மையம் வழங்குகிறார்கள். பங்கேற்று பயன் பெறுவீர்.
தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி :
பேராசிரியர் மற்றம் தலைவர்,
நகர்ப்புறத் தோட்டகலை வளர்ச்சி மையம்,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம்,
44, 6 வது அவென்யூ அண்ணா நகர்,
சென்னை 600 040.

தொலைபேசி 044 - 2626 3484; 044 - 4217 0506

போன்சாய்  புகைப்படங்களைக் காண கீழ்கண்ட தொடர்பை உபயோகியுங்கள்.
போன்சாய் மரங்களின் புகைப்படங்கள்