2009 மே மாதம் 22 தேதியிலிருந்து 27 வரை அறிவைத்தேடும் நடைபயணம் திருச்சி மாவட்டம் துறையூர் தாலூக்கா பச்சைமலையில் நடைபெறும். இது மணலோடை யிலிருந்து பரத்தால், டாப் செங்காட்டுப்பட்டி வரை 5 நாட்கள் நடைபெறும். குறிப்பாக மூலிகைகள் பற்றி அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பு. தாவரவியல் மாணவர்களுக்கும், பாரம்பரிய பச்சிலை வைத்தியத்தில் ஆர்வமுள்ளவர்களுக்கும் பெரிதும் உதவும். விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.
தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி :-
சித்த வைத்தியர். என்.பி. பெரியசாமி,
பச்சைமலை டிரஸ்ட்
154/ 54 ஏ - தியாகிசிங்காரவேல் தெரு,
துறையூர்
திருச்சி மாவட்டம் 621 010
தொலைபேசி எண் : 04327 - 222426
செல் : 99432 - 34363
பெ. விவேகானந்தன் ( ஆசிரியர் )
நம்வழி வேளாண்மை.
தொலைபேசி எண் : 0452- 2380082 ; 2380943
Thursday, April 23, 2009
Wednesday, April 22, 2009
புவி தினம் - ஏப்ரல் 22
Monday, April 20, 2009
நாட்டுக் கோழி, ஆடு வளர்ப்பு - ஆலோசனை மற்றும் பயிற்சி.
ஏழை, எளிய மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் நாட்டுக் கோழி, ஆடு வளர்ப்பு முக்கிய பங்கு வகிக்கின்றது. பாரம்பரியமாக வளர்த்தாலும் அதற்கான உணவு பொருட்களில் மாற்றம், புதிய நோய்கள் (பறவை காயச்சல் போன்றவை), வளர்த்தும் முறைகள், இனம் போன்றவை லாபத்தை நிர்ணயிக்கின்றன. தற்சமயம் மிக லாபகரமாக நாட்டுக் கோழி, ஆடு வளர்ப்பு உள்ளது. ஆனால் அதற்கான வழிகாட்டுதல் ???
அண்மையில் கோவையில் நாட்டுக் கோழி, ஆடு வளர்ப்பு பயிற்சி தருவதற்காக வந்திருந்த திரு.ராஜ் டேனியல் B.Sc அவர்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நீண்ட கால அனுபவமிக்க இவர் காந்திகிராம் கிராமிய பல்கலைகழகம், காந்திகிராம்,(திண்டுக்கல்) கிராம மேம்பாட்டு திட்டங்களில் பணியாற்றியவர். மேலும் பல்வேறு நிறுவனங்களில் ஆலோசகராக, வழிகாட்டியாக, பயிற்சியாளராக, உள்ளார்.
கொட்டில் முறை ஆடு வளர்ப்பு
நாட்டு கோழி வளர்ப்பு ரன் அன்ட் பென் முறை
நாய்கள் வளர்ப்புக்கும் விற்பனைக்கும் பயிற்சி
வெண்பன்றி வளர்ப்பு
புறாக்கள், ஜப்பானிய காடை, இறைச்சி முயல்கள் வளர்ப்பு
போன்றவற்றிலும் அனுபவம் பெற்றவர்.
1983 ஆண்டு புலம்பெயர்ந்த இவர் தமிழக கிராம முன்னேற்றத்திற்கு தன்னை அர்பணித்துள்ளார் என்றால் அது மிகையில்லை. மிக சுறுசுறுப்புடன் பல்வேறு இடங்களுக்கு சென்று பயிற்சி, ஆலோசனை தருகிறார். இருப்பினும் ஏழை, எளிய மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் நாட்டுக்கோழி, ஆடு வளர்ப்பு முக்கிய பங்கு வகிப்பதால் இவர் அதற்கு முக்கியத்துவம் தருகிறார். தமிழக கிராமங்கள் இவரது செலவு குறைந்த எளிய வளர்ப்பு முறைகளை சிறப்பாக நடைமுறைப்படுத்தினால் கிராம வேலை வாய்ப்பு மற்றும் முன்னேற்றம் நிச்சயம் உண்டு.
தொடர்புக்கு:-
திரு.ராஜ் டேனியல் B.Sc
50/93, நாயக்கர் புது 2வது தெரு,
கிழக்கு கோவிந்தாபுரம்,
திண்டுக்கல் - 624 001
செல் : 96295 - 78183

கொட்டில் முறை ஆடு வளர்ப்பு
நாட்டு கோழி வளர்ப்பு ரன் அன்ட் பென் முறை
நாய்கள் வளர்ப்புக்கும் விற்பனைக்கும் பயிற்சி
வெண்பன்றி வளர்ப்பு
புறாக்கள், ஜப்பானிய காடை, இறைச்சி முயல்கள் வளர்ப்பு
போன்றவற்றிலும் அனுபவம் பெற்றவர்.
1983 ஆண்டு புலம்பெயர்ந்த இவர் தமிழக கிராம முன்னேற்றத்திற்கு தன்னை அர்பணித்துள்ளார் என்றால் அது மிகையில்லை. மிக சுறுசுறுப்புடன் பல்வேறு இடங்களுக்கு சென்று பயிற்சி, ஆலோசனை தருகிறார். இருப்பினும் ஏழை, எளிய மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் நாட்டுக்கோழி, ஆடு வளர்ப்பு முக்கிய பங்கு வகிப்பதால் இவர் அதற்கு முக்கியத்துவம் தருகிறார். தமிழக கிராமங்கள் இவரது செலவு குறைந்த எளிய வளர்ப்பு முறைகளை சிறப்பாக நடைமுறைப்படுத்தினால் கிராம வேலை வாய்ப்பு மற்றும் முன்னேற்றம் நிச்சயம் உண்டு.
தொடர்புக்கு:-
திரு.ராஜ் டேனியல் B.Sc
50/93, நாயக்கர் புது 2வது தெரு,
கிழக்கு கோவிந்தாபுரம்,
திண்டுக்கல் - 624 001
செல் : 96295 - 78183
Subscribe to:
Posts (Atom)