Sunday, April 12, 2009

18 லட்சம் மக்கள் கலந்து கொண்ட மரம் நடும் விழா.

ஒலிம்பிக் போட்டிகளினால் சுற்றுச் சுழலில் முன்னேற்றம் கண்ட பெஜிங் நகரம் அதனை பராமரித்துக் கொண்டு மேலும் வளர்ச்சியடைய சென்ற ஏப்ரல் 5ம் தேதி 18 லட்சம் மக்கள் தங்களின் ஜனாதிபதி மற்றும் தலைவர்களுடன் சேர்ந்து பெஜிங் நகரப் பகுதிகளில் மரங்களை நட்டியுள்ளனர். சுற்றுச் சுழல் மேம்படவும் பசுமையான தேசமாக மாறவும் 1981 ஆண்டு மரம் நடும் சட்டப்படி 11 - 55 வயதிலுள்ள சீன மக்கள் ஒவ்வொரு வருடமும் 3 லிருந்து 5 மரங்கள் வரை நட்டு வனப் பரப்பை அதிகப் படுத்த முடிவெடுத்துள்ளனர்.
Chinese President Hu Jintao (R) waters a newly planted maidenhair tree with a young pioneer in Beijing, April 5, 2009. (Xinhua Photo )
உலக அளவில் சிந்திப்போம், உள்ளூர் அளவில் செயல்படுவோம். மரம் நடுவோம் மழை பெறுவோம். மழை பெறுவோம், வளம் பெறுவோம்.
Source : Xinhua

Thursday, April 9, 2009

கரை ஒதுங்கும் திமிங்கலங்கள் -ஆஸ்திரேலியா

A dead long-finned pilot whale is carried away from a beach after it was stranded on a beach in Hamelin Bay, Western Australia, Monday, March 23, 2009. About 80 whales and dolphins were stranded Monday on a remote southwest Australian beach where authorities plan to truck the few survivors to a protected bay before attempting to launch them back to sea on Tuesday. (AP)
ஆஸ்திரேலியக் கடற்கரைகளில் திமிங்கலங்கள் கரை ஒதுங்குவது அதிகமாகி வருகிறது. அவற்றை மீண்டும் கடலில் கொண்டு போய் விடும் முயற்சியில் பல்வேறு அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் இவ்வாறு கரைஒதுங்கும் சம்பவங்கள் மேலும் அதிகரிக்க உள்ளது என்று ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கரையொதுங்குவதற்கு வெப்பமயமாதல் பிரச்சனைதான் காரணம் என்று அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள கடற்கரை ஒன்றில் கடந்த நான்கு மாதங்களில் மட்டும் 500க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. இவற்றில் பெரும்பாலானவை உயிரிழந்தன. 1920ஆம் ஆண்டிலிருந்து இவ்வாறு நிகழ்வது வாடிக்கையாகி விட்டாலும், அண்மையில் இந்த சம்பவங்கள் அதிகரித்து விட்டன. உணவைத்தேடி இடம் பெயர்வதால்தான் இந்தப் பிரச்சனை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

நன்றி: தீக்கதிர் 05-04-2009 படம் உதவி : வலைதளம்

Tuesday, April 7, 2009

நம்வழி வேளாண்மை - காலாண்டு இதழ்.

இன்றைய உலகமயத்தில் பத்திரிகைகள் எந்த துறை சார்ந்ததாக இருந்தாலும் வணிக நோக்கில்தான் தங்கள் சிந்தனைகளையும், செயல்பாடுகளையும் வெளிப்படுத்துகின்றன. ஆனால் நம்வழி வேளாண்மை இதற்கு விதிவிலக்கு. எந்தவித விளம்பரமும் இல்லாமல் இயற்கைவிவசாய உத்திகள், அனுபவ மூலிகைவைத்தியம், அடிமட்ட மக்களின் கண்டுபிடிப்புக்கள், பொக்கிஷமான பாரம்பரிய அறிவு, பிராந்திய விதைகள் மற்றும் தாவர வகைகள் என எல்லா பக்கங்களிலும் உபயோகமான செய்திகளை மாத்திரமே தாங்கி வருகின்றது. அவசியம் வாங்க வேண்டிய காலாண்டு இதழ்.

விவசாயிகள் / தனிநபர் வருட சந்தா ரூ.100/= ஆயுள் சந்தா ரூ.1000/=
ஆசிரியர் : பெ. விவேகானந்தன்
நம்வழி வேளாண்மை,
45,டி.பி.எம். நகர்,
விராட்டிபத்து,
மதுரை 625 010.
தொலைபேசி : 0452-2380082; 2380943
Email : vivekseva@dataone.in
================================
இதன் தொடர்பு ஆங்கில இதழ் : Honey bee
Prof. Anil Gupta,
Honey Bee,
Indian Institute of Management,
Vastrapur,
Ahmedabad-380 015
Email: honeybee@sristi.org